| மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தகவல் |
|
பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு
நிரந்தர நியமனங்களை வழங்கும் நடவடிக்கைகளை தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாக பொது
நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பீ.பி.அபேகோன்
தெரிவித்துள்ளார்.
பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு அபிவிருத்து உத்தியோகத்தர் சேவை கொள்கைகளின் கீழ் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவிருந்தன. எனினும் இந்த கொள்கைகளுக்கு எதிராக சிலர் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் இதன் காரணமாக சட்ட நடவடிக்கைகள் நிறைவடையும் வரை அவர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் இதனால், பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட அனைத்து பட்டதாரிகளுக்குமான பயிற்சிக் காலத்தை மேலும் 6 மாதங்கள் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார் |
Link
▼
ணக்கம் வருக வருக....
▼
Pages
▼
