Link

ணக்கம் வருக வருக....

Pages

வெள்ளி, 19 அக்டோபர், 2012

வாகை சூட வா படத்திற்கு இந்தியாவின் உயர்ந்த விருது

Friday, 19 October 2012, By.Rajah.
வாகை சூட வா படத்திற்கு இந்தியாவின் உயர்ந்த விருதான பனோராமா கிடைத்துள்ளது.
இயக்குனர் சற்குணத்தின் படைப்பான வாகை சூட வா படம் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய ஆழமான விழிப்புணர்வு படமாகும்.
தேசிய விருது பெற்ற இப்படம், தற்போது இந்தியாவின் உயர்ந்த விருதான பனோராமா விருதுக்கு தெரிவாகியுள்ளது.
இது குறித்து இயக்குனர் சற்குணம் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்தியாவின் பனோராமா விருத்துக்கு தெரிவானதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. பல்வேறு பிராந்திய மொழிகளில் தமிழில் தெரிவான ஒரே படம் வாகை சூட வா எனும் போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.
விருது கிடைக்கும் என்கிற நோக்கத்தில் எடுக்கப்பட்ட படமல்ல என்றாலும் பலரும் இந்த படத்திற்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என்று சொன்னார்கள்.
அது தற்போது நனவாகியிருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
மேலும் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் எனது தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
இந்த நேரத்தில் செங்கல் சூளைக் காரர்களுக்கு தேசிய கீதம் போல என்படத்தில் பாடல் கொடுத்த இசைஅமைப்பாளர் ஜிப்ரானுக்கும் கவிஞர் வைரமுத்துவுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்