siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 24 டிசம்பர், 2012

நுனாவத் விமான விபத்தில் கறுப்பு பெட்டி கண்டுபிடிப்பு

கனடாவில் ஹட்சன் வளைகுடாவில் உள்ள பெல்ச்சாத் தீவில் நுனாவத் என்ற இடத்தில் நடந்த விமான விபத்தில் விசாரணை அதிகாரிகள் கறுப்புப் பெட்டியைக் கண்டுபிடித்தனர்.

பெரிமீட்டர் என்ற தனியார் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் பெல்ச்சார் தீவில் சானிகிலுக் என்ற இடத்தில் திடீரென்று தரையில் விழுந்தது.

இதில் இரண்டு விமானிகளும் ஒரு குழந்தை உட்பட ஏழு பயணிகளும் இருந்தனர்.

குழந்தை தவிர மற்ற அனைவரும் உயிர் பிழைத்தனர் என்று விமான நிறுவனத்தின் தலைவர் மார்க்வெஹ்ர்லே தெரிவித்தார்.

இந்தக் கறுப்புபெட்டி கிடைத்த பின்பு விசாரணை முழு வீச்சில் நடைபெறுவதாக போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் தகவல் தொடர்பாளி கூறினார்.

கனடா காவல்துறையினர், இந்தத் தனி விமானத்தில் ஒன்பது பேர் இருந்ததாகவும் விபத்தில் எட்டுப்பேர் காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் தெரிவித்தனர்.





மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கிரிமினல் வழக்கு?

 
பிரிட்டனில் செவிலியர் ஜெஸிந்தாவின் மரணத்திற்கு காரணமாக அவுஸ்திரேலிய வானொலி அறிவிப்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர்வது குறித்து பொலிசார் பரிசீலித்து வருகின்றனர். பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டன் கர்ப்பத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தவர் ஜெஸிந்தா.
அப்போது அவுஸ்திரேலியாவை சேர்ந்த வானொலி நிலைய அறிவிப்பாளர்கள், அரச குடும்ப உறுப்பினர்கள் போன்று பேசி கேத் குறித்த தகவல்களை சேகரித்தனர்.
அறிவிப்பாளர்களுக்கு, கேத் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டுக்கு தொலைபேசி இணைப்பை ஏற்படுத்தி கொடுத்தது ஜெஸிந்தா தான் என தெரியவந்தது.
இதனையடுத்து மன உளைச்சலில் ஜெஸிந்தா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது லண்டனில் பெரிய பிரச்னையாக வெடித்தது. ஜெஸிந்தா மரணம் குறித்து லண்டன் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
வானொலி அறிவிப்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர முடியுமா என கேட்டு, Prosecution துறையிடம் கருத்து கேட்டுள்ளனர். அந்த துறை ஒப்புதல் அளித்தால், ரேடியோ ஜாக்கிகள் மீது வழக்கு தொடரப்படும் என தெரிகிறது.
இதற்கிடையே ஜெஸிந்தா மரணம் தொடர்பாக கிங்எட்வர்டு மருத்துவமனை மற்றும் அவுஸ்திரேலியா ரேடியோ நிறுவனத்துக்கு 60 கேள்விகளை கேட்டு ஜெஸிந்தா குடும்பத்தினர் கடிதம் அனுப்பியுள்ளனர்

ஜெயிலில் இருக்கும் கொலைகாரனை காதலிக்கும்



சகோதரியை கொலை செய்தவனை, அர்ஜென்டினாவை சேர்ந்த பெண், திருமணம் செய்து கொள்ள ஆர்வமாக உள்ளார்.தென் அமெரிக்க நாடான, அர்ஜென்டினாவின், சான்டா குருஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் விக்டர் சிங்கோலானி. இதே பகுதியை சேர்ந்த மாடல் அழகி ஜொகானாவை கொலை செய்ததாக, 13 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.ஜொகானாவும், எடித் கசாஸ் இருவரும் இரட்டை சகோதரிகள். 2010ம் ஆண்டு, ஜூலை மாதம் ஜொகானா, படுகொலை செய்யப்பட்டார்.

இதற்கிடையே, கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள விக்டரை, தீவிரமாக காதலிக்கிறார் ஜொகானாவின் சகோதரி, எடித் கசாஸ். இதற்கு எடித்தின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், விக்டரை மணக்கும் திட்டத்தை மாற்றிக்கொள்ள மறுத்துவிட்டார் எடித்."என் காதலர் மீது தவறாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது' என, கூறிய எடித், 21ம்தேதி, காதலர் விக்டரை மணக்க தயாராக இருந்தார்.பொதுமக்கள் முன்னிலையில், இந்த திருமணம் நடப்பதற்கு, அர்ஜென்டினா கோர்ட், தடை விதித்துள்ளது. கடைசி நேரத்தில் திருமணம் நின்றதால், விக்டர், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.வரும், 31ம்தேதி, இந்த திருமணம் குறித்து, கோர்ட் தனது இறுதி தீர்ப்பை அளிக்க உள்ளது.

குடியுரிமை பெற்றுக் கொண்ட இலங்கையர்களுக்கு

         
 
ஒரு லட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் இரட்டைக் குடியுரிமை கோரி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு குடியுரிமை பெற்றுக்கொண்ட இலங்கையர்களே இவ்வாறு குடிவரவு குடியகழ்ல்த் திணைக்களத்தின் ஊடாக இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளனர்.
எனினும், தமது கோரிக்கைக்கு குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் சாதகமான பதில் எதனையும் அளிக்கவில்லை என வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இவர்களில் சிலர் ஏற்கவே இரட்டைக் குடியுரிமை அந்தஸ்து வகித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு குடியுரிமை பெற்றுக் கொண்ட இலங்கையர்களுக்கு 30 நாள் வீசாவே வழங்கப்படுகின்றது.
இதற்காக 50 அமெரிக்க டொலர் அறவீடு செய்யப்படுகின்றது.
வீசா காலம் முடிவடைந்ததன் பின்னர் தங்கியிருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் புதிய சட்ட திருத்தங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்