Link

ணக்கம் வருக வருக....

Pages

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

செவிப்பறை வெடித்து இளைஞன் பலி : ஹெட் போனால் வந்த வினை

31.08.2012.BY-rajah.
நற்பிட்டிமுனையில் கடந்த புதன்கிழமை (29.08.2012) இரவு ஹெட் போனில் பாடல் கேட்டுக்கொண்டிருந்த இளைஞன் ஒருவர் செவிப்பறை வெடித்து உயிரிழந்துள்ளார்.

மேற்படி சம்பவத்தில் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த அகமட் லெப்பை ரிப்னாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த இளைஞன் தனது லெப்டொப்பில் ஹெட்போனூடாக பாடல் கேட்டுக்கொண்டு வேலை செய்துகொண்டிருந்துள்ளார். பின்னர் ஹெட் போனுடேயே உறங்கியிருக்கிறார்.

மறுநாள் காலையில் சில மணிநேரம் கழித்தும் அறையிலிருந்து எழுந்து வெளியே வராமையினால் சந்தேகம் கொண்ட உறவினர்கள் அறைக்குள் சென்று பார்த்த போது காதில் இரத்தம் வழிந்த நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார்