siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 24 டிசம்பர், 2012

குடியுரிமை பெற்றுக் கொண்ட இலங்கையர்களுக்கு

         
 
ஒரு லட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் இரட்டைக் குடியுரிமை கோரி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு குடியுரிமை பெற்றுக்கொண்ட இலங்கையர்களே இவ்வாறு குடிவரவு குடியகழ்ல்த் திணைக்களத்தின் ஊடாக இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளனர்.
எனினும், தமது கோரிக்கைக்கு குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் சாதகமான பதில் எதனையும் அளிக்கவில்லை என வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இவர்களில் சிலர் ஏற்கவே இரட்டைக் குடியுரிமை அந்தஸ்து வகித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு குடியுரிமை பெற்றுக் கொண்ட இலங்கையர்களுக்கு 30 நாள் வீசாவே வழங்கப்படுகின்றது.
இதற்காக 50 அமெரிக்க டொலர் அறவீடு செய்யப்படுகின்றது.
வீசா காலம் முடிவடைந்ததன் பின்னர் தங்கியிருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் புதிய சட்ட திருத்தங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்

0 comments:

கருத்துரையிடுக