siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 31 மே, 2022

அவுஸ்திரேலியாவில் இலங்கையில் வளர்ந்து வரும் நடிகையொருவர் அழகிப் போட்டியொன்றில் வெற்றி

இலங்கையில் வளர்ந்து வரும் நடிகையொருவர் அவுஸ்திரேலியாவின் அழகிப் போட்டியொன்றில் வெற்றி பெற்றுள்ளார்.
இதற்கான போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தேசிய மட்டப் போட்டியில் இலங்கை சிங்கள தொலைக்காட்சி நாடக நடிகையொருவர் வெற்றி பெற்றுள்ளார்.
இலங்கையை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஜனிதா பெரேரா எனும் மாடல் அழகியே இவ்வாறு அழகிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டிகள் வரும் டிசம்பர் மாதம் ஸ்பெயினின் சான் ஜோஸ் நகரில் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் அழகிக்கு கடந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற இந்திய அழகி ஹர்னாஸ் சந்து கிரீடம் சூட்டவுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



வெள்ளி, 27 மே, 2022

தொடர்ந்து இலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் வாக்குறுதி

இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையில் இருந்து மீண்டு வருவதற்காக இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் மீண்டும் அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டம் தொடர்பான தொழில்நுட்ப கலந்துரையாடலின் ஒரு கட்டத்தை முடித்துக் கொண்டதன் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதற்கமைய, நிலையான முறைகள் அடங்கிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு ஏனைய தரப்பினரின் ஆதரவுடன் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் 
தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு ஆதரவளிக்கும் ஒரு வேலைத்திட்டத்திற்கு கடன் நிலைத்தன்மை மீளமைக்கப்படும் என்பதற்கான போதுமான உத்தரவாதம் அவசியமாகும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



ஞாயிறு, 22 மே, 2022

அசத்தல் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலியா தேர்தலில் இலங்கைப் பெண்

அவுஸ்திரேலிய தேர்தலில் இலங்கை வம்சாவளி பெண் ஒருவர் அமோக வெற்றி பெற்றுள்ளார்.அவுஸ்திரேலிய தேர்தலில் தொழிற்கட்சி வேட்பாளர் கசாண்ட்ரா பெர்னாண்டோ வெற்றி பெற்றார். அவர் இலங்கையைச் சேர்ந்த ரங்கே பெரேராவை (லிபரல்) தோற்கடித்ததாக 
கூறப்படுகிறது.
வில்ஸ் பகுதியில் கசாண்ட்ரா பெர்னாண்டோ போட்டியிடுகிறார். அவர் சமையல் துறையில் நன்கு அறியப்பட்ட சமையல்காரர். கசாண்ட்ரா ஒரு பெருமைமிக்க வெளிநாட்டவர், பேஸ்ட்ரி செஃப். அத்தியாவசியத் தொழிலாளர்களுக்கான வழக்கறிஞர் 
தேர்தல் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவர் தனது 11 வயதில் தனது குடும்பத்துடன் அவுஸ்திரேலியா சென்றார்.
அன்றிலிருந்து அவர் மெல்போர்னில் வசித்து வருகிறார். அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வரலாற்றை கசாண்ட்ரா பெர்னாண்டோ படைக்கவுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




வெள்ளி, 20 மே, 2022

இலங்கையர் களமிறங்கும் அவுஸ்திரேலியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் கூட்டாட்சி தேர்தலில்

அவுஸ்திரேலியாவின் 47வது நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் கூட்டாட்சி தேர்தலில் அவுஸ்திரேலியாவில் உள்ள Skullin தொகுதியில் இலங்கையர் ஒருவர் போட்டியிடுகிறார்.
மருதானை புனித ஜோசப் கல்லூரியின் பழைய மாணவரும் மொரட்டுவையை வதிவிடமாகவும் கொண்ட விரோஷ் பெரேரா அவுஸ்திரேலியாவில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
விரோஷ் வணிக மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்தல் துறையில் விரிவுரையாளர் மற்றும் ஆராய்ச்சியாளராக 13 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்.
நாளை (21) தேர்தல் நடைபெற உள்ளது தான் ரே்தலில் போட்டியிடுவது தொடர்பில் விரோஷ் தெரிவிக்கையில், ‘
விக்டோரியா மாகாணத்திற்கு 38 லிபரல் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் நானும் ஒருவன். எனது திறமைகள் மற்றும் தொழில்முறை திறன்களின் அடிப்படையில் நான் லிபரல் கட்சிக்கு மதிப்புமிக்க நபராக இருப்பேன் என்று நம்புகிறேன். கடந்த காலத்திலும் இதே எம்.பி.க்கள் குழுவே ஆசனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியது.
நமக்கு மாற்றம் வேண்டும். ஸ்கல்லின் தொகுதியில் மக்கள் சுதந்திரமாகவும் அமைதியாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்குவதுடன், வாழ்க்கைச் செலவைக் குறைப்பது, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது மற்றும் குடும்பங்களின் சமூக மதிப்பைப் பாதுகாப்பது என்பவற்றை நான் செய்வேன் என நம்புகிறேன், ”என்று விரோஷ் கூறினார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



திங்கள், 16 மே, 2022

மூன்று நாட்களில்வட கொரியாவில் எட்டு இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று

வட கொரியாவில் 3 நாட்களில் மட்டும் 8,20,620 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.உலகையே ஆட்டிப்படைத்துவரும் கொரோனா வைரஸ் பல நாடுகளில் கடும் பாதிப்பை
 ஏற்படுத்தின. ஆனால் இரும்புத்திரை நாடாக வர்ணிக்கப்படும் வடகொரியாவில் எந்த பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. வட கொரியாவில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாக பதிவு செய்யப்படவில்லை என உலக சுகாதார நிறுவனம் கூறியது.
ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் சீனா தயாரித்த சினோவாக் தடுப்பூசிகள் வடகொரியாவுக்கு வழங்கப்பட்டன. இதனால் சீனா தங்களுக்கு வழங்கிய சுமார் 30 லட்சம் எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பூசிகளை
 வேறு நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிடுமாறு
 வடகொரியா கேட்டுக் கொண்டது.யாருக்குமே கொரோனா இல்லாததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என வடகொரியா அதிபர் கிம் 
ஜாங் உன் அறிவித்தார்.
இந்நிலையில் எளிதில் பரவக் கூடிய ஒமைக்ரோன் வகை கொரோனா தொற்று காரணமாக வட கொரியாவில் முதல் கொவிட் -19 பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு
 வருகின்றது.
சீனாவுடனான வர்த்தக உறவினால் இந்த கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று முதலில் கூறப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் நடந்த பிரமாண்ட இராணுவ அணிவகுப்பின் மூலமாகவே கொரோனா பரவியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா காரணமாக இதுவரை சுமார் 10 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை 1,74,440 பேருக்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் இதுவரை 21 பேர் பலியாகியுள்ளனர். இந்தநிலையில் 3 நாட்களில் மட்டும் 820,620 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதில் 3.2 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். ஞாயிறன்று காய்ச்சலால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் அனைத்து மாகாணங்கள், நகரங்கள் மற்றும் மாவட்டங்கள் முற்றிலுமாக ஊரடங்கில் உள்ளன. அலுவலகங்கள், உற்பத்தி அலகுகள் மற்றும் குடியிருப்புகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வகையில் தடுக்கப்பட்டுள்ளன. நோய் பரவுவதை தடுக்க அவசரகால அதிகபட்ச தனிமைப்படுத்தல் அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



திங்கள், 2 மே, 2022

நியூசிலாந்து இலங்கைக்கு பால் மற்றும் விலங்கு பொருட்களுக்கு சலுகைக் கடன் திட்டம்

இலங்கையில் பால் மற்றும் விலங்கு பொருட்களுக்கு சலுகைக் கடன் திட்டங்களை வழங்க நியூசிலாந்து முன்வந்துள்ளது.
நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மற்றும் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த முடிவு 
எட்டப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் பொருளாதார மற்றும் அபிவிருத்தி உறவுகளை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>