Link

ணக்கம் வருக வருக....

Pages

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

திருகோணமலை மொரவௌ பகுதியில் இன்று அதிகாலை வர்த்தக நிலையத்தில் கொள்ளை

.
BY.rajah.
செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2012,
 
திருகோணமலை மொரவௌ பொலிஸ் பிரிவிற்குட்ட ரொட்டவௌ பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு ஏராளமான பொருட்கள் கொள்ளையிடப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
12,000 ரூபா பெறுமதியான கைத்தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகள், பல பெறுமதியான பொருட்கள் மற்றும் 20,000 ரூபாவுக்கும் அதிகமான பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது..
கொள்ளையர்களை பொலிஸார் துரத்திச் சென்ற போது ஒருவரின் காலணி கழன்று விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என பொலிஸார் கூறுகின்றனர்.