Link

ணக்கம் வருக வருக....

Pages

செவ்வாய், 9 அக்டோபர், 2012

இரண்டு வயது குழந்தையை கொடுமையாக தாக்கிய தாய் கைது

செவ்வாய்க்கிழமை, 09 ஒக்ரோபர் 2012,By.Rajah.அமெரிக்காவில் இரண்டு வயது குழந்தையை மிக கொடுமையாக தாக்கிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியை சேர்ந்தவர் எலிசபெத் எஸ்கலோனா. இவரது இரண்டு வயது குழந்தை சேட்டை செய்ததால், கையில் பசையை தேய்த்து சுவற்றில் ஒட்ட வைத்து விட்டார்.
அத்துடன் கையில் கிடைத்த பொருட்களை கொண்டும், வயிற்றில் எட்டி உதைத்தும் மிக கடுமையான முறையில் குழந்தையை தாக்கி உள்ளார்.
இதனால் குழந்தை கோமா நிலைக்கு சென்று விட்டது. நினைவு திரும்பிய பின் தன்னை தாக்கிய விதத்தை குழந்தை உறவினர்களிடம் தெரிவித்தது.
இந்த சம்பவம் தொடர்பாக எலிசபெத்தை பொலிசார் கைது செய்தனர். இந்த குற்றச்சாட்டில் இவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.