| சோமாலியாவிற்கு அருகிலுள்ள
கடலில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 55 பேர் மூழ்கியுள்ளதாக
அகதிகளுக்கான ஐ.நா முகமை தெரிவித்துள்ளது.
வட -கிழக்கு சோமாலியாவின் போஸாஸ்ஸோ துறைமுகத்திலிருந்து புறப்பட்ட படகே இவ்வாறு
கவிழ்ந்ததாகவும், இப்படகில் அதிகளவான பயணிகள் பயணித்ததே விபத்திற்கு காரணம் எனவும்
அகதிகளுக்கான ஐ.நா முகமையாளர் தெரிவித்துள்ளார். இப்படகில் சோமாலியா மற்றும் எத்தியோப்பியா நாட்டை சேர்ந்தவர்கள் பயணித்து இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. மேலும் 23 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது |
Link
▼
ணக்கம் வருக வருக....
▼
Pages
▼
வெள்ளி, 21 டிசம்பர், 2012
சோமாலியாவில் அகதிகள் படகு கவிழ்ந்தது: 55 பேர் பலி
பிரான்ஸால் அல்ஜீரியா அனுபவித்த கொடுமைகள் அதிகம்
| . |
| பிரெஞ்ச் காலனிப்பகுதியாக
இருந்த போது அல்ஜீரியா பல்வேறு துன்பங்களை சந்தித்ததாக ஜனாதிபதி பிராங்கோய்ஸ்
ஹோலண்டே ஒப்புக் கொண்டுள்ளார்.
பிரான்ஸ், அல்ஜீரியா இடையிலான பொருளதார உறவுகளை ஊக்குவிக்கும் நோக்கில்,
பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்கோய்ஸ் ஹோலண்டே அல்ஜீரியாவுக்கு பயணம்
மேற்கொண்டுள்ளார். அங்கு அல்ஜியர்ஸ்ஸில் உள்ள நாடாளுமன்றத்தில் பேசுகையில், அல்ஜீரிய மக்கள் 132 வருடங்களாக கொடுமையான, நியாயமற்ற ஆட்சி முறையில் இருந்துள்ளனர். அப்போது பல்வேறு வகையான துன்பங்களை அனுபவித்துள்ளனர் என்றார். இருப்பினும் அல்ஜீரியர்கள் நினைத்தபடி, மன்னிப்பு ஏதும் கோரவில்லை. |
பிரிந்த தந்தையை சந்திக்க சூட்கேசுக்குள் மறைந்து சென்ற சிறுவன்.
.
இத்தாலியில் பிடிபட்டான் ஆப்கானிஸ்தானிலிருந்து, சூட்கேசில் அடைத்து, எடுத்து வரப்பட்ட சிறுவன், இத்தாலி, நாட்டில் மீட்கப்பட்டான்.
இத்தாலி, எல்லையோர காவல் படையினர், கடந்த வாரம், தங்கள் நாட்டு எல்லையில் நுழைந்த, அலி ஷெகர், 35, என்ற நபரை சோதனை இட்டனர். அப்போது அவர், ஒரு சூட்கேசை பத்திரமாக வைத்திருந்தார். சந்தேகமடைந்த காவலர்கள், அந்த சூட்கேசை திறந்து பார்த்த போது, 5 வயது பையன், சுருட்டியபடி படுத்திருந்தான்.
இது குறித்து அதிகாரிகள், விசாரித்த போது, ஜெர்மனியில் உள்ள உறவினரிடம் ஒப்படைப்பதற்காக, இந்த சிறுவனை அழைத்து வந்ததாக, ஷெகர் கூறினார்.மூன்று மாதத்திற்கு முன் சிறுவன், ஆப்கானிஸ்தானை விட்டு புறப்பட்டுள்ளான்.
மொழி பெயர்ப்பாளர் மூலம், சிறுவனிடம் விசாரித்த போது, தந்தையை பார்க்க விரும்புவதாக கூறினான். பெற்றோர் ஒப்புதலுடன் தான் சிறுவன் அழைத்து வரப்பட்டானா, என்பதை விசாரிக்கும் படி, வெனிஸ் கோர்ட் நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்
பயங்கர ஆயுதங்களால் தாக்கி தப்பிக்க முயன்ற மெக்சிகோ கைதிகள்
21 பேர் சுட்டுக்கொலை.நாட்டின் கோமேஸ் பலாசியோ நகரில் உள்ள சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
சிறையிலிருந்து தப்பிக்க கைதிகள் முயன்றபோது கைதிகளுக்கும் சிறைக் காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது கைதிகள் தங்களிடமிருந்த ஆயுதங்களைக் கொண்டு காவலர்கள் மீது தாக்கினர். அப்போது பதிலுக்கு காவலர்களும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த மோதலில் கைதிகள் தரப்பில் 12 பேரும் காவலர்கள் தரப்பில் 9 பேரும் உயிரிழந்தனர் என துராங்கோ மாகாண பொதுப்பாதுகாப்பு இலாகா செயலர் ஜீசஸ் ரோசோ தெரிவித்தார்.
கைதிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் எந்த வகையைச் சேர்ந்தவை, எப்படி ஆயுதங்கள் கைதிகளுக்கு கிடைத்தன என்பது பற்றிய விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை. சிறையிலிருந்து செவ்வாய்க்கிழமை கைதிகள் தப்பிக்க முயற்சி செய்வதை அறிந்து காவலர்கள் அபாயமணியை ஒலிக்கச் செய்தனர். இதையடுத்து கலவரம் வெடித்தது.
அயர்லாந்தின் புதிய கருக்கலைப்பு சட்டத்திற்கு கத்தோலிக்க
பேராயர்கள் எதிர்ப்பு.
மகப்பேற்றின் போது தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற நிலைமை வரும் போது அவர் கருக்கலைப்பு செய்வதை சட்டரீதியானதாக்குவோம் என்று அயர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
சவிதா ஹலப்பனவர் என்ற இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் மரணமடைந்த ஏழாவது வாரத்தில் இந்த நகர்வு வருகிறது.
31 வயதான சவீதா 17 வார கர்ப்பிணியாக இருந்தபோது கல்வே மருத்துவமனையில் கருச்சிதைவு ஒன்றை அடுத்து மரணமானார். முன்னதாகவே கருக்கலைப்பு செய்துகொள்ள அவர் பலமுறை கேட்டிருந்தும், அதற்கு அயர்லாந்தில் சட்டத்தில் இடமில்லை என்ற காரணத்தினால் அது மறுக்கப்பட்டதாக சவீதாவின் உறவினர்கள் கூறுகிறார்கள்.
சுகவீனமுற்றிருந்த அவருக்கு முன்னதாகவே கருக்கலைப்பு செய்திருந்தால் அவர் உயிர் தப்பியிருப்பார் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த நிலையிலேயே தற்போதைய சட்டத்தில் இந்த மாற்றத்தை அயர்லாந்து நாடாளுமன்றம் கொண்டுவருகிறது.
ஆனால், கார்டினல் சோன் பிரடி உட்பட அயர்லாந்தின் 4 கத்தோலிக்க பேராயர்களும் இந்த முடிவை விமர்சித்திருக்கிறார்கள்.
கருக்கலைப்பு என்பது அயர்லாந்தில் தற்போது சட்டவிரோதமானதாகும். ஆனால் தாயின் உயிருக்கு உண்மையான அதேவேளை அதிகபட்ச ஆபத்து இருக்கிறது என்ற தருணத்தில் அதற்கு விதிவிலக்கு அளிக்கப்படும். உயிராபத்தன்றி, தாயின் சுகாதார காரணங்களுக்காகக் கூட கருக்கலைப்பு செய்ய முடியாது.
இருந்தபோதிலும், அந்த கருக்கலைப்பை எந்த தருணத்தில் அல்லது எத்தகைய சூழ்நிலையில் செய்யலாம் என்பது குறித்து மருத்துவர்கள் திடமாக முடிவு செய்வதற்கு தேவையான சட்டத்தை அரசாங்கம் இதுவரை நிறைவேற்றியிருக்கவில்லை.
புதிய சட்ட ஏற்பாடு பெண்களின் உயிருக்கு ஆபத்தான தருணங்கள் குறித்த சட்டங்களையும் விதிமுறைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்று அயர்லாந்து அரசாங்கம் கூறுகிறது.
இந்த விடயம் தொடர்பில் ஒரு சட்டத்தெளிவை எவ்வாறு ஏற்படுத்தலாம் என்பது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட ஒரு நிபுணர் குழுவின் பரிந்துரைகளை அடுத்து தற்போதைய நகர்வு வந்திருக்கிறது.
மனித உரிமைகள் குறித்த ஐரோப்பிய உடன்படிக்கையின் கீழான அயர்லாந்து அரசாங்கத்தின் கடப்பாடுகளுக்கும் இந்த புதிய ஏற்பாடு பொருந்திப்போவதாக உள்ளது.
அமைச்சர் கருத்து
இந்த விவகாரத்தில் இருக்கக்கூடிய பலதரப்பட்ட உணர்வலைகளையும் கருத்தில் கொண்டே தாம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அயர்லாந்து குடியரசின் சுகாதார அமைச்சர் கூறுகிறார்.
பலருக்கும் இந்த விடயம் குறித்து தனிப்பட்ட கருத்துக்கள் இருந்தாலும், கருவுற்ற பெண்களின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய கடப்பாட்டையும் அரசாங்கம் உறுதி செய்ய விளைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
''கருவுற்ற பெண்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியாளர்களுக்கு எது சட்டபூர்வமானது என்பதை நாம் தெளிவுபடுத்தியுள்ளதுடன், கருவில் இருக்கும் பிள்ளையின் சம உரிமையையும் நாம் கருத்தில் கொண்டுள்ளோம்'' என்றும் அவர் கூறியுள்ளார்.
பேராயர்கள் எதிர்ப்பு
''தற்போதைய பரிந்துரைகள் சட்டமாக்கப்பட்டால், தாய்க்கும், கருவில் இருக்கும் குழந்தைக்கும் தற்போதைய சட்டத்தில் மிகக் கவனமாக வழங்கப்பட்டுள்ள உயிர் வாழ்வதற்கான சம உரிமையும் அயர்லாந்தில் உள்ள மருத்துவ சிகிச்சைமுறையும் அடிப்படையிலேயே மாற்றப்பட்டுவிடும்'' என்று அயர்லாந்தில் பேராயர்கள் கூட்டாக வெளியிட்டுள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்கள்.
இது கருவில் இருக்கும் குழந்தைகள் நேரடியாகவும் வேண்டுமென்றும் கொல்லப்படும் நிலைக்கு உள்ளாக்கிவிடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஆகவே இதுகுறித்த நாடாளுமன்ற நடவடிக்கைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் ஆயர்கள் கோரியுள்ளனர்.
கருக்கலைப்பு குறித்த விடயம் அயர்லாந்தில் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மிகவும் ஆழமாக பிளவுபட்ட கருத்துக்களையே கொண்டிருக்கின்றது.
இந்த நிபுணர் குழுவின் ஆரிக்கை மற்றும் சவீதாவின் மரணம் ஆகியவற்றை அடுத்து அயர்லாந்து நாடாளுமன்றத்தில் கருக்கலைப்பு குறித்து மூன்று விவாதங்கள் நடந்துள்ளன.
கருக்கலைப்பு தொடர்பில் பல மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்களை அயர்லாந்து குடியரசு நடாத்தியிருக்கிறது.
அதன் மூலம் 1983 இல் தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைக்கும் உயிர் வாழ சம உரிமை உண்டு என்பது அங்கீகரிக்கப்பட்டது.
1992 இல் பெண்கள் நாட்டை விட்டு வெளியே சென்று கருக்கலைப்பு
மதம் மாற மறுத்த காதலி. மனமுடைந்த இந்திய டாக்டர்
இங்கிலாந்து வெள்ளைக்காரகாதலியைதிருமணம் செய்து கொள்ளபெற்றோர்எதிர்ப்புதெரிவித்ததால், கர்நாடகத்தைசேர்ந்தடாக்டர்தற்கொலைசெய்து கொண்டார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் டாக்டர் மது ஹொன்னய்யா (33). மயக்கவியல் நிபுணர். இவர் இங்கிலாந்தின் லிவர்பூல் மருத்துவமனையில் கடந்த 2008ம் ஆண்டு பணிபுரிந்தார். அங்கு உடன் பணிபுரிந்த டாக்டர் எம்மா ரைட்டன் (32) என்ற வெள்ளைக்கார பெண்ணை காதலித்தார். இதற்கிடையில் ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்து எம்மா சென்று விட்டார். எனினும் இருவரும் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வந்தனர்.
சில மாதங்கள் கழித்து இங்கிலாந்துக்கே வந்துவிட்டார் எம்மா. இருவரும் கடந்த 2010ம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இந்த விஷயத்தை பெற்றோரிடம் மது தெரிவிக்கவில்லை. இந்நிலையில் மகனை பார்க்க மதுவின் பெற்றோர் இங்கிலாந்து வந்தனர். அப்போது, மகன் வெள்ளைக்கார பெண்ணை காதலிப்பதும் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்ததும் தெரிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
தங்கள் ஜாதியில் அல்லது பிறந்து வளர்ந்த பெங்களூரில் இருந்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மகனிடம் வலியுறுத்தினர். பெற்றோரை சமாதானப்படுத்த மது எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. கடைசியாக எம்மாவை இந்து மதத்துக்கு மாற்றி திருமணம் செய்து கொள்கிறேன் என்று மது கூறினார். இதுகுறித்து காதலியிடம் பேசினார். ஆனால், இந்து மதத்துக்கு மாற எம்மா மறுத்துவிட்டார். இதையடுத்து இருவரும் பிரிந்தனர்.
இதனால் சோகம் அடைந்த மது, ஸ்வான்சீயில் உள்ள சிங்கிள்டான் மருத்துவமனைக்கு மாறினார். கடந்த 7 மாதங்களாக மிகவும் மனம் நொறுங்கிய நிலையில் இருந்த மது, தான் தங்கியிருந்த அபார்ட்மென்டில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
எனினும் மது எப்போது தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றிய விவரங்களை வெளியிடவில்லை. கர்நாடக மாநிலம் சிர்சாவை சேர்ந்த நர்ஸ் ஜெசிந்தா, லண்டனில் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி அடங்குவதற்குள், பெங்களூரை சேர்ந்த டாக்டர் மது தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிகிச்சைக்கு வந்த சிறுமிகளிடம் சில்மிஷம் செய்த 70 வயது
டாக்டருக்கு 11 வருடம் சிறை.
இங்கிலாந்தின் டோன்காஸ்டர் நகரில் கிளினிக் நடத்தி வந்தவர் டாக்டர் கவுசல் இஸ்லாம் (70). சிகிச்சைக்கு வரும் இளம்பெண்கள், சிறுமிகளை சோதனை என்ற பெயரில் ஆடைகளை களைவார். பரிசோதனை செய்வது போல கண்ட இடங்களில் கைவைப்பார். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வக்கிர புத்தியுடன் அவர் செய்துவந்த இந்த மோசடி செயல் கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம் போலீசில் ஒரு பெண் கொடுத்த புகாரால் அம்பலமானது. அவரால் பாதிக்கப்பட்ட மேலும் பல பெண்கள் அடுத்தடுத்து புகார் கொடுக்க, விவகாரம் விஸ்வரூபமானது.
டாக்டர் பணி செய்ய லாயக்கு இல்லாதவர் என்று கூறி அவரை இங்கிலாந்து மெடிக்கல் கவுன்சில் சஸ்பெண்ட் செய்தது. ஷெப்பீல்டு கிரவுன் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது. பாதிக்கப்பட்ட பெண்கள் சாட்சியம் அளிக்கும்போது கதறி அழுதனர். ‘கடவுளுக்கும் மேலாக டாக்டர்கள் மீது மக்கள் மரியாதையும் பக்தியும் வைத்திருக்கிறார்கள். அதை குலைக்கும் வகையில் கவுசல் இஸ்லாம் நடந்தது மன்னிக்க முடியாத குற்றம்’ என்று கூறி கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி சைமன் லாலர், அவருக்கு 11 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். தங்களுக்கு நடந்த கொடுமை பற்றி போலீசில் புகார் அளித்த பெண்களின் தைரியத்தையும் நீதிபதி பாராட்டினார்.
டாக்டர் பணி செய்ய லாயக்கு இல்லாதவர் என்று கூறி அவரை இங்கிலாந்து மெடிக்கல் கவுன்சில் சஸ்பெண்ட் செய்தது. ஷெப்பீல்டு கிரவுன் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது. பாதிக்கப்பட்ட பெண்கள் சாட்சியம் அளிக்கும்போது கதறி அழுதனர். ‘கடவுளுக்கும் மேலாக டாக்டர்கள் மீது மக்கள் மரியாதையும் பக்தியும் வைத்திருக்கிறார்கள். அதை குலைக்கும் வகையில் கவுசல் இஸ்லாம் நடந்தது மன்னிக்க முடியாத குற்றம்’ என்று கூறி கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி சைமன் லாலர், அவருக்கு 11 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். தங்களுக்கு நடந்த கொடுமை பற்றி போலீசில் புகார் அளித்த பெண்களின் தைரியத்தையும் நீதிபதி பாராட்டினார்.
விபத்தில் இறந்தவர்களை மனித குளோனிங் மூலம் உயிர்ப்பிக்கலாம்
. இங்கிலாந்து விஞ்ஞானி நம்பிக்கை.
ஒரு மனிதனை அச்சு அசலாக மீண்டும் உருவாக்கும் மனித குளோனிங் தொழில் நுட்பமுறை இன்னும் 50 வருடங்களில் சாத்தியமாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
மருத்துவ அறிவியலில் நவீன கண்டு பிடிப்பான குளோனிங் முறை, உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானி சர்ஜான் கர்டன் 1950-ல் தவளையை குளோனிங் முறையில் உருவாக்கினார். அவரைத் தொடர்ந்து 1996-ல் டென்மார்க் நாட்டு விஞ்ஞானி 'டோலி' என்ற ஆட்டுக் குட்டியை குளோனிங் முறையில் உருவாக்கினார்.
தற்போது இங்கிலாந்து விஞ்ஞானி சர்ஜான் கர்டன் மனித குளோனிங் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் இந்த ஆண்டு மருத்துவக்கான நோபல் பரிசு பெற்றுள்ளார். அவர் மனித குளோனிங் பற்றி கூறியதாவது:-
1978-ல் உலகின் முதல் டெஸ்ட் டியூப் குழந்தை லூயிஸ் பிரவுனை உருவாக்க உயிரியல் அறிஞர்கள் முயற்சித்தபோது, மக்களிடம் இருந்து அதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இதுபோன்ற அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி மனித குலத்துக்கு கேடானது என சிலர் கருத்து தெரிவித்தனர். ஆனால் முதல் டெஸ்ட் டியூப் குழந்தையை உருவாக்கிய பிறகு மக்கள் அதை ஏற்றுக் கொள்ளத் தொடங்கினர். காரணம் அந்த விஞ்ஞான தொழில் நுட்பத்தின் மூலம் குழந்தை பெற இயலாத தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்ள முடிந்தது.
அதேபோல ஒரு உயிரினத்தை அப்படியே அச்சு அசலாக மீண்டும் உருவாக்கும் குளோனிங் விஞ்ஞான தொழில் நுட்பத்துக்கும் உலகம் முழுவதும் எதிர்ப்பு உள்ளது.
டெஸ்ட் டியூப் தொழில் நுட்பத்தைப்போல குளோனிங் தொழில் நுட்பத்தாலும் மனித குலம் பயன்பெறும். இதன் மூலம் நோயற்ற குழந்தைகளை உருவாக்க முடியும். அப்போது மக்கள் அதை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
குழந்தை இல்லாத தம்பதியரில் தாயின் அண்டச் செல் மற்றும் தோல் செல்களைப் பயன்படுத்தி குளோனிங் குழந்தையை உருவாக்க முடியும். அது பாதுகாப்பானது மற்றும் மிகுந்த பலன் தரக்கூடியது. இன்னும் 50 ஆண்டுகளில் மனித குளோனிங் சாத்தியமாகும்.
ஒரு தம்பதி குளோனிங் தொழில் நுட்பம் மூலம் குழந்தை பெற விரும்பினால் அதை நாம் ஏன் தடுக்க வேண்டும்
கூட்டமைப்பின் உண்ணாவிரத போராட்டத்தை கலைக்கும் முயற்சி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உண்ணாவிரத போராட்டத்தை முன்னிட்டு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மேடை இனம் தெரியாத நபர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ். நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்காக நேற்றைய தினம் தற்காலிக பந்தல் ஒன்றினை அமைந்தது
எனினும் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் அவ் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மேடை சேதப்படுத்தப்பட்டுள்ளது
பந்தலின் மேல் போடப்பட்டிருந்த தகரங்களை கழற்றி கழிவு கால்வாய்களில் வீசியெறிந்துள்ளனர்.
அத்துடன் அந்த இடத்தில் கழிவு தண்ணீரை ஊற்றி நாசப்படுத்தியும் உள்ளனர். அவ்விடத்திற்கு இன்று காலை வருகை தந்த தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிகள் இவற்றை எல்லாம் பொருட்படுத்தாது நிலத்தில் தரைப்பாள் விரித்து தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்
யாழ். நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்காக நேற்றைய தினம் தற்காலிக பந்தல் ஒன்றினை அமைந்தது
எனினும் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் அவ் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மேடை சேதப்படுத்தப்பட்டுள்ளது
பந்தலின் மேல் போடப்பட்டிருந்த தகரங்களை கழற்றி கழிவு கால்வாய்களில் வீசியெறிந்துள்ளனர்.
அத்துடன் அந்த இடத்தில் கழிவு தண்ணீரை ஊற்றி நாசப்படுத்தியும் உள்ளனர். அவ்விடத்திற்கு இன்று காலை வருகை தந்த தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிகள் இவற்றை எல்லாம் பொருட்படுத்தாது நிலத்தில் தரைப்பாள் விரித்து தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்










