Link

ணக்கம் வருக வருக....

Pages

செவ்வாய், 23 அக்டோபர், 2012

மதுபான போத்தல்களாலும் கற்களாலும்


செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012,By.Rajah.
மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படைஇலங்கைக் கடற்படையினர் தாம் தமிழக மீனவர்களை தாக்குவதில்லை என கூறிவந்தாலும் இன்றும் ராமேஸ்வர மீனவர்களை தாக்கியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 600க்கு மேற்பட்ட மீனவர்கள் 50க்கு மேற்பட்ட படகுகளின் மீன்பிடிக்க இன்று சென்றுள்ளனர்.
தனுஷ்கோடி- கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்து சுற்றி வந்த இலங்கை கடற்படையினர், மீன்வர்கள் மீது கற்களையும், வெற்று மதுபானப் போத்தல்களையும் வீசி தாக்கியுள்ளனர்.
மேலும் மீனவர்கள் வைத்திருந்த மீன்களையும், பறித்து விரட்டியடித்தனர் என்று கரைக்கு திரும்பியவர்கள் புகார் கூறியுள்ளனர் என தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.