siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 28 ஜூலை, 2012

வாந்தி கோளறகவலை வேண்டாம் கை வைத்தியம்இருக்கின்றது

மசக்கையா கவலையை விடுங்க இஞ்சி சாறும், எலுமிச்சை சாறும் இருக்கு!


மாத விலக்கு தள்ளிப் போனவுடன் சிலருக்கு மசக்கை, வாந்தி ஏற்படும். காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சம்பழம்தை பிழிந்து அதில் ஒரு சொட்டு இஞ்சிச்சாறு சேர்த்துக் குடிக்க வேண்டும்.

காய்ச்சின பசும்பால் 100 மில்லி எடுத்து, சூடு இல்லாமல் ஆற வைத்துக் கொள்ளவும். அதில் ஒரு கோழி முட்டையின் வெள்ளைக்கரு, அரை புட்டி சோடா நீரை கலந்து சாப்பிட, வாந்தி எடுப்பது குணமடையும்.

கர்ப்பமான பெண்களுக்கு அடிக்கடி வாந்தி வரும். எதைச் சாப்பிட்டாலும் வாந்தி எடுப்பார்கள். 3 ஏலக்காய்களைத் தீயில் சுட்டுப் பொடியாக்கி, தேனில் குழைத்துக் கொடுத்தால், வாந்தி உடனே மட்டுப்படும்.

ஒரு லிட்டர் தண்ணீரில் கால் லிட்டர்; பார்லியைப் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து, சிறிது உப்பு சேர்த்து, அரை எலுமிச்சம்பழத்தையும் அதில் பிழிந்து, தினமும் அவ்வப்பொழுது சில நாட்கள் குடித்து வர, மசக்கையால் உண்டாகும் தொந்தரவு மறைந்தே போகும்.

சீரகத்தைப் பொடி செய்து வாயில் போட்டு மெல்லலாம். (சீரகத் தண்ணீர் பருகலாம் அதாவது -ஒரு ஸ்பூன் சீரகத்தை ஒரு அவுன்ஸ் வெந்நீரில் போட்டு, சாறு தண்ணீரில் இறங்கியவுடன் அப்படியே தண்ணீர் குடிக்கும் பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் கொண்டு, அதையே
குடித்து வரலாம். மலையாளிகள் இப்படி சீரக வெள்ளம் சாப்பிடுவதாலேயே அவர்கள் பிள்ளைகள் நல்ல நிறமாகப் பிறக்கின்றன.)

சாப்பிட பிடிக்காவிட்டால், வறுத்த சீரகப்பொடியுடன் துளி உப்பு சேர்த்து, காய்ச்சிய நெய்யுடன் சாப்பிட்டால் ருசியாக இருக்கும். எளிதில் ஜீரணமாகும். கண்டிப்பாக மாங்காய், சாம்பல், விபூதி விக்ஸ் இவைகளைச் சாப்பிடக்கூடாது. பிறக்கப்போகும் குழந்தைக்கு ரத்தம் ஊறாமல் ரத்த சோகை ஏற்படும்.

மிகவும் குளிர்ச்சி உடம்புள்ளவர்கள் எலுமிச்சை சேர்க்கக்கூடாது. தண்ணீர் குடிக்கும்போது சீரகத்தை போட்டுக் கொதிக்க வைத்துதான் குடிக்கவேண்டும். 40 நாட்கள் ஆனதுமே, வெதுவெதுப்பான நீரில்ல் தான் குளிக்க வேண்டும்.

குளிர்ந்த அல்லது மிகச் சூடான நீர் குழந்தையைத் தாக்கும். 40 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை அலைச்சல்; பிரயாணம் கூடாது. கருச்சிதைவு ஏற்படும் காரம் குறைக்க வேண்டும். மிளகாய்க்கு பதில் மிளகு சேர்க்கலாம்.

ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க சில வழிகளை பின்பற்றிதான் ஆகனும். பின்பற்றினால் அழகான ஆரோக்கியமான குழந்தை உங்கள் மடியில்

2015 முதல் ஆண்டுதோறும் 2.5 லட்சம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஆபத்து ஆய்வில் அதிர்ச்சி தகவல்

 

 
இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 3 சதவீதம் அதிகரிக்கும். இதன்படி, 2015 முதல் ஆண்டுக்கு
2.50 லட்சம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் மார்பக புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இன்னும் 10 ஆண்டுகளில் இது பல மடங்கு அதிகரிக்கும் என்ற தகவல் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் லியான் என்ற உலக புற்றுநோய் ஆராய்ச்சி கழக ஆய்வின்படி, இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 3 சதவீதம் அதிகரிக்கும். இதன்படி, வரும் 2015 முதல் ஆண்டுக்கு 2.50 லட்சம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புள்ளது என்கின்றனர். அதே போல் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

காரணம் என்ன:

மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றி திருமணம் செய்வதை தவிர்ப்பது. குழந்தை பெற்றுக் கொள்வதை தாமதப்படுத்துவது. தாய்ப்பால் கொடுப்பதை
தவிர்ப்பது. கால இடைவெளியின்றி குழந்தை பெற்றுக் கொள்வது ஆகியவை பெண்களிடம் ஹார்மோன் மாறுதலை ஏற்படுத்துகிறது. இதுவும் மார்பக
புற்றுநோய்க்கு காரணமாகிறது.

தாய் மற்றும் உறவினர்களுக்கு இருந்தாலும் மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளது. மாதவிடாய் சுகாதாரமின்மை, தரமற்ற நாப்கின்களைப்
பயன்படுத்துவது, புற்றுநோய் வைரஸ் தொற்று உள்ளிட்ட காரணங்களால் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

ஆனால், இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல், பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

குறிப்பாக கிராமங்களில் மாதவிடாய் சுகாதாரம் பற்றிய அறியாமையால் கருப்பை வாய் புற்றுநோய் வருகிறது. நகர்ப்புறங்களில் நாகரிக மோகத்தில் மார்பக புற்றுநோய் அதிகரிப்பது தெரியவந்துள்ளது.

விழிப்புணர்வு இல்லை:

திருச்சி புற்றுநோய் மருத்துவ நிபுணர் சீனிவாசன் கூறுகையில், மொத்தம் 60 சதவீதம் பேர் நோய் முற்றிய நிலையில் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு வருவதால், பூரண குணமடைவது கேள்விக்குறியாகிறது. நடுத்தர மற்றும் ஏழைகள் பலர் மருத்துவ சிகிச்சை பெற வசதியின்றி, உயிரை இழக்கிறார்கள். போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம் என்றார்.

எளிதில் குணப்படுத்தலாம்


மார்பக புற்றுநோயை சுயபரிசோதனை, மேமோகிராபி சோதனைகள் மூலம் குறைந்த செலவில், எளிதில் கண்டறியலாம். ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், மார்பகத்தை அகற்றாமலே சிகிச்சை பெறலாம். நாற்பது வயதைக் கடந்தவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுய பரிசோதனை அல்லது மேமோகிராபி சோதனை செய்து கொள்வது அவசியம் என்கிறார் திருச்சி மகப்பேறு மருத்துவ நிபுணர் தமிழ்செல்வி.

இலவச நாப்கின்:


கிராமப்புற, ஏழை பெண்களுக்கு மாதவிடாய் சுகாதாரம் கிடைக்க இலவசமாக நாப்கின் வழங்கும் திட்டம் வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தனியார் நிறுவனங்களில் இருந்து சுகாதாரத் துறையினர் கொள்முதல் செய்து, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கப்படுகிறது. இதை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவு படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்து சாத்தியமா:

கருப்பை வாய் புற்றுநோய்க்கு காரணமான எச்பிவி எனப்படும் வைரஸ் (ஹூமன் பாப்பிலோமா வைரஸ்) கண்டறியப்பட்டுள்ளது. இதை அழிக்கும் தடுப்பு மருந்தை 13 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கொடுத்தால் தடுக்க முடியும். அதாவது, நோய்க்கான காரணியை 90% வரை தவிர்க்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

மார்பக காம்பை சுற்றி நாள்பட்ட ஆறாத புண்கள். மார்பகத்தில் ஏதேனும் மாற்றங்கள். காம்பில் நீர் அல்லது ரத்தக் கசிவு. மார்பக காம்பு உள்நோக்கி

இருத்தல். மார்பக பகுதியில் சதைகள் கடினமாவது ஆகியவை மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள். துர்நாற்றத்துடன் வெள்ளைப்படுதல், ரத்தக் கசிவு

உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சோதனை செய்து கொள்வது அவசியம்

இரட்டையர் பிரிவில் இந்திய அணி

28.07.2012.ஒலிம்பிக் டென்னிஸ்: கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி தோல்வி

 


லண்டன்: லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளின் டென்னிஸ் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் ஜூவாலா கட்டா மற்றும் வி டிஜு ஜோடி தங்களது துவக்க ஆட்டத்தில் இந்தோனேசியாவின் லிலியானா நட்சிர் மற்றும் டண்டோவி அஹமத் ஜோடியிடம் நேர் செட்களில் தோல்வியடைந்துள்ளது. இந்திய ஜோடி 21 -18 ,21 -12 என்ற நேர் செட்களில் இந்தோனேசிய ஜோடியிடம் தோல்வியடைந்துள்ளது. ஜூவாலா- டிஜு ஜோடிக்கு, கலப்பு இரட்டையர் பிரிவில் இன்னும் 2 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன

இலங்கை கடற்படை சித்திரவதை செய்து கழிவறைகளில் தங்க வைத்தனர்! தமிழக மீனவர்கள் புகார்!

 
  28 யூலை 2012,
இலங்கையிலிருந்து விடுதலையாகி இன்று காலை இராமேஸ்வரம் திரும்பிய தமிழக மீனவர்கள், தங்களை இலங்கை கடற்படையினர் அடித்து உதைத்து சித்திரவதை செய்ததாக கண்ணீர் மல்க புகார் தெரிவித்தனர்.
கடந்த 21ம் தேதி கச்சதீவுப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றது.
இந்நிலையில் மத்திய, மாநில அரசுகளின் கடும் முயற்சிக்குப் பிறகு நேற்று விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 23 பேரும், இன்று காலை மண்டபம் பகுதிக்கு வந்தனர்.
மண்டபம் காவல் படையினர் அவர்களை தமிழகத்துக்கு அழைத்து வந்தனர். 23 மீனவர்களுடன் அவர்கள் சென்ற 5 படகுகளும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
அவர்களிடம் காவல்துறையினர் விவரங்களை கேட்டறிந்து வருகின்றனர். பிறகு அவர்கள் தங்களது இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இதனிடையே தாங்கள் இந்திய கடற்பகுதிக்குள் தான் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகவும், இலங்கை கடற்படையினர் தான் இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தங்களது கழுத்தில் கத்தி மற்றும் துப்பாக்கியை வைத்து,"தங்களுடன் வராவிட்டால் கொன்று விடுவோம்” என மிரட்டி அழைத்துச் சென்றதாகவும், பின்னர் தங்களை கைகளில் விலங்கிட்டு நாய்களைப் போன்று நடத்தியதாகவும், கழிவறைகளிலேயே தங்க வைத்ததாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும் இலங்கை கடற்படையினர், இந்திய படையினரிடம் நேற்றிரவு ஒப்படைத்து விட்ட போதிலும், இந்திய படையினரும் அவர்களது பங்கிற்கு தங்களை இரவு முழுவதும் கடுமையாக நடத்தி விசாரணை மேற்கொண்டதாகவும் மீனவர்கள் குற்றம்சாட்டினர்.

மற்றவர்ளைக் கவரும் அளவிற்கு கூந்தல் வேண்டுமா!

மற்றவர்ளைக் கவரும் அளவிற்கு கூந்தல் வேண்டுமா!
, 278July 2012,
இன்றைய பெண்களின் கூந்தல் வளர்ச்சிக்கும், நறுமணத்திற்கும் எண்ணற்ற ஷாம்பு, கிரீம் என விற்பனைக்கு வந்துவிட்டன.
இவற்றின் வருகைக்கு முன்னரே பண்டைய காலத்தில் பூந்திக்கொட்டை, கரிசலாங்கண்ணி, மருதாணி என எண்ணற்ற மூலிகைகள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளனர்.
ஷாம்பு, சோப்பு போன்றவைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் ஒத்துக் கொள்ளாதவர்களுக்கு முடி கொட்டுவதை தவிர்க்கவும், கூந்தலின் வளர்ச்சிக்கும் இன்றைக்கும் அந்த மூலிகைகளை பயன்படுத்தலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
பூந்திக்கொட்டை: நாம் பயன்படுத்தும் குளியல்பொடி மற்றும் கேசப்பொடிகளில் இயற்கையின் கலவை அதிகமாக இருந்தால் தான் நமது தோலும், கேசமும் ஆரோக்கியமாக இருக்கும். கேசத்திற்கு பளபளப்பையும், தோலுக்கு வழுவழுப்பையும் தந்து நுரை பொங்க குளித்த திருப்தியை தரும் மூலிகை தான் பூந்திக்கொட்டை.
இதன் பழத்தோலில் உள்ள சப்போனின்கள், சப்பின்டோசைடுகள், ஹெடராஜெனின்கள் மற்றும் டெர்பினாய்டுகள் பூஞ்சை கிருமிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, தோலுக்கு பிரகாசத்தையும், மென்மையும் கொடுக்கின்றன.வீட்டில் ஏற்கனவே வேறு குளியல் பொடி உபயோகப்படுத்துபவர்கள் பத்தில் ஒரு பங்கு பூந்திக்கொட்டை பொடியை கலந்து கொள்ளலாம்.
பூந்திக்கொட்டையை லேசாக வறுத்து, மேற்தோலை உரித்து, இடித்து வைத்துக் கொண்டு அவ்வப்போது சோறு வடித்த கஞ்சி அல்லது சீயக்காய் தூளுடன் கலந்து தலையில் தேய்த்து, அலசி, குளித்து வரலாம்.உசிலை இலை, இலுப்பை பிண்ணாக்கு, ரோஜாப்பூ, செம்பரத்தை பூ, செம்பரத்தை இலைகள், சிகைக்காய், வெட்டிவேர், விளாமிச்சம் வேர், நன்னாரி, பூலாங்கிழங்கு, ஆவாரம்பூ, வெந்தயம், பூந்திக்கொட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து, சுத்தம் செய்து வெயிலில் நன்கு உலர்த்தி, நுண்ணியதாக அரைத்து, துணியில் சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இதை நீரில் கரைத்து சற்று நேரம் வைத்திருந்து பின் தலை மற்றும் உடலில் தேய்த்து குளித்துவர நுரை உண்டாகி, அழுக்கு நீங்கி, தோலும், கேசமும் சுத்தமடையும்.
கரிசலாங்கண்ணி: கூந்தல் வளர்ச்சிக்கு கரிசலாங்கண்ணி சிறந்த மூலிகையாகும். இந்த மூலிகைத் தைலம் கேச வளர்ச்சிக்கு உதவுவதோடு கூந்தல் உதிர்வதைத் தடுக்கும்.முடிகளின் வேர்களில் இந்த கூந்தல் தைலத்தை வைத்து மசாஜ் செய்வதன் மூலம் கூந்தல் வலுவடையும். உடல் குளிர்ச்சியடையும்.
வெந்தயம்: கூந்தலினை பட்டுப்போன்ற மென்மையாக்குவதில் வெந்தயம் சிறந்த மூலிகையாகும். வெந்தயத்தை இரவு நேரத்தில் ஊறவைத்து காலையில் அதனை மைய அரைத்து தலையில் ஊறவைத்து குளிக்கலாம். இதனால் தலைக்கு குளிர்ச்சி ஏற்படும். கூந்தல் பட்டுப்போல மாறும்
மருதாணி: கூந்தலை கருமையாக்குவதில் மருதாணி சிறந்த மூலிகை. இது இளநரையை தடுக்கும். கூந்தலில் பொடுகு ஏற்படாமல் தடுக்கும். கூந்தலின் வேர்களை வலுவாக்கி உதிர்வதை தடுக்கும்.
சோற்றுக் கற்றாழை: சிறந்த மூலிகையாக காணப்படும் சோற்றுக் கற்றாழை கூந்தல், சருமம் போன்றவற்றினை பாதுகாக்க பயன்படுகிறது. சோற்றுக் கற்றாழையின் உள்ளிருக்கும் சோற்றை எடுத்து தலையில் தேய்த்து வர முடி உதிர்ந்து வழுக்கையானவர்களுக்கு புதிய முடி முளைக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கூந்தலின் வறட்சியை போக்கி மென்மையாக்குவதில் சோற்றுக்கற்றாழை முக்கிய பங்காற்றுகிறது.




பல விதமான செய்திதொகுப்புகள்

28.07.2012பல விதமான செய்திதொகுப்புகள் உள்ள தொடர் செய்திகள் ஓர் பார் வையில்உள்ளது நீருக்கடியி​ல் நீந்தக் கூடி​ய நவீன ரோபோ கண்டுபிடிப்​பு

Zum vollständigen Artikel wechseln
ரோபோக்களை உருவாக்குவதில் அன்றாடம் புதிய முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் விஞ்ஞானிகள் தற்போது நீருக்கு அடியில் நீச்சல் போடக்கூடிய அதி நவீன ரோபோவை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளனர். மேன்டாபாட் என அழைக்கப்படும் இந்த ரோபோவை பற்றி கருத்துத் தெரிவித்த வேர்ஜினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஹிலாரி பார்ட் ஸ்மித் கூறுகையில், ரோபோக்களின் உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள இந்த ரோபோவானது எதிர்காலத்தில் கடலடி ஆராய்ச்சிகள் பலவற்றிலும் பெரும் உதவியாக இருக்கும் எனத் ...

போன் பொம்மை

Zum vollständigen Artikel wechseln
ஸ்மார்ட் பெட் என்ற அடையாளத்தோடு ஜப்பானில் அறிமுகமாகியுள்ள எந்திர நாய் பொம்மை இது பிரபல பொம்மை தயாரிப்பு நிறுவனமான பாண்டாய் உருவாக்கியுள்ள இந்த நாய் பொம்மை யில், ஒரிஜினல் நாயின் முகத்துக்குப் பதிலாக ஆப்பிள் ஐபோன் வைக்கப்பட்டுள்ளது. இந்த நாயை குரைக்க வைக்கலாம், ஓட வைக்கலாம், அழச் செய்யலாம். ஐபோனின் திரை யில் ஒளிரும் ஐகான்களை இயக்கி, கட்டளைகளைப் பிறப்பித்தால் போதும் டோக்கியோவில் நடைபெற்ற சர்வதேச பொம்மை கண்காட்சியில் புதுமையான பொம்மை என்ற விருதைப் பெற்றிருக்கிறது இந்த போன் ...

மும்பையில் குடிநீர் வெட்டு 20 சதவீதமாக அதிகரிக்கப்படுமா?

Zum vollständigen Artikel wechseln
சி.எஸ்.டி: மும்பையில் 20 சதவீத குடிநீர் வெட்டை அமல்படுத்துவது குறித்துÞ இன்று நடக்கும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது. மும்பையில் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு இன்னும் பருவமழை பெய்யவில்லை. இதனால் மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் குடிநீர் மட்டம் கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. இதையடுத்து ஏற்கனவே 10 சதவீதம் குடிநீர் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை மேலும் 10 சதவீதம் அதிகரிக்க மாநகராட்சி பரிசீலித்து வருகிறது. இது பற்றிய முடிவு இன்று நடக்கும் கூட்டத்தில் எடுக்கப்பட ...

புதிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களை அறிமுகப்படுத்த பஜாஜ் ஆட்டோ திட்டம்

Zum vollständigen Artikel wechseln
அதிக சக்தி கொண்ட புதிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கேடிஎம் டியூக் 200 பைக் விற்பனையில் நல்ல முன்னேற்றம் கணடு வருகிறது. மாதத்திற்கு 1000 பைக்குகள் விற்பனையாகிறது. இதனால், உற்சாகமடைந்துள்ள பஜாஜ் ஆட்டோ தற்போது கேடிஎம் பிராண்டில் மேலும் புதிய மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. டியூக் வரிசையில் 125சிசி மற்றும் 375சிசி பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வர அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்த இரு பைக் மாடல்களும் ஏற்கனவே ஐரோப்பிய ...

சான்ட்ரோ கார் உற்பத்தியை நிறுத்த ஹூண்டாய் முடிவு

Zum vollständigen Artikel wechseln
விற்பனை சரிந்து வருவதால் தனது வெற்றிகரமான மாடலான சான்ட்ரோ கார் உற்பத்தியை முற்றிலும் நிறுத்திவிடுவதற்கு ஹூண்டாய் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹூண்டாயின் முதல் கார் மாடலான சான்ட்ரோ கடந்த 1998ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் குறுகிய காலத்தில் மார்க்கெட்டில் பெரிய வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, 2003ஆம் ஆண்டு சான்ட்ரோ ஸிங் மேம்படுத்தப்பட்ட மாடலை ஹூண்டாய் அறிமுகப்படுத்தியது. சான்ட்ரோவின் வெற்றி தொடர்ந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு இயான் என்ற புத்தம் புதிய சிறிய காரை ஹூண்டாய் அறிமுகம் செய்தது. கவர்ச்சியான ...

எங்கிருந்தாலும் மொபைலை சார்ஜ் செய்ய மினி சார்ஜர் அறிமுகம்

Zum vollständigen Artikel wechseln
இக்காலத்தில் மொபைல் போன்களின் பயன்பாடுகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதில் இருக்கும் ஒரு சிறிய குறைபாடு என்னவென்றால் விரும்பும் நேரத்தில் பேட்டரியை சார்ஜ் செய்துக்கொள்ள இயலுவது இல்லை. ஆனால் இந்தக் குறையை நீக்குவதற்காக போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஒரு சிறிய மொபைல் சார்ஜைரை களமிறக்கி இருக்கிறது. இந்த சார்ஜருக்கு சார்ஜ் எக்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. சிறிய வடிவில் இருக்கும் எந்த சார்ஜரை வெளியில் போகும் போது எளிதாக எடுத்தச் செல்ல முடியும். இந்த சார்ஜ் எக்ஸில் 5,600 எம்ஏஎச் லித்தியம் பாலிமர் பேட்டரி இருக்கிறது. அதோடு இதில் 2 யுஎஸ்பி ...

அக்டோபரில் விண்டோஸ்8 வெளியீடு : மைக்ரோசாஃப்டு நிறுவனம்

Zum vollständigen Artikel wechseln
புதிய இயங்குதளத்ததினை வருகிற அக்டோபர் மாதம் வெளியிடுவதாக மைக்ரோசாஃப்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்றைய முன் தினம் உலகளவிலான பங்குதாரர் கண்காட்சி கனடாவில் உள்ள டோரன்டோவில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது புதிய இயங்குதளமான விண்டோஸ்-8 வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது.இந்த கண்காட்சி 12ஆம் தேதி வரை நடைபெறும். இந்த இயங்குதளம் கொண்ட பிசி கம்ப்யூட்டர்கள் தயாரிக்கும் வேலைகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது. இந்த வேலைகள் ஓரளவு முடிந்து வெளியாகும் தருவாயில் உள்ளது. இருப்பினும் கடைசிகட்ட ...

பல மாடல் கார்களை அறிமுகப்படுத்திய மஹிந்திரா நிறுவனம்

Zum vollständigen Artikel wechseln
கென்யாவில் எக்ஸ்யூவி, ஸ்கார்ப்பியோ உள்ளிட்ட பல மாடல்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது மஹிந்திரா. சர்வதேச வர்த்தகத்தை விரிவாக்கி வரும் மஹிந்திரா நிறுவனம் ஆப்ரிக்க மார்க்கெட்டுகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. தென் ஆப்ரிக்காவில் ஏற்கனவே எக்ஸ்யூவி உள்ளிட்ட கார்களை விற்பனை செய்து வரும் அந்த நிறுவனம் தற்போது கென்ய மார்க்கெட்டில் ஒரே நேரத்தில் ஏராளமான மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.எக்ஸ்யூவி 500, ஸ்கார்ப்பியோ, பிக்கப் டிரக்குகள், மேக்ஸிமோ மினி டிரக் மாடல்கள் அங்கு விற்பனைக்கு வந்துள்ளது. சிம்பா நிறுவனம் கென்யாவில் மஹிந்திரா ...

ஆப்பிளின் மினி ஐபேட் அறிமுகம்

Zum vollständigen Artikel wechseln
அப்பிளின் அனைத்து ஐபேட்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது விலை குறைந்த சிறிய ஐபேட் ஒன்றினை வெளியிட அப்பிள் திட்டமிட்டுள்ளது. இதற்கு ஐபேட் மினி என பெயரிப்படலாம் எனவும், இந்தாண்டின் இறுதியில் இந்த ஐபேட் வெளியிடப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் அங்குலத்திரை 7அல்லது 8ஆக இருக்குமெனவும், 9.7 அங்குல ரெட்டினா திரையைக் கொண்டிருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ரெட்டினாக்கு பதிலாக சார்ப் நிறுவனத்தின் டிஸ்ப்ளே உபயோகப்படுத்தப்படலாம். ஐபேட் மினியின் மற்றைய தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பான தகவல்கள் ...

ஸ்மார்ட்போன்களுக்கு நோக்கியாவின் சாஃப்ட்வேர் அப்டேஷன்

Zum vollständigen Artikel wechseln
நோக்கியா நிறுவனம் லுமியா 800 மற்றும் லுமியா 710 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய சாஃப்ட்வேர் அப்டேஷன் வசதியினை வழங்குகிறது. இந்த சாஃப்ட்வேர் அப்டேஷன் மூலம், ஒரே நேரத்தில் 5 மின்னணு சாதனங்களில் 3ஜி வசதியினை பெறலாம் என்பது தான் இதன் சிறப்பு. ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் நுட்ப சாதனங்களை இணைக்க வேண்டும் என்றால் அதற்கு ரூட்டர் கருவி தேவைப்படுகிறது. ஆனால் நோக்கியா வழங்கும் இந்த சாஃப்ட்வேர் அப்டேஷன் மூலம் நான்கு, ஐந்து மின்னணு சாதனங்களிலும் எளிதாக ஒரே நேரத்தில் 3ஜி வசதியை பயன்படுத்தலாம். நோக்கியா வழங்கும் இந்த சாஃப்ட்வேர் அப்டேஷன் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக ...

அட்டகாசமான விலையில் நோக்கியா ஆஷா மொபைல்கள்

Zum vollständigen Artikel wechseln
நோக்கியா ஆஷா வரிசை மொபைல்களில் 202 மற்றும் 302 என்ற இந்த மொபைல்களின் விலை விவரங்கள் வெளியாகி உள்ளது. நோக்கியாவின் ஆஷா வரிசை மொபைல்கள் மக்கள் மத்தியில் அதிகம் பிரசித்தம் பெற்றது. அந்த வகையில் இங்கு இரண்டு ஆஷா மொபைல்களின் தொழில் நுட்ப விவரங்களையும், அதன் விலை பட்டியல் பற்றிய விவரங்களையும் பார்க்கலாம். 2.4 இஞ்ச் திரை கொண்ட ஆஷா- 202 மொபைலின் திரையின் மூலம் சிறந்த தகவல்களை தெளிவாக பார்க்கலாம். கவர்ச்சிகரமான இந்த மொபைல் 10 எம்பி வரை இன்டர்னல் மெமரியினை கொண்டது. ஆஷா -202 மொபைல் 2.0 மெகா பிக்ஸல் கேமராவினையும் கொடுக்கும். ஆஷா-202 மொபைலில் 32 ஜிபி வரை இதன் மெமரி வசதியினை ...

கூகுளின் புதிய டேப்லட் அறிமுகம்

Zum vollständigen Artikel wechseln
உலகப் புகழ் பெற்ற கூகுள் இணையதள நிறுவனமானது ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், அமேசான் நிறுவனங்களுக்கு போட்டியாக தனது முதல் டேப்லட்டை அறிமுகம் செய்துள்ளது. சான்ஃப்ராசிஸ்கோவில் நேற்று நடைபெற்ற கூகுள் டெவலப்பர் மாநாட்டில் கூகுள் நிறுவனம் புதிய வகை டேப்லெட்டையும், ஆண்ட்ராய்டின் அடுத்த பதிப்பான ஜெல்லிபீன் என்னும் புதிய மென்பொருளையும் அறிமுகப்படுத்தி உள்ளது. நெக்சஸ் 7 என பெயரிடப்பட்டுள்ள இந்த டேப்லட், ஆசஸ் எனப்படும் வன்பொருள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, 7 அங்குல திரை அகலம் கொண்ட இந்த டேப்லட்டானது, கூகுளின் ஜெல்லிபீன் ...

பாதுகாப்பான இணையத்தள தேடலுக்கு குகூன்

Zum vollständigen Artikel wechseln
பாதுகாப்பான இணையத்தள தேடலை மேற்கொள்வதற்கு குகூன் என்ற இணையத்தளம் உதவி புரிகிறது. இந்த தளத்தின் மூலம் நீங்கள் தேடும் போது உங்களால் தேடப்பட்ட செய்திகளோ, இணையதளங்களோ குக்கீஸ் மூலம் உங்கள் இணைய செயல்பாடுகளை கண்காணிக்க முடியாமல் செய்கிறது. இதன் மூலம் உங்களை பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுவதையும் தடுக்கிற‌து. அத்துடன் மட்டுமல்லாமல் இணையம் மூலம் வைரஸ் மற்றும் மால்வேர் போன்றவை உள்ளே வராமலும் இது தடுக்கிற‌து. மேலும் ஒரு மாற்று மின்னஞ்சலையும் உருவாக்கி தந்து குப்பை மின்னஞ்சல்களில் இருந்தும் ...

கணினி விளையாட்டில் புதிய தொழில்நுட்பம்

Zum vollständigen Artikel wechseln
பொழுதுபோக்கிற்காகவும், மூளை விருத்தியை அதிகரிக்கவும் அதிகமானவர்களால் கணினி விளையாட்டுக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் நாளுக்கு நாள் கணினி விளையாட்டானது புதிய தொழில்நுட்பங்கள் உட்புகுத்தப்பட்டு மெருகூட்டப்பட்டு வருகின்றது. இம்மாற்றங்களின் அடிப்படையில் தற்போது கணினி விளையாட்டுக்களைக் கட்டுப்படுத்துவதற்கென புளூடூத் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய தொடுதிரைக் கட்டுப்படுத்திகள் உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ரிங்போவ் என அழைக்கப்படும் இந்த நவீன தொழில்நுட்பமானது அன்ராயிட் சாதனங்கள் மற்றும் ஐ.ஓ.எஸ் சாதனங்கள் ...

மைக்ரோசாஃப்ட்டின் புதிய டேப்லெட் அறிமுகம்

Zum vollständigen Artikel wechseln
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆப்பிளின் ஐபேடுக்கு போட்டியாக சர்ஃபேஸ் எனப்படும் புதிய டேப்லெட் கணினியை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த நிகழ்ச்சியில் மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மர் இதை அறிமுகப்படுத்தினார். விண்டோஸ் 8 இயக்க அமைப்பில் செயல்படக்கூடிய இந்த டேப்லெட்டுகள், ஏற்கெனவே சந்தையை ஆக்கிரமித்திருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேடை குறிவைத்து உருவாக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. தனது சொந்தத் தயாரிப்பான மைக்ரோசாப்ட் ஆபீஸ் மற்றும் அடோப் நிறுவனத்தின் ...

பறக்கும் ரோபோக்கள் கண்டுபிடிப்பு

Zum vollständigen Artikel wechseln
வான் வழிப் பயணங்களின் போது ஏற்படும் விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக ரோபோ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய பறக்கும் கருவி ஒன்றை சுவிஸ் ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது தூசு துணிக்கைகள், ஏனைய வான்பொருட்களுடன் மோதும் சந்தர்ப்பங்களில் தானாகவே பறப்பை நிறுத்தி மீண்டும் சாதகமான நிலைமை ஏற்படும்போ-து, பறக்கும் தன்மையைக் கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றது. இந்த ரோபோவை ஆபத்து மிக்க பகுதிகளான குகைகள், அணு ஆராய்ச்சி தொடர்பான பகுதிகளில் பயன்படுத்த முடியும் என அதனை வடிவமைத்த ஆராச்சியாளர்கள் ...

கேம்களுக்காக பிரத்யேகமான மவுஸ்கள்

Zum vollständigen Artikel wechseln
சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை தமது ஆற்றல்களை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு, தற்போது கணினி விளையாட்டுக்களில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்றவர்களை மையமாக வைத்து கணினி விளையாட்டுகளும், அவற்றிற்கான சாதனங்களும் நாளுக்கு நாள் மேம்படுத்தப்பட்டும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டும் வருகின்றன.இதனடிப்படையில், தற்போது 20 பட்டன்களைக் கொண்ட ஜி600 மவுஸ்கள் கணினி விளையாட்டிற்கென பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் தற்போது கிடைக்கக்கூடியதாக உள்ள மவுஸ்கள் 6.5 அடிகள் நீளமான கேபிள்களை இணைத்து இயக்கக்கூடியன. ...

பாதுகாப்புக்கு பயன்படும் லேசர் அறிமுகம்

Zum vollständigen Artikel wechseln
லேசர் பயன்படுத்தி சுற்றுப்புறத்தை பாதுகாக்கும் ஒரு முறை விரைவில் அறிமுகமாக இருக்கிறது. வீடு ஒன்றின் பாதுகாப்பிற்காக பலகை, இரும்பு போன்றவற்றால் கதவு, ஜன்னல் என்பவற்றை அமைத்தாலும் இன்றைய தொழில்நுட்ப உலகில் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. எனவே அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முன்கூட்டியே எச்சரிக்கைகளைப் பெற்று செயற்படுவது மிகச் சிறந்ததாகும். இதன் அடிப்படையில் லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் வீட்டின் சுற்றுப்புறத்தில் நிகழும் மற்றவர்களின் நடமாட்டங்களை துல்லியமாக அறிந்து நடவடிக்கை எடுக்க ...

பெண்களின் மார்பக புற்று நோயை காட்டிக்கொடுக்கும் ரத்த பரிசோதனை

Zum vollständigen Artikel wechseln
மார்பக புற்றுநோய் உருவாவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே எளிய இரத்த பரிசோதனை மூலம் கண்டறியமுடியும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இத்தகைய பரிசோதனைகள் மூலம் குறிப்பிட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரக்கூடும் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கமுடியும் என்று இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.கேன்சர் ரிசர்ச் என்கிற மருத்துவ தேடலில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. லண்டனில் இருக்கும் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் ஜேம்ஸ் பிளானகன் தலைமையிலான ...

எச்.ஐ.வியை வீட்டிலேயே கண்டுபிடிக்கும் கருவி

Zum vollständigen Artikel wechseln
எச்.ஐ.வியை வீட்டிலேயே சோதனை செய்து கொள்வதற்கான கருவியை விற்பனை செய்வதற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளின் குழு ஒன்று பரிந்துரைத்துள்ளது. ஒராகுயிக் என்னும் பெயரிலான இந்த கருவியை, வாயில் தடவி எடுப்பதன் மூலம் ஏதாவது நோய்க்கிருமிகள் உடலில் இருக்கிறதா என்பதை 20 நிமிடங்களில் அறிந்துகொள்ள முடியும்.உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் இது அங்கீகரிக்கப்பட்டால், எச்.ஐ.வியை உடனடியாக வீட்டிலேயே சோதனை செய்துகொள்வதற்கான முதலாவது கருவியாக இது இருக்கும். இந்தக் கருவியின் மூலமான சோதனை முடிவுகள் 100 சதவீதம் துல்லியமானவை என்று