siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 19 டிசம்பர், 2013

சுவிஸ் மக்களே நட்புடன் வாழுங்கள்! துணை தூதரின் !!!

சுவிஸ் நாட்டு மக்கள் அனைவரிடமும் நட்புறவு கொண்டு வாழவேண்டும் என்று துணை தூதரக தலைவராய் பதவியேற்றுள்ள டாம் மேட்லாக் தெரிவித்துள்ளார்.
சுவிஸ் நாட்டின் துணை தூதரக தலைவராக பிரிட்டிஷ் நாட்டின் டாம் மேட்
லாக் பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில் நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில், சுவிஸ் நாட்டிற்கு புதிதாக குடியேறிய மக்கள் உடன் சுவிஸ் மக்கள் நட்புரவு வைத்துக்கொள்ள முயற்சியெடுக்க வேண்டும்.

தன் வேலை, தன் வாழ்க்கை என்ற எண்ணத்தை விடுத்து எல்லோரையும் சந்தித்து கலந்துரையாடுவதால் அந்நாட்டில் நிரந்தர குடியுரிமை பெற்ற மக்களுக்கு அறிமுகம் ஆவது மட்டும் இல்லாமல் சில சமயங்களில் இது போல் செய்வது உதவிகளையும், நன்மைகளையும் பயக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும் சுவிஸில் வாழ்க்கை செலவு அதிகமாய் இருப்பினும் இயற்கை காட்சிகளை ரசிக்கும் வண்ணம் வெளியே சென்று ஆராய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 

0 comments:

கருத்துரையிடுக