Link
▼
ணக்கம் வருக வருக....
▼
Pages
▼
சனி, 21 ஜூலை, 2012
பெண்களை இரகசியமாக படம்பிடித்த செல்வந்தர் கொலை
குறித்த செல்வந்தர் இரகசிய கமரா மூலம் பெண் ஒருவரை படம் பிடித்து, மிரட்டி, தம்முடன் உறவு கொள்ளவில்லை என்றால், குறித்த படங்களை வெளியிடங்களுக்கு அனுப்புவதாக குறித்த பெண்ணை அச்சுறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அந்த பெண், தமது சகோதரனிடம் விடயத்தை கூறியதை அடுத்து, ஆத்திரமடைந்த சகோதரர் மற்றுமொருவருடன் கடைக்குள் வந்து, குறித்த செல்வந்தரை கொலை செய்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரும் ஏற்கனவே பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் என்று தெரிவிக்கப்படுகிறது
இதனைத் தொடர்ந்து, அந்த பெண், தமது சகோதரனிடம் விடயத்தை கூறியதை அடுத்து, ஆத்திரமடைந்த சகோதரர் மற்றுமொருவருடன் கடைக்குள் வந்து, குறித்த செல்வந்தரை கொலை செய்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரும் ஏற்கனவே பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் என்று தெரிவிக்கப்படுகிறது
ஆலய உண்டியல் திருட்டு: உடுவில் பகுதியில் சம்பவம்
21.07.2012. உடுவில் பகுதியில் உள்ள ஆலயத்தின் உண்டியலை
திருடிச்சென்ற திருடர்கள் அதில் இருந்த பணத்தை எடுத்து விட்டு நாற்பது ரூபாவுடன்
உண்டியலை வெற்றுக் காணியில் கைவிட்டுச்சென்ற சம்பவம் உடுவில் நாகம்மாள் கோவிலடியில்
இடம் பெற்றுள்ளது.வியாழக்கிழமை இரவு இந்த உண்டியல் உடைக்கப்பட்ட நிலையில் அம்பலவாணர் வீதியில் உள்ள தனியார் காணியில் இருந்து பொது மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சுன்னாகம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த உண்டியல் எந்த ஆலயத்தில் இருந்து திருடப்பட்டது என்ற விபரம் தெரிய வரவில்லை
மேல் கொத்மலை நீர் தேக்கதினுள் வேன் விழுந்து விபத்து (பட இணைப்பு
21.07.2012.ஹொலிரூட் பகுதியில் மேல் கொத்மலை நீர் தேக்க
திட்டத்திற்குள் வேன் ஒன்று இன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர்
காயமடைந்துள்ளனர்.தலவாக்கலையில் இருந்து ஹொலிரூட் நோக்கி பயணித்த மோட்டார் வண்டியும் ஹொலிரூட்டில் இருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த வேன் வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துள்ளாகியதில் வேன் வண்டி சுமார் 150 அடி பள்ளத்தில் நீர் தேக்கத்தினுல் வீழ்ந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த வேன் சாரதியும் மோட்டார் வண்டி ஓட்டுனரும் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தின் பின்னர் வேன் வண்டி நீர் தேக்கத்தினுள் கிடக்க மோட்டார் வண்டி பாதையில் கிடந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மனைவியின் நினைவாக இதய வடிவில் மலர் தோட்டம் அமைத்த முதியவர்
21.07.2012
காதல் மனைவி மும்தாஜ் நினைவாக பேரரசர் ஷாஜகான் ஆக்ராவில் தாஜ்மகால் அமைத்தார். இது இன்றளவும் உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது.
ஆனால் இது போன்ற பிரமாண்ட சாதனையை சாதாரண மனிதர்களால் உருவாக்க இயலாது. இருந்தபோதிலும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த வின்ஸ்டன் ஹோவிஸ் (வயது 70) என்ற விவசாயி தனது மனைவி ஜேனட் நினைவாக இருதயம் வடிவில் மலர் தோட்டம் ஒன்றை அமைக்கிறார்.
இதற்காக 6 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து ஆயிரக்கணக்கான மரங்களுக்கு மத்தியில் நறுமணம் வீசும் வெள்ளைநிற பூச்செடிகளை வளர்த்து வருகிறார். 70 வயதிலும் மனம் தளராமல் வின்ஸ்டன் இந்த பணியை அவரே செய்து வருகிறார்.








ஆனால் இது போன்ற பிரமாண்ட சாதனையை சாதாரண மனிதர்களால் உருவாக்க இயலாது. இருந்தபோதிலும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த வின்ஸ்டன் ஹோவிஸ் (வயது 70) என்ற விவசாயி தனது மனைவி ஜேனட் நினைவாக இருதயம் வடிவில் மலர் தோட்டம் ஒன்றை அமைக்கிறார்.
இதற்காக 6 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து ஆயிரக்கணக்கான மரங்களுக்கு மத்தியில் நறுமணம் வீசும் வெள்ளைநிற பூச்செடிகளை வளர்த்து வருகிறார். 70 வயதிலும் மனம் தளராமல் வின்ஸ்டன் இந்த பணியை அவரே செய்து வருகிறார்.










