Link

ணக்கம் வருக வருக....

Pages

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

காதலியின் மகனைக் குத்திக் கொன்றவன் கைது

10.08.2012.
ஜேர்மனியில் காதலியின் மகனை, காதலன் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் நள்ளிரவில் நடந்தது. மகனின் அலறலைக் கேட்டு விழித்த தாய், ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனைக் தூக்கி கொண்டு தெருவில் நின்று கொண்டு உதவி கேட்டு கதறினாள்.
அலறல் சத்தம் கேட்டு அண்டை வீட்டாளர் ஒருவர், பொலிசாருக்கு தகவல் கொடுத்தார். பொலிஸ் விரைந்து வந்து கொலைகாரனைப் பிடிக்க முயன்ற போது அவன் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டான்.
அவனுக்கு மயக்கமருந்து கொடுத்து பிடித்துச் சென்றனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் அதிகளவு ரத்தம் வெளியானதால் உயிரிழந்தான்.
அதன் பின், கொலையாளி மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவன் என்பதுவும், அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளான் என்பதுவும் தெரியவந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக