Link

ணக்கம் வருக வருக....

Pages

செவ்வாய், 20 நவம்பர், 2012

ஆடைப் பொதிகளுக்குள் மறைத்து கஞ்சா கடத்திய நபர் கைது

 
கேரள கஞ்சாவைக் கடத்திய நபர் ஒருவர், கட்டுநாயக்கா விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
15 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சாவை ஆடைப் பொதிகளுக்குள் மறைத்து, கடத்திய மாத்தளை பிரதேச நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 23 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
பெண்களின் இரவு ஆடைப் பொதிகளுக்குள் மறைத்தே சென்னையிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த நபர் இந்தியாவுக்கு அடிக்கடி சென்று வருபவர் என்றும் இவர் ஆடை வியாபாரத்தில் ஈடுபடுபவர் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக குறித்த நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக