Link

ணக்கம் வருக வருக....

Pages

புதன், 5 செப்டம்பர், 2012

இலங்கையைர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு: திருச்சி காட்டூரில் பரபரப்பு

04.09.2012.BY.rajah.வேளாங்கண்ணியில் நடந்த தேவாலயப் பெருவிழாவில் கலந்து கொள்ள இலங்கையில் இருந்து சென்றுள்ள பக்தர்கள் பயணித்த பஸ்கள் மீது கல் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் காட்டூரில் வைத்தே மேற்படி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து இப்பகுதியில் பெரும் பரபரப்புநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே திருச்சி பால்பண்ணை என்ற இடத்தில், இலங்கை பக்தர்கள் வந்த பஸ்ஸை வழிமறித்து மறியல் போராட்டம் செய்ய முயன்ற சுமார் 60 பேரை பொலிசார் கைது செய்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன