Link

ணக்கம் வருக வருக....

Pages

புதன், 22 ஆகஸ்ட், 2012

தான் அழைத்தால் நித்தியானந்தா யாழ்ப்பாணம் வந்து நிச்சயம் தங்குவார் – கணவரைப் பிரிந்த யாழ் பெண்

22.08.2012.வலிகாமம் பகுதியில் நித்தியானந்தாவுக்கு ஆசிரமம் திறப்பதற்கு பெண் ஒருவர் அதீத முயற்சிகளில் ஈடுபடுவதாக் தெரியவருகின்றது. யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த குறிப்பிட்ட பெண் வெளிநாட்டில் தனது கணவருடன் முரன்பட்டு விட்டு இந்தியா சென்றதாகத் தெரியவருகிறது.
இதன் பின்னர் சில மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணம் வந்த குறிப்பிட்ட பெண் தனது வீட்டில் குடியிருந்த தனது அண்ணனை குடும்பத்துடன் துரத்தி விட்டு தற்போது அந்த வீட்டை பெருமளவு பணம் செலவு செய்து திருத்தி வருகின்றார். இவரது வீட்டில் திரும்பும் இடமெல்லாம் நித்தியானந்தாவின் கட்டவுட்டுகளால் அலங்கரித்துள்ள மேற்படி பெண் விரைவில் குறிப்பிட்ட வீட்டை ஆசிரமமாக மாற்றுவேன் என்று தெரிவித்துள்ளார்.
தான் நித்தியானந்தாவை நேரடியாகச் சந்தித்ததாக கூறி பரவசப்படும் இப் பெண் தான் அழைத்தால் நித்தியானந்தா யாழ்ப்பாணம் நிச்சயம் வந்து சில நாட்கள் தங்குவார் எனவும் தெரிவித்துள்ளார்