Link

ணக்கம் வருக வருக....

Pages

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்ய விசேட உயர் நீதிமன்றம்

 
 
04.08.2012.
இலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்ய விசேட உயர் நீதிமன்றமொன்று உருவாக்கப்பட உள்ளது.
குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை விதிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தை அமைப்பதற்கு தேவையான கட்டட வசதிகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுவர் துஸ்பிரயோகச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இவ்வாறு தனியான உயர் நீதிமன்றம் அமைக்கப்பட உள்ளதாக நீதி அமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக