24.07.2012.மானிப்பாய் பகுதியில் ரி 56 ரக துப்பாக்கி வைத்திருந்த
குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் நீதிமன்றில் ,ஆஜர்
செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு
உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.
மானிப்பாய் பகுதியில் கடந்த வாரம்
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வீட்டை சோதனையிட்ட மானிப்பாய்
பொலிஸார் குறிப்பி;ட்ட துப்பாக்கியையும் மற்றும் துப்பாக்கிக்கான ரவைகள் மற்றும் 02
கைக்குண்டுகள் என்பவற்றை மீட்டதுடன் சந்தேகத்தின் பேரில் மூவரையும் கைது
செய்திருந்தார்கள். மானிப்பாய் பொலிஸாரால் சந்தேக நபர்கள் மூவரும் யாழ். மாவட்ட
நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதன் அடிப்படையில்; பொலிஸாரின் கோரிக்கையைத்
தொடர்ந்து நீதிமன்றம் சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்ய
அனுமதித்துள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். |
0 comments:
கருத்துரையிடுக