Link

ணக்கம் வருக வருக....

Pages

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

சட்டவிரோத வடிசாராய உற்பத்தியில் ஈடுபட்ட 11 பேர் கைது

03.08.2012.மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் வடிசாராய உற்பத்தியில் ஈடுபட்டுவந்த 11பேர் மாவட்ட ஹலால் திணைக்கள உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேறிய வெல்லாவெளி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட மண்டூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போதே நிலத்துக்கடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 110 லீற்றர் கசிப்பு மற்றும் கோடா கசிப்பு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பன மதுவரி அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன. .கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக குறித்த அதிகாரி மேலும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக