அமெரிக்காவில் 15 வயது சிறுவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹென்றி என்ற 13 வயது இச்சிறுவன் 15 நிமிடங்களுக்கு முன் பேஸ்புக்கில் நான் சாகப்போகிறேன் என்று செய்தி வெளியிட்டுள்ளான்.
தற்கொலை செய்துகொள்வதை பார்த்த சிறுவனின் அக்கா உடனே பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளார்.
விரைந்து வந்த சிறுவனின் பெற்றோர் சிறுவனை அருகில் உள்ள மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சிறுவனின் இறப்பு குறித்து அவனது தாயார் லங்காசாயர் கூறுகையில், கடந்த வருடம் 25ம் திகதி கிரடிட் கார்ட் வாங்கினேன், எனக்கு தெரியாமலேயே எனது கிரடிட் கார்டு அட்டையை எனது மகன் எடுத்துள்ளான்.
கிரடிட் கார்ட்டை பயன்படுத்தி 422 டொலர்கள் விளையாட்டிற்காக இணையதளம் வழியாக பர்ச்சஸ் செய்துள்ளான். இந்த செய்தி எனக்கு நான்கு நாட்களுக்கு பின்னர் தான் தெரியவந்தது. இதனை நான் வன்மையாக கண்டித்தேன், அவன் இவ்வளவு பணத்தை செலவு செய்தது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் எனது மகன் நேற்று மாலை 4.20 மணி அளவில் நண்பர்களுடன் பேசிகொண்டிருந்தான், பின்னர் 5 மணிக்கு அழைத்தபோது அவன் வர மறுத்துவிட்டான் அவனது அக்கா மாடிக்கு சென்று அழைத்தபோது அவன் வர மறுத்துவிட்டான் என்றம் பின்னர் 6.30 மணி அளவில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது மிகவும் அதிர்சியை அளிக்கிறது



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக