Link

ணக்கம் வருக வருக....

Pages

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன் கைது

 
04.09.2012.BY.rajah.அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முகவரை சந்திக்கச் சென்ற இலங்கை அகதி ஒருவரை தமிழக பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சியை சேர்ந்த நிரோஜன் (23) என தெரிவிக்கப்படுகிறது. இவர் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்துள்ளார்.
இவர் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் செல்வதற்காக, கரூரில் உள்ள முகவரை சந்திக்க கரூர் பஸ் நிலையத்தில் காத்திருந்தார். அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த கியூ பிரிவு பொலிசார், நிரோஜனை பிடித்து விசாரித்ததில், மண்டபம் அகதிகள் முகாமை சேர்ந்தவர் என தெரியவந்தது.
நிரோஜன் தற்போது மண்டபம், கியூ பிரிவு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்