| 04.09.2012.BY.rajah.கணனிகளின் அடிப்படையில்
மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் கற்றலும் மிக பிரதான பங்கை வகிக்கின்றது. இதனால்
அன்றாடம் பல்வேறு மென்பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
இவற்றின் அடிப்படையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள Collins Revision Algebra
எனும் மென்பொருளானது கணித செயற்பாடுகளை துல்லியமாக செய்துபார்ப்பதற்கும், மீட்டல்
செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது. இம்மென்பொருளில் 70 வகையான மீட்டல்களும், 290 பயிற்சிகள், மற்றுமு் 30 வீடியோ வழிகாட்டல்களையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. மேலும் அன்ரோயிட், அப்பிள் சாதனங்களில் செயற்படக்கூடியவாறு இம்மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இணையதள முகவரி |
Link
▼
ணக்கம் வருக வருக....
▼
Pages
▼
செவ்வாய், 4 செப்டம்பர், 2012
Collins Revision Algebra: மாணவர்களுக்கு அவசியமான மென்பொருள்
நகங்களை பராமரிப்பதற்கு
| 04.09.2012.BY.rajah.நகங்கள்
கைகளின் அழகில் மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே
அவற்றை பராமரிப்பது மிகவும் அவசியம்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அகத்தின் அழகை பிரதிபலிப்பதில்
நகத்துக்கும் பங்கு உண்டு. உடல் உள்ளுறுப்புகளில் ஏதாவது பாதிப்பு இருந்தால் நகம் அதை வெளிக்காட்டி விடும். எனவே நகங்கள் பாதிக்கப்பட்டால், அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். நகங்களை முறையாக பராமரிக்க பலர் அக்கறை எடுத்து கொள்வது கிடையாது. வைட்டமின் சி குறைபாடு இருந்தால் நகங்கள் பாதிப்படையும். சில டென்ஷன் பார்ட்டிகளுக்கும் குழந்தைகளுக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும். இது உடலுக்கு கேடு விளைவிக்க கூடியது. நகக்கணுக்களை நோய் கிருமிகள் அதிகம் தாக்கும். நகம் கடிக்கும் போது இந்த கிருமிகள் உடலுக்குள் செல்வதால் எளிதில் நோய்களுக்கு ஆளாக நேரிடும். உணவு சாப்பிடும் முன்பு கைகளை நன்கு கழுவ வேண்டும். பெண்கள் பாத்திரம் தேய்த்த பின்பு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் ரசாயனங்கள் நகக்கணுக்களில் தங்கிவிட்டால் நகங்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். அதேபோல் மலம் கழித்த பின்னரும் சோப்பு போட்டு கைகளை நன்றாக கழுவ வேண்டும். குழந்தை பருவம் முதலே இத்தகைய பழக்கங்களை வாடிக்கையாக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் நக பராமரிப்பில் தனிகவனம் செலுத்துவது அவசியம். கை நகங்களை போலவே கால் நகங்களையும் முறையாக பராமரிக்க வேண்டும். பெரும்பாலான நோய்தொற்றுகளுக்கு நகமே முக்கிய காரணமாக உள்ளது. எனவே நகங்களை முறையாக பராமரிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பேணலாம். பெடிக்யூர், மெனிக்யூர் என நகங்களை பராமரிக்க பிரத்யேக பராமரிப்பு முறைகளும் சாதனங்களும் உள்ளன. இதற்கென அழகு நிலையங்கள் இருந்தாலும் வீட்டிலேயே செய்து கொள்வதும் எளிது. வாரத்தில் 2 அல்லது 3 முறை இந்த பராமரிப்பு முறையை செய்து கொள்ளலாம். நகங்களில் அடிபட்டாலோ, சொத்தை, நகச்சுற்று போன்ற பாதிப்புகள் இருந்தாலோ மருத்துவ சிகிச்சை பெறுவதே பாதுகாப்பானது. மருத்துவ குணம் கொண்ட மருதாணி இலைகளை அரைத்து கைகளில் இடுவது நகங்களை பாதுகாப்பதோடு, உடலுக்கும் குளிர்ச்சி தரும். கடைகளில் பொடியாகவும், கூழாகவும் கிடைக்கும் மருதாணியில் மருத்துவ குணம் இருப்பதில்லை. தரமான நெயில் பாலிஷ்களை உபயோகிப்பது நகங்களுக்கு பாதுகாப்பானது. அடிக்கடி நகக்கணுக்களில் மிருதுவான பிரஷ் அல்லது துணிகளைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். நகம் வெட்டும் போது சதைப்பகுதி பாதிக்கப்படாமல் கவனமாக வெட்ட வேண்டும். நகங்கள் சிலருக்கு உடைந்து போகும். இதற்கு கால்சியம் குறைபாடுதான் காரணம். உணவில் அதிகம் கால்சியம் சேர்த்துக் கொள்வதாலும் மருத்துவர் பரிந்துரையின் பேரில் கால்சியம் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதாலும் இந்த பாதிப்பு சரியாகும். சர்க்கரை நோயாளிகள் இதில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். காய்கறிகள், பழங்கள் என ஊட்டச்சத்துள்ள சரிவிகித உணவு சாப்பிடுவதன் மூலம் நகங்களை பாதுகாக்கலாம் |
மம்மூட்டி படத்தில் கிரணின் ஆட்டம்

04.09.2012.BY.rajah.தமிழில் உருவாகும் புதுவை மாநகரம் படத்தில் கிரண் ஒரு பாட்டிற்கு குத்தாட்டம் ஆடியுள்ளார்.
நடிகை கிரண் மறுபடியும் கொலிவுட்டில் கால் பதிக்க உள்ளார்.
புதுவை மாநகரம் படத்தில் வரும் பாடல் ஒன்றிற்கு ஆட்டம் போட கிரணுக்கு படத்தின் தயாரிப்பாளர் அன்பான கோரிக்கை விடுத்தார்.
இதற்கு சம்மதம் தெரிவித்த கிரண், கூடவே சம்பளத்தையும் மிகவும் உயர்த்தி கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர், இப்பாடலில் நடித்தால் மறுபடியும் தமிழில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
இதற்கு கிரண், தங்கத்திற்கு என்றுமே மதிப்பு குறையாது. அது கழுத்தில் கிடந்தாலும் சரி, வீட்டில் பூட்டி வைத்தாலும் சரி தங்கம் தங்கம்தான்.
அதுபோலத்தான் நானும் என்று கிரண் பதிலளிக்க தயாரிப்பாளர் அவர் கேட்ட சம்பளத்தை கொடுத்து இப்படத்தில் ஆட வைத்திருக்கிறார்
கோச்சடையானில் டைட்டானிக் தொழில்நுட்ப கலைஞர்கள்

04.09.2012.BYrajah.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கோச்சடையான் படம் விறுவிறுவென வளர்ந்து வருகின்றது.
ரஜினி மகள் சௌந்தர்யா இயக்கும் கோச்சடையானை கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையிடுகிறார்.
தீபிகா படுகோனை நாயகியாக நடிக்க ஆதி, நாசர், சரத்குமாருக்கு முக்கிய வேடங்கள் தரப்பட்டிருக்கின்றன.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி நடிக்கிறார் என்பது சிறப்பம்சம்.
லண்டன் டெஸ்ட்ராய்டு ஸ்டுடியோ, கேரளா திருவனந்தபுரத்தில் இருக்கும் அக்ஸல் ஸ்டுடியோவில் ரஜினி, தீபிகா படுகோன் தொடர்பான காட்சிகளை படம் பிடித்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து 'டைட்டானிக்' படத்துக்கு பணியாற்றிய 3டி தொழில்நுட்ப கலைஞர்கள் 3 பேர் சென்னை வந்துள்ளனர்.
இப்போது கோச்சடையான் படத்துக்கான கிராஃபிக்ஸ் வேலையில் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர்.
எந்திரன் இசைவெளியீட்டு விழாவை சிங்கப்பூரில் நடத்தியது போல கோச்சடையான் இசை வெளியீட்டை ஒக்ரோபரில் ஜப்பானில் நடத்துகிறார்கள்.
இதற்காக ரஜினி ஜப்பானிய மொழி கற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்ஜியா பயணத்தை முடித்து விட்டு சென்னை வந்தார் ஆர்யா

04.09.2012.BYrajah.செல்வராகவனின் 'இரண்டாம் உலகம்' படத்திற்காக ஜார்ஜியா நாட்டிற்கு சென்றிருந்த ஆர்யா சென்னை திரும்பியுள்ளார்.
ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் இரண்டாம் உலகம் படம் ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தன்னுடைய படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பியிருக்கிறார் ஆர்யா.
இந்த விடயம் விஷ்ணுவர்தனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனெனில் அஜித்- விஷ்ணுவர்தன் இணையும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்ற போது ஆர்யா சம்பந்தப்பட்ட சில காட்சிகளை படமாக்கினார்கள்.
அதற்கு பிறகு ஆர்யா இரண்டாம் உலகம் படத்திற்காக ஜார்ஜியா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆர்யா திரும்பி இருப்பதால், சென்னையில் அஜீத்- ஆர்யா சம்பந்தப்பட்ட இதர காட்சிகளை காட்சிப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார் விஷ்ணுவர்தன்.
அதுமட்டுமன்றி ஆர்யா- டாப்ஸி சம்பந்தப்பட்ட காட்சிகளையும் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்.
இப்படத்தின் பெயர் 'ஜெய்தேவ்', 'சுராங்கனி' என்ற தலைப்பில் வெளியாகி இருக்கும் போஸ்டர்கள் எதுவுமே அதிகாரபூர்வமானது இல்லையாம்.
விரைவில் படத்தின் FIRST LOOK போஸ்டர் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார் விஷ்ணுவர்தன். இதற்கான புகைப்பட படப்பிடிப்புகள் விரைவில் நடைபெற இருக்கிறது
28ஆம் திகதி வெளியாகிறது தாண்டவம்
| 04.09.2012.BY.rajah. |
| யு டிவி நிறுவனத்தின் அடுத்த பிரமாண்ட படைப்பான "தாண்டவம்" வருகிற 28ஆம் திகதி வெளியாகிறது. |
சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்திற்கும் தாண்டவம் படத்தை, இயக்குனர் விஜய்
இயக்கி உள்ளார். இதில் விக்ரம் கண் தெரியாத நபராக
நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக அனுஷ்கா, எமி ஜாக்சன் நடித்துள்ளனர். இவர்களுடன்
லட்சுமிராயும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷின் இசையில் பாடல்கள் மிக அருமையாக வந்துள்ளன. முக்கியமாக சந்தானத்தின் நகைச்சுவை, விக்ரமின் ஆக்ஷன் காட்சிகள் படத்திற்கு மேலும் வலுசேர்ப்பதாக உள்ளது. இந்த படம் சீயான் விக்ரமின் ரசிகர்களுக்கும், தமிழ் சினிமாவுக்கும் சிறந்ததொரு படைப்பாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை |
அழகு பெண்ணின் (உண்மை)புலம்பல்...கவிதை
![]() |
| |||||||
கவிதை என்றொரு ஊடகமாம் - அது
களைகள் அனைத்தும் களைந்திடுமாம்.
சிந்தனை சிந்திடும் சான்றோரின் - உயர்
சிந்தைகள் யாவும் சுமந்திடுமாம்.
அரும்பென கற்பனை பூத்திடுமாம் - கட்டிக்
கரும்பென கலைச்சொல் இனித்திடுமாம்.
விருந்தென இதனை படித்திட்டால் - மேலும்
அறுந்திடும் ஆசை பிறந்திடுமாம்.
சாதிக் கொடுமையை சாடிடுமாம் - உயர்
நீதிக்கு தொள்தனை தந்திடுமாம்.
கருவகம் ஆகிடும் உருவகமாய் - அந்த
உருவகம் ஆகிடும் உயிரகமாய்.
அணிநயம் ஆகிடும் அணிகலனாய் - அந்த
அணிகலன் எய்திடும் நனிபயனாய்.
உலகில் இதுபோல் கலையுண்டோ - உடன்
உரைத்திட வாரீர் உயர்ந்தோரே .....
உன்னில் தொலைந்தது,
ஒரு கண்சிமிட்டலால்தான்,
அந்த கண்சிமிட்டும்,
நேரத்தில்தான்,
என் உலகம்,
நனைத்து போகிறது.
ஒரு மழை சாரலை போல
ஒரு கண்சிமிட்டலால்தான்,
அந்த கண்சிமிட்டும்,
நேரத்தில்தான்,
என் உலகம்,
நனைத்து போகிறது.
ஒரு மழை சாரலை போல
கவிதை மழை{பெண் குழந்தையின் எச்சரிக்கை!!!!!]
04.09.2012.BYrajah.அடிக்கடி சண்டை,அவனுக்குரியவளிடம்,
அடுப்பு,
எரிக்க விறகு இல்லை,
ஆனாலும்
ஆண் குழந்தை,
இல்லையென்ற,
சோகம்,
அவனுக்கு.
எப்பொழுதும்,
வெறுப்பின்,
வெளிப்பாடு,
எல்லோர் மீதும்,
பால் சாப்பிட்டு,
முடித்த,
அவனுடைய குழந்தை ,
அரை நித்திரையில்,
திடுக்கிட்டது.
அம்மாவின்,
வயிற்றை ,
தொட்ட போது,
தயார் நிலையில்,
அடுத்த குழந்தை,
எச்சரிக்கை விடுத்தது குழந்தை,
அந்த உயிரிடம்,
வரு முன் யோசி,
ஏற்கனவே இங்கு இருக்கும்,
எல்லோருக்கும்,
அப்பாவின் வாயில்,
சனியன்தான்.
"நீ அடுத்த சனியன்,
ஆகிவிடுவாய் "
நீ பெண்ணாக இருந்தால்,
எச்சரிக்கை,
வெளி வரு முன்னே,
எச்சரிக்கை
அடுப்பு,
எரிக்க விறகு இல்லை,
ஆனாலும்
ஆண் குழந்தை,
இல்லையென்ற,
சோகம்,
அவனுக்கு.
எப்பொழுதும்,
வெறுப்பின்,
வெளிப்பாடு,
எல்லோர் மீதும்,
பால் சாப்பிட்டு,
முடித்த,
அவனுடைய குழந்தை ,
அரை நித்திரையில்,
திடுக்கிட்டது.
அம்மாவின்,
வயிற்றை ,
தொட்ட போது,
தயார் நிலையில்,
அடுத்த குழந்தை,
எச்சரிக்கை விடுத்தது குழந்தை,
அந்த உயிரிடம்,
வரு முன் யோசி,
ஏற்கனவே இங்கு இருக்கும்,
எல்லோருக்கும்,
அப்பாவின் வாயில்,
சனியன்தான்.
"நீ அடுத்த சனியன்,
ஆகிவிடுவாய் "
நீ பெண்ணாக இருந்தால்,
எச்சரிக்கை,
வெளி வரு முன்னே,
எச்சரிக்கை
தமிழ்நாட்டுக்கு செல்வதை தவிருங்கள்: சிங்கள மக்களுக்கு இலங்கை அரசின் வேண்டுகோள்
இலங்கை குடிமக்கள் மறு அறிவித்தல் வரும் வரை தமிழ் நாட்டுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று இலங்கை அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
சமீபத்தில் தமிழ் நாட்டுக்கு வரும் சிங்களவர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக கூறும் இலங்கை வெளிநாட்டமைச்சு, எனவே இலங்கை குடிமக்கள் தங்களது பாதுகாப்பை மனதில் கொண்டு, இனி மறு அறிவித்தல் வரும் வரை தமிழ் நாட்டுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறது.
இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு செல்வதில் பிரச்சினை ஒன்றும் இல்லை என்றும் அது கூறியிருக்கிறது.
சமீப காலங்களில் தமிழ் நாட்டுக்கு வந்த இலங்கை சுற்றுலா பயணிகள், யாத்ரிகர்கள், விளையாட்டு மற்றும் கலாசார துறை தொடர்பானவர்கள், தொழில் முறை பயிற்சிக்காக வருபவர்கள் என பல்தரப்பட்டவர்கள் இது போன்ற அச்சுறுத்துலுக்கு ஆளாவதாக அது கூறியிருக்கிறது.
அதேவேளை, இந்த விடயத்தில் சிங்கள பயணிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இந்திய அரசாங்கத்தை இலங்கை கேட்டிருக்கிறது
முற்றுகிறது வேம்படி அதிபர் பிரச்சினை ஒரே நாளுக்குள் தீர்வு வேண்டும் இன்றேல் வெடிக்கும் போராட்டம் பழைய மாணவிகள் போர்க் கொடி
04.09.2012.BY.rajah.யாழ். குடாநாட்டின் புகழ் பூத்த பெண்கள் பாடசாலையான வேம்படி மகளிர் கல்லூரியில்
நிரந்தர அதிபரை நியமிக்கும் பிரச்சினை முற்றி வெடித்துள்ளது. இந்தப் பிரச்சினையில்
சுமுகமான ஒரு முடிவை ஏற்படுத்த கல்வி அதிகாரிகள் தவறி விட்டனர் என்று
குற்றஞ்சாட்டியுள்ள பழைய மாணவிகள் சங்கம் போராட்டத்துக்குத் தயாராகி உள்ளது.
இன்று ஒரு வேலை நாள் கால அவகாசத்தை கல்வி
அதிகாரிகளுக்கு வழங்கியுள்ள பழைய மாணவிகள், தீர்வு கிடைக்கவில்லை என்றால் நாளை
முதல் கவனவீர்ப்புப் போராட்டத்தில் குதிக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பில் பழைய மாணவிகள் சங்கம், மாகாண
கல்விப் பணிப்பாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அதில், "இந்தப்
பிரச்சினையை உடனடியாகத் தீர்க்காது ஒதுக்கித் தள்ளிவிட்டனர்'' என்று கல்வி
அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டியுள்ளது.
"ஏறத்தாழ மூன்று மாதங்களாக எமது பாடசாலையின்
அதிபர் நியமனம் தொடர்பாக நிலவி வரும் குழப்ப நிலையினால் வேதனையுறுகின்றோம்.
பொறுப்பான பதவியில் இருக்கும் அலுவலர்கள் இவ்வாறு தமது கடமையைச் செய்யாதிருப்பது
மிகவும் விரக்தியை ஏற்படுத்துகிறது.
இவர்களின் பொறுப்பற்ற தன்மை யாழ்ப்பாணத்தின்
கல்வித் தராதர வீழ்ச்சிக்கும் பாடசாலைகளின் நிர்வாக ஒழுங்கீனத்துக்கும் அடிகோரும்.
இந்த நிலைமை இன்னும் 3 மாதங்களில் சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின்
கல்வியைப் பெரிதும் பாதிக்கும்'' என்று பழைய மாணவிகள் சங்கக் கடிதத்தில் காட்டமாகக்
குறிப்பிடப்பட்டுள்ளது
அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன் கைது
கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சியை சேர்ந்த நிரோஜன் (23) என தெரிவிக்கப்படுகிறது. இவர் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்துள்ளார்.
இவர் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் செல்வதற்காக, கரூரில் உள்ள முகவரை சந்திக்க கரூர் பஸ் நிலையத்தில் காத்திருந்தார். அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த கியூ பிரிவு பொலிசார், நிரோஜனை பிடித்து விசாரித்ததில், மண்டபம் அகதிகள் முகாமை சேர்ந்தவர் என தெரியவந்தது.
நிரோஜன் தற்போது மண்டபம், கியூ பிரிவு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்
இவர் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் செல்வதற்காக, கரூரில் உள்ள முகவரை சந்திக்க கரூர் பஸ் நிலையத்தில் காத்திருந்தார். அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த கியூ பிரிவு பொலிசார், நிரோஜனை பிடித்து விசாரித்ததில், மண்டபம் அகதிகள் முகாமை சேர்ந்தவர் என தெரியவந்தது.
நிரோஜன் தற்போது மண்டபம், கியூ பிரிவு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்
இலங்கை சரக்கு கப்பல் தொடர்ந்தும் டேபன் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது!
04.09.2012.BY.rajah.டேபன் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை சரக்கு கப்பல் தொடர்ந்தும் அங்கு நங்கூரம் இடப்பட்ட நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கொடியுடனான இந்த கப்பல் தான்சானியாவைச் சேர்ந்த கப்பல் நிறுவனம் ஒன்றிற்கு விற்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்து தென் ஆபிரிக்க கடல் பாதுகாப்பு அதிகார சபையின் கவனத்திற்கு கொண்டு வரப்படாத நிலையிலேயே கப்பலை தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர், எம்.வி. லங்கா மஹாப்பொல என்ற இந்த கப்பலில் பணியாற்றிய மாலுமிகள் தமக்கான 85 ஆயிரம் அமெரிக்க டொலர் வேதனத்தை வழங்க கப்பல் நிறுவனம் தவறிவிட்டதாக முறையிட்டனர்.
இவர்களது முறைப்பாடு குறித்த விசாரணையின் பின்னர், இவர்களுக்கான வேதனம் வழங்கப்பட்டு, அவர்கள் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
புதிதாக பணிக்கமர்த்தப்பட்ட கப்பல் பணியாளர்கள் கப்பலில் பணியாற்றுவதற்கான உரிய வசதிகள் இல்லை என தெரிவித்திருந்தனர்.
இது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட தென் ஆபிரிக்க கடல் பாதுகாப்பு அதிகார சபை, கப்பல் மாலுமிகளுக்கு சர்வதேச தரத்துடனான வசதிகள் இல்லை என தெரிவித்திருந்தனர்.
இதன் அடிப்படையிலேயே கப்பல் தொடர்ந்தும் டுபாய் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்தோனேசியாவில் தரித்துள்ள கப்பலில் இருந்து இலங்கை அகதிகள் வெளியேற மறுப்பு
04.09.2012.BY.rajah.மேற்கு இந்தோனேசியாவில் எரிபொருள் தீர்ந்தநிலையில் தரித்து நிற்கும் கப்பலில் இருந்து வெளியேற 53 இலங்கை அகதிகளும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் தமது கப்பலுக்கு எரிபொருளை நிரப்பித்தருமாறும் தாம் அவுஸ்திரேலியாவுக்கு செல்லவேண்டும் என்றும் குறித்த அகதிகள் கோருவதாக இந்தோனேசிய பொலிஸ் கப்டன் அப்துராச்சமான் சுர்யாங்கேரா தெரிவித்துள்ளார்.
இந்த கப்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுமாத்திரா தீவுக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் வைத்து இந்தோனேசிய கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டது.
குறித்த கப்பலில் உள்ள அகதிகள் தமக்கு உணவு, எரிபொருள் மற்றும் நீரை பெற்றுக்கொள்வதற்காக தங்கம் மற்றும் நகைகளை கொடுப்பதற்கு தயாராக உள்ளதாக இந்தோனேசிய கடற்படையினருக்கு தகவல் கிடைத்தமையை அடுத்தே அவர்கள் அதனை இடைமறித்தனர்.
இதனையடுத்து, அந்தக்கப்பல் இந்தோனேசியாவின் மேற்கு துறைமுகம் ஒன்றுக்கு கொண்டு வரப்பட்டது. இதேவேளை 43 பேரைக்கொண்ட மற்றும் ஒரு இலங்கை அகதிகள் கப்பல் கடந்த வாரம் மென்டாவை என்ற பகுதியில் வைத்து இந்தோனேசிய கடற்படையினரால் காப்பாற்றப்பட்டது.
இதில் பயணித்தவர்கள் 9 நாட்களாக உணவு மற்றும் நீர் இன்றி தத்தளித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது
இந்த கப்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுமாத்திரா தீவுக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் வைத்து இந்தோனேசிய கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டது.
குறித்த கப்பலில் உள்ள அகதிகள் தமக்கு உணவு, எரிபொருள் மற்றும் நீரை பெற்றுக்கொள்வதற்காக தங்கம் மற்றும் நகைகளை கொடுப்பதற்கு தயாராக உள்ளதாக இந்தோனேசிய கடற்படையினருக்கு தகவல் கிடைத்தமையை அடுத்தே அவர்கள் அதனை இடைமறித்தனர்.
இதனையடுத்து, அந்தக்கப்பல் இந்தோனேசியாவின் மேற்கு துறைமுகம் ஒன்றுக்கு கொண்டு வரப்பட்டது. இதேவேளை 43 பேரைக்கொண்ட மற்றும் ஒரு இலங்கை அகதிகள் கப்பல் கடந்த வாரம் மென்டாவை என்ற பகுதியில் வைத்து இந்தோனேசிய கடற்படையினரால் காப்பாற்றப்பட்டது.
இதில் பயணித்தவர்கள் 9 நாட்களாக உணவு மற்றும் நீர் இன்றி தத்தளித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது
கிழக்கில் ஆளும்கட்சி தோல்வியைத் தழுவும்!- புலனாய்வுத்தகவல்
04.09.2012.BYrajah.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நிச்சயமாகத் தோல்வியைத் தழுவும் என்று அரசாங்கத்திற்கு புலனாய்வு அமைப்புகள் தகவல் வழங்கியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் எதிர்கட்சிகளின் பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளதாக அந்த புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பரப்புரைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதல் நிலையிலும் அதற்கடுத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும், ஐதேக ஆகியன இரண்டாம், மூன்றாம் இடங்களிலும் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி, கிழக்கு மாகாணசபையின் ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புகள் உள்ளதாகவும் புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, கிழக்கு மாகாண நிலவரம் தொடர்பான இரகசியக் கலந்துரையாடல் ஒன்று, நேற்றிரவு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் பொலன்னறுவவில் நடத்தப்படுவதற்கு ஏற்பாடாகியிருந்தாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பரப்புரைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதல் நிலையிலும் அதற்கடுத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும், ஐதேக ஆகியன இரண்டாம், மூன்றாம் இடங்களிலும் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி, கிழக்கு மாகாணசபையின் ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புகள் உள்ளதாகவும் புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, கிழக்கு மாகாண நிலவரம் தொடர்பான இரகசியக் கலந்துரையாடல் ஒன்று, நேற்றிரவு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் பொலன்னறுவவில் நடத்தப்படுவதற்கு ஏற்பாடாகியிருந்தாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மன்னார் முஸ்லிம் மீள்குடியேற்ற கிராமத்தில் தற்காலிக கொட்டில்கள் ஆயுததாரிகளால் தீ வைப்பு!
04.09.2012.BYrajah.
இதன் போது 7 தற்காலிக கொட்டில்களும், ஒரு பொது நோக்கு மண்டபமும் தீயில் எரிந்து சாம்பராகியுள்ளது. நேற்று இரவு 9.00 மணியளவில் இ்க்கிராமத்துக்குள் புகுந்த ஆயுதம் தறித்த கும்பல் சம்பவத்தை செய்ததாக அம்மக்கள் தெரிவித்தனர்.
இரவு வேளையில் வந்த ஆயுத தாரிகள் பல கொட்டில்களை அகற்றி வாகனத்தில் ஏற்றிதாகவும், பி்ன்னார் குடிசைகள் சிலவற்றிக்கு தீ வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ வைப்பு சம்பவம் இடம்பெற்ற போது ஆயுததாரிகளிடம் அதனை செய்ய வேண்டாம் என்றும் தாங்கள் குடிப்பதற்கு வைக்கப்பட்டுள்ள தண்ணீரையாவது எடுத்துக் கொள்வதற்கான அனுமதியினை தாருங்கள் என்று மன்றாட்டமாக கேட்ட போது ஆயுததாரிகள் அனுமதியளிக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
தீ வைப்பு சம்பவம் இடம் பெற்றினைதையடுத்து, அப்பிரதேச மக்கள் இரவினை கழிப்பதற்கு கூட நாதியற்ற நிலையில் இருந்ததாக வயோதிபர் ஒருவர் தெரிவித்தார்.
தற்போது இக்கிராமத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிலாவத்துறை காவற்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து கேள்வியுற்றதும், அமைச்சர் றிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் ஆகியோர் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் உடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கையினை எடுத்துவருவதாக தெரியவருகின்றது.
இதே வேளை இ்ந்த சம்பவம் குறித்து முல்லிக்குளம் கடற்படைத்தள பிரதம அதிகாரியுடன் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் நீண்ட பேசியுள்ளதாக பிந்திக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன
இரவு வேளையில் வந்த ஆயுத தாரிகள் பல கொட்டில்களை அகற்றி வாகனத்தில் ஏற்றிதாகவும், பி்ன்னார் குடிசைகள் சிலவற்றிக்கு தீ வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ வைப்பு சம்பவம் இடம்பெற்ற போது ஆயுததாரிகளிடம் அதனை செய்ய வேண்டாம் என்றும் தாங்கள் குடிப்பதற்கு வைக்கப்பட்டுள்ள தண்ணீரையாவது எடுத்துக் கொள்வதற்கான அனுமதியினை தாருங்கள் என்று மன்றாட்டமாக கேட்ட போது ஆயுததாரிகள் அனுமதியளிக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
தீ வைப்பு சம்பவம் இடம் பெற்றினைதையடுத்து, அப்பிரதேச மக்கள் இரவினை கழிப்பதற்கு கூட நாதியற்ற நிலையில் இருந்ததாக வயோதிபர் ஒருவர் தெரிவித்தார்.
தற்போது இக்கிராமத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிலாவத்துறை காவற்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து கேள்வியுற்றதும், அமைச்சர் றிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் ஆகியோர் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் உடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கையினை எடுத்துவருவதாக தெரியவருகின்றது.
இதே வேளை இ்ந்த சம்பவம் குறித்து முல்லிக்குளம் கடற்படைத்தள பிரதம அதிகாரியுடன் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் நீண்ட பேசியுள்ளதாக பிந்திக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன
மன்னாரிலிருந்து அவுஸ்திரேலியா சென்ற பலரது நிலை தெரியவில்லை
04.08.2012.BYrajah.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் அவுஸ்திரேலியா செல்வதாகக் கூறிப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இவர்களில் பலர்அவுஸ்திரேலியா சென்றடைந்த நிலையில் தமது குடும்பத்தாருடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.
ஆனால் பெரும்பாலானோர் இதுவரை எந்தவிதத் தொடர்புகளும் இன்றி இருப்பதாக அவர்களது உறவினர்களும், குடும்பத்தினரும் அச்சம் வெளியிட்டுள்ளனர். பலர் கடலில் வைத்துக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல இலட்சம் ரூபா பணத்தைக் கொடுத்து படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஆனால் பெரும்பாலானோர் இதுவரை எந்தவிதத் தொடர்புகளும் இன்றி இருப்பதாக அவர்களது உறவினர்களும், குடும்பத்தினரும் அச்சம் வெளியிட்டுள்ளனர். பலர் கடலில் வைத்துக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல இலட்சம் ரூபா பணத்தைக் கொடுத்து படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி நோட் 2 – அறிமுகம் – வீடியோ
கூகிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் ஆப்பிள் தயாரிப்புக்களின் விற்பனையை முறியடிக்க முயற்சித்து வருகின்றன.
முன்னர் கூகிள் அதன் நெக்சஸ்-7 டேப்லட்டை google.com இன் முகப்பில் விளம்பரத்தை வெளியிட்டு விற்பனையை தொடங்கி ஆச்சரியமளித்தது.
இதே போல் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் வெற்றிகரமாக விற்பனையானதைத் தொடர்ந்து அதன் 2வது பதிப்பை வெளியிட்டுள்ளது.
கேலக்ஸி நோட் 2 வீடியோ விளக்கம் இங்கே…
முன்னர் கூகிள் அதன் நெக்சஸ்-7 டேப்லட்டை google.com இன் முகப்பில் விளம்பரத்தை வெளியிட்டு விற்பனையை தொடங்கி ஆச்சரியமளித்தது.
இதே போல் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் வெற்றிகரமாக விற்பனையானதைத் தொடர்ந்து அதன் 2வது பதிப்பை வெளியிட்டுள்ளது.
கேலக்ஸி நோட் 2 வீடியோ விளக்கம் இங்கே…



இதில் விக்ரம் கண் தெரியாத நபராக
நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக அனுஷ்கா, எமி ஜாக்சன் நடித்துள்ளனர். இவர்களுடன்
லட்சுமிராயும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 











