Link

ணக்கம் வருக வருக....

Pages

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

மன்னாரிலிருந்து அவுஸ்திரேலியா சென்ற பலரது நிலை தெரியவில்லை

04.08.2012.BYrajah.
மன்னார் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக அவுஸ்திரேலியா சென்ற பலரது நிலை இதுவரை என்னவென்று தெரியாதமையால் அவர்களுடைய குடும்பங்களும் உறவினர்களும் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் அவுஸ்திரேலியா செல்வதாகக் கூறிப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இவர்களில் பலர்அவுஸ்திரேலியா சென்றடைந்த நிலையில் தமது குடும்பத்தாருடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.
ஆனால் பெரும்பாலானோர் இதுவரை எந்தவிதத் தொடர்புகளும் இன்றி இருப்பதாக அவர்களது உறவினர்களும், குடும்பத்தினரும் அச்சம் வெளியிட்டுள்ளனர். பலர் கடலில் வைத்துக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல இலட்சம் ரூபா பணத்தைக் கொடுத்து படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.