| வெள்ளிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2012, By.Rajah( காணொளி.புகைப்படங்கள்) |
| அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு
முன்பே சிகாகோவில் பராக் ஒபாமா இன்று வாக்களித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 6ஆம் திகதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமாவும், எதிர் வேட்பாளர் மிட் ரோம்னியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவு நாளுக்கு முன்பே ஒருவர் தமது வாக்கை செலுத்த முடியும். இதனடிப்படையில் தேர்தலுக்கு 12 நாட்களுக்கு முன்பே சிகாகோவில் ஒபாமா இன்று வாக்களித்தார். இதற்காக தமது தேர்தல் பிரச்சாரத்தை 48 மணி நேரம் நிறுத்தி வைத்த ஒபாமா, இன்று காலையிலேயே வாக்குச் சாவடிக்குச் சென்று தனது வாக்கை பதிவு செய்தார். ஒபாமாவின் மனைவி மிச்செல் ஏற்கனவே 16ஆம் திகதி வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ![]() ![]() ![]() |
Link
▼
ணக்கம் வருக வருக....
▼
Pages
▼



