Link

ணக்கம் வருக வருக....

Pages

சனி, 18 ஆகஸ்ட், 2012

9 வயது சிறுவன் மீது பொலிசார் வழக்கு பதிவு


சனிக்கிழமை, 18 ஓகஸ்ட் 2012,
சாலையில் கற்களை வைத்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த சிறுவன் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியால்கோட் மாவட்டத்தை சேர்ந்தவன் முகமது ஆசாத்(வயது 9).
லாகூர் செல்லும் நெடுஞ்சாலையில், கற்களை அடுக்கி வைத்ததால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் ஆசாத் மீதும், இவனது உறவினர் காசிப் ஹூசைன் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிறுவனை தடுக்காத காரணத்துக்காக காசிப் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசாத் சிறுவன் என்பதால், அவன் கைது செய்யப்படுவதை தவிர்க்க சியால்கோட் மாவட்ட நீதிமன்றம், அவனுக்கு ஜாமின் வழங்கியுள்ளது. இந்த வழக்கு விசாரணை வரும் 28ஆம் திகதி நடைபெற உள்ளது