காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி அஷ்ஷ_ஹதா பகுதியைச் சேர்ந்த றிமாஸா ஸீனத் என்ற 8 மாதக் குழந்தை ஆட்கொல்லி டெங்கு நோயினால் இன்று காலை 6.00 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளது.
டெங்கினால் பாதிக்கப்பட்ட குறித்த 8மாத குழந்தை கடந்த இரு நாட்களுக்கு முன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமையற்தொழிலில் ஈடுபடும் சபூர்தீன் என்பவரின் மகளே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
இவரது ஜனாஸா இன்று காத்தான்குடியில்; நல்லடக்கம் இன்று 10.00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக