Link

ணக்கம் வருக வருக....

Pages

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

தடைகள் வரினும் டெசோ மாநாடு நடைபெறும்; ஏற்பாடுகள் பூர்த்தி என அறிவிப்பு

10.08.2012.
news டெசோ மாநாடு திட்டமிட்டபடி நாளை மறுநாள் நடைபெறும் எனவும் அதற்கான ஏற்பாமுகள் அனைத்தும் பூர்த்ததியடைந்துள்ளதாக மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடத்தத் திட்டமிட்டுள்ள டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. அத்துடன் மாநாட்டை சென்னையில் நடத்த அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளளது.

இதனையடுத்து மாநாடு நடைபெறுவதில் பல்வேறு இடையூறுகளும் நெருக்குதல்களும் எழுந்த நிலையிலும் மாநாட்டை நடத்துவதில் டெசோவின் ததலைவரும் தி.மு.க தலைவருமான கருணாநிதி உறுதியாக உள்ளார் என ராதாகிருஷ்ணன் இன்று சென்னையில் தெரிவித்திருக்கிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக