கொலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை பேபி ஷாலினி. |
பின்னர் காதலுக்கு மரியாதை படம் மூலம் நடிகையாக அறிமுகமான ஷாலினி ரசிகர்களின்
மனதில் நீங்கா இடம்பிடித்தார். அதன்பின்னர் சில படங்களில் நடித்த ஷாலினி கொலிவுட்டில் அல்டிமேட் ஸ்டார் என்று கூறப்படும் அஜித்குமாரை மணந்து கொண்டு திரையுலகை விட்டு விலகினார். அவ்வப்போது சில விழாக்களில் மட்டுமே தலைகாட்டி வந்த ஷாலினி பேட்மின்டன் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். கடந்த ஞாயிறன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பேட்மின்டன் பிரிவில் வென்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது நாகர்கோவிலில் நடைபெற உள்ள தேசிய அளவிலான பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்க உள்ளார். உறுதியாக ஷாலினி முதலிடத்தை பிடிப்பார் என்று விளையாட்டு வட்டாரங்கள் கூறுகின்றனர் |
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012
தேசிய அளவிலான பேட்மின்டன் போட்டியில் பங்கேற்கும் நடிகை ஷாலினி அஜித்
செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012
செய்திகள்
ஹரிதாஸ் படம் சினேகாவுக்கு விருதை பெற்றுத்தரும்: ஜி.என்.ஆர் குமரவேலன்
செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012
தகவல்கள்
21.08.2012.
நினைத்தாலே இனிக்கும் படத்தின் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கியுள்ள படம் ஹரிதாஸ். |
இப்படத்தில் நாயகனாக கிஷோரும், நாயகியாக சினேகாவும் நடித்துள்ளனர். பிரசன்னாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே, இந்தப் படத்தில், ஒப்பந்தமான சினேகா, திருமணத்துக்கு பின்பும், சில நாட்கள் இதன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். மேலும், என் கேரியரில், ஹரிதாஸ் முக்கியமான படமாக இருக்கும், என்று சொல்லி, ரஜினியின், கோச்சடையான் படத்திலிருந்து கூட வெளியேறினார். படம் குறித்து இயக்குனர் குமரவேலன் கூறுகையில், இந்த படத்தில் சினேகாவுக்கு, ஆசிரியை வேடம். அது மிக வலுவான கதாபாத்திரம். இதுவரை சினேகா நடித்த வேடங்களில், இது சிறப்பாக இருக்கும். குறிப்பாக, அவர் நடிப்புக்கு விருது கிடைக்க கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றும் அந்த அளவுக்கு அற்புதமாக நடித்திருக்கிறார் எனவும் கூறியுள்ளார் |
திருத்தணி படத்தின் இசை குறுந்தகடை வெளியிட்டார் இயக்குனர் பாக்யராஜ்
செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012
தகவல்கள் புகைப்படங்கள்
பாஸ்கர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பேரரசு இயக்கியுள்ள படம் திருத்தணி. |
இதில் 'சின்ன தளபதி' பரத், சுனைனா இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள்.
படத்துக்கு பாடல்களை எழுதி, இயக்குனர் பேரரசு இசையமைத்துள்ளார். திருத்தணி படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நடந்தது. இதில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு படம் வெற்றியடைய வாழ்த்தியுள்ளார்கள். விழாவில் திருத்தணி பட நாயகன் பரத், 'போராட்டங்களையும் பிரச்சினைகளையும் சந்தித்த 'திருத்தணி' படம் விரைவில் வெளியாகிறது' என்றார். திருத்தணி படத்தின் இசை குறுந்தகடை இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட, தமிழ்நாடு படத்தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ சந்திரசேகர் பெற்றுக்கொண்டார். விழாவில் இயக்குனர் முருகதாஸ், எஸ்.ஜே.சூர்யா, ஜெயம் ராஜா, அருண் விஜய், ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் 'திருத்தணியை' வாழ்த்தி பேசினார்கள். |
அண்ணன்- தம்பி பற்றிய கதையே நகர்ப்புறம்
செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012
செய்திகள்
கொலிவுட்டில் ஜி.டி. பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் டி. ஆறுமுகம் தயாரித்துள்ள படம் நகர்ப்புறம். |
இப்படத்தில் கல்லூரி, வால்முகி படங்களில் நடித்த அகில் நாயகனாகவும், ஸ்ரீதிவ்யா
என்ற புதுமுக நடிகை நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர மனோபாலா, டி.பி. கஜேந்திரன், மனோகர், மீரா கிருஷ்ணன், கருத்தபாண்டி, சத்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனர் என்.பி சாரதி கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார். இவர் வைத்தீஸ்வரன் தம்பிக்கோட்டை போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். இப்படம் குறித்து இயக்குனர் சாரதி கூறுகையில், சென்னையில் நடுத்தர குடும்பத்தில் வாழும் அண்ணன், தம்பி இருவரும் வேறுபட்ட எண்ணங்களும், செயல்களும் கொண்ட குணாதிசயங்களை உடையவர்கள். அவர்களின் எண்ணம், செயல் வேறுபட்ட போதிலும், ஒருவருக்கொருவர் காட்டும் அன்பில் விட்டுக் கொடுக்காதவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை முறை, அதில் ஏற்படும் பிரச்சனைகள், காதல், அதில் ஏற்படும் பிரச்சனைகள் ஆகியவற்றை மையமாக வைத்து உருவாகும் கதை தான் நகர்ப்புறம் என்றார் |
சத்திராஜ் வெளியிட்ட 'இப்படிக்கு தோழர் செங்கொடி' ஆவண படம்
செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012
செய்திகள்
மரண தண்டனைக்கு எதிராக 'இப்படிக்கு தோழர் செங்கொடி' என்ற ஆவண படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. |
தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்ற இந்த
விழாவில் ஆவணப்படத்தின் சிடியை திரைப்பட நடிகர் சத்யராஜ் வெளியிட, பேரறிவாளனின்
தாயார் அற்புதம்மாள் அதனை பெற்றுக்கொண்டார். விழாவில் சத்யராஜ் பேசுகையில், இது ஒரு நடிகருக்காக கூடிய கூட்டமல்ல முத்துக்குமாரின் தியாகத்தை புரிந்துகொண்ட கூட்டம். செங்கொடியின் தியாயத்தை புரிந்து கொண்ட கூட்டம். மாவீரன் பிரபாகரனின் தியாகத்தை புரிந்துகொண்ட கூட்டம். இந்த படத்தில் சினிமா என்பதையும் தாண்டி செங்கொடியின் தியாகம் மட்டும்தான் தெரிகிறது. அதனால் தான் சினிமாவுக்குள் இருக்கிற எனக்கு எதுவும் தெரியவில்லை. சினிமாவுக்கு வெளியே இருக்கிற மணியரசன் அவர்களுக்கு தெரிகிறது. அதுதான் இந்தப் படத்தினுடைய வெற்றி என சத்தியராஜ் தெரிவித்தார் |
மட்டு.வில் க.பொ.த (உ/த) மாணவன் கடத்தப்பட்டு விடுவிப்பு
செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012
செய்திகள்
21.08.2012.காத்தான்குடி 05ஆம் குறிச்சி அப்துல் மஜீத் ஆலிம் வீதியைச் சேர்ந்த க.பொ.த (உஃத)
மாணவன் குத்தூஸ் முஹம்மட் அப்சர் (வயது 18) நேற்றிரவு (2012-08-20) 09.30 மணியளவில்
இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு மயக்க நிலையில் இன்று காலை
விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாண்டு கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சையில் வணிகப் பிரிவில் தோற்றி பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் இம்மாணவன் நேற்று இரவு 09.15 மணியளவில் காத்தான்குடி கேணி லேனிலுள்ள மஸ்ஜிதுஸ் ஸைனப் பள்ளிவாயலுக்கு இஸாத் தொழுகைக்காக சென்று தொழுது விட்டு பள்ளியை விட்டு வெளியேறும் போது சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
குறித்த மாணவன் நேற்று இரவு 09.15 மணியளவில் மோட்டார் சைக்கிளில்(ஸ்கூட்டி பஃப்) காத்தான்குடி கேணி லேனிலுள்ள மஸ்ஜிதுஸ் ஸைனப் பள்ளிவாயலுக்கு இஸாத் தொழுகைக்காக சென்று தொழுது விட்டு பள்ளியை விட்டு வெளியே வந்த போது அவ்விடத்திற்கு வந்த சிலர் அவரை அவர்களுடைய மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றுள்ளதாகவும் அதிகாலை வரை அவரை விடுவிக்காது இன்று காலை சுமார் 07.00 மணியளவில் குறித்த மாணவனின் உறவினர்கள் தேடிச்சென்றுள்ள போது காத்தான்குடி 05 டாக்டர் பரீட்டின் டிஸ்பென்சரிக்கு முன்னால் குறித்த மாணவனை மயக்க நிலையில் கண்டு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதாகவும் இதுவரையில் அவர் மயக்க நிலையிலேயே காணப்படுவதாகவும் அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த மாணவர் தாக்கப்பட்டுள்ளார் எனவும் இவரின் மோட்டார் சைக்கிளை ஸைனப் பள்ளிக்கு அருகில் பெற்றுக் கொண்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக மாணவனின் தந்தை குத்தூஸ் கருத்துத் தெரிவிக்கையில்,
மாணவன் மயக்க நிலையில் உள்ளதாகவும் உண்மையில் என்ன நடந்தது என்பதைச் சரியாக அறியமுடியாதுள்ளதாகவும் இவர் உயர் தர மாணவன் என்பதால் இவரது படிப்பைக் கெடுப்பதற்கு இது மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
குறித்த மாணவன் இன்று அதிகாலை வரை வீடு திரும்பாததால் மாணவனின் வீட்டார் நேற்றிரவு நித்திரையின்றி பதற்ற நிலையில் இருந்துள்ளனர்
இவ்வாண்டு கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சையில் வணிகப் பிரிவில் தோற்றி பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் இம்மாணவன் நேற்று இரவு 09.15 மணியளவில் காத்தான்குடி கேணி லேனிலுள்ள மஸ்ஜிதுஸ் ஸைனப் பள்ளிவாயலுக்கு இஸாத் தொழுகைக்காக சென்று தொழுது விட்டு பள்ளியை விட்டு வெளியேறும் போது சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
குறித்த மாணவன் நேற்று இரவு 09.15 மணியளவில் மோட்டார் சைக்கிளில்(ஸ்கூட்டி பஃப்) காத்தான்குடி கேணி லேனிலுள்ள மஸ்ஜிதுஸ் ஸைனப் பள்ளிவாயலுக்கு இஸாத் தொழுகைக்காக சென்று தொழுது விட்டு பள்ளியை விட்டு வெளியே வந்த போது அவ்விடத்திற்கு வந்த சிலர் அவரை அவர்களுடைய மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றுள்ளதாகவும் அதிகாலை வரை அவரை விடுவிக்காது இன்று காலை சுமார் 07.00 மணியளவில் குறித்த மாணவனின் உறவினர்கள் தேடிச்சென்றுள்ள போது காத்தான்குடி 05 டாக்டர் பரீட்டின் டிஸ்பென்சரிக்கு முன்னால் குறித்த மாணவனை மயக்க நிலையில் கண்டு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதாகவும் இதுவரையில் அவர் மயக்க நிலையிலேயே காணப்படுவதாகவும் அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த மாணவர் தாக்கப்பட்டுள்ளார் எனவும் இவரின் மோட்டார் சைக்கிளை ஸைனப் பள்ளிக்கு அருகில் பெற்றுக் கொண்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக மாணவனின் தந்தை குத்தூஸ் கருத்துத் தெரிவிக்கையில்,
மாணவன் மயக்க நிலையில் உள்ளதாகவும் உண்மையில் என்ன நடந்தது என்பதைச் சரியாக அறியமுடியாதுள்ளதாகவும் இவர் உயர் தர மாணவன் என்பதால் இவரது படிப்பைக் கெடுப்பதற்கு இது மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
குறித்த மாணவன் இன்று அதிகாலை வரை வீடு திரும்பாததால் மாணவனின் வீட்டார் நேற்றிரவு நித்திரையின்றி பதற்ற நிலையில் இருந்துள்ளனர்
மகாவலி கங்கையில் நீராடிய இளைஞர் நீரில் மூழ்கிப் பலி
செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012
செய்திகள்
21.08.2012.மகாவலி கங்கையில் நீராடிய அக்குறனை குருகொடை பகுதியைச் சேர்ந்த
எம்.எம்.எம்.ரியாஸ்(23 வயது) என்ற இளைஞர் நீரில் மூழ்கிப்
பலியாகியுள்ளார்.
கட்கஸ்தோட்டை கொஹாகொடை பிரதேசத்தில் மகாவலி கங்கையில் நேற்று திங்கட்கிழமை மாலை நண்பர்களுடன் நீராடியபோதே குறித்த இளைஞர் நீரில் மூழ்கியுள்ளதாகவும் இவரை நண்பர்களால் காப்பாற்ற முடியாமல் போனதாகவும் கட்டுகஸ்தோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவரின் மரணம் தொடர்பான விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்
கட்கஸ்தோட்டை கொஹாகொடை பிரதேசத்தில் மகாவலி கங்கையில் நேற்று திங்கட்கிழமை மாலை நண்பர்களுடன் நீராடியபோதே குறித்த இளைஞர் நீரில் மூழ்கியுள்ளதாகவும் இவரை நண்பர்களால் காப்பாற்ற முடியாமல் போனதாகவும் கட்டுகஸ்தோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவரின் மரணம் தொடர்பான விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்
தாயும் மகளும் நீரில் மூழ்கிப் பலி
செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012
செய்திகள்
தாயும் மகளும் நீரில் மூழ்கிப் பலியான சம்பவமொன்று குருணாகல் மாவட்டம், நாரம்மல
திகலகந்த பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்கள் தீகிரினாவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய மல்லிகாகே லலிதா இந்திராணி மற்றும் அவருடைய மகள் 14 வயதுடைய மல்ஷி நிசன்ஸலா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சடலங்கள் தம்பதெனிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர்கள் தீகிரினாவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய மல்லிகாகே லலிதா இந்திராணி மற்றும் அவருடைய மகள் 14 வயதுடைய மல்ஷி நிசன்ஸலா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சடலங்கள் தம்பதெனிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விவசாயியைக் குத்திக் கொன்ற காளை
செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012
செய்திகள்
இவர் பிச்வில் - ஓபர்வில் பகுதியில் உள்ள பண்ணையில் தன் மாடுகளை மேய்த்துக்
கொண்டிருந்த போது, மேய்ச்சல் போதும் என்று கருதிய இவர் தனது மூன்று பசுக்களையும்,
இரண்டு காளைகளையும் அந்தப் பகுதியிலிருந்து வெளியே வரச் செய்தார்.
அப்போது ஒரு காளைமாடு மட்டும் அவரது அழைப்புக்கு இணங்காமல் மேலும் மேலும்
மேய்ச்சலுக்குச் சென்றது. விவசாயி அதனை மறுபக்கமாகசென்று அதட்டினார். இதனால் கோபம்
கொண்ட அந்தக் காளை அவரைக் நோக்கி வெறியுடன் சென்று தன் கொம்புகளால் குத்திக்
கொன்றது.
மாடு குத்தியதால் அலறிய அவருக்கு அருகில் உள்ள வயலிலிருந்து மற்றொரு விவசாயி
உதவிக்கு ஓடிவந்தார். சரிந்து விழுந்த அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
உடனே வான்வழி மீட்புப் படையினர் ஹெலிகப்டரில் வந்து அவருக்கு மருத்துவ உதவி
அளித்தனர். எனினும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை. ஒரு வேட்டைக்காரன் மூலம் காளையைச்
சுட்டுக் கொள்ளப்பட்டது. பின்பு டிராக்டரில் வைத்து அதனை அப்புறப்படுத்தினர்
ரசிகர்களை ஏமாற்றிய ஐஸ்வர்யா ராய்
செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012
செய்திகள்
ரசிகர்களுக்கு டிமிக்கி கொடுத்து ஐஸ்வர்யா ராய் எஸ்கேப் ஆனதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. |
ஐஸ்வர்யாராய் விளம்பர படமொன்றில் நடிப்பதற்காக நேற்று கொச்சி வந்தார். அவர்
வருவது பற்றி தகவல் பரவியதால் விமான நிலையத்தில் ரசிகர்கள் கூட்டம் அதிகமானது. கமராவும் கையுமாக ஆவலாக மணிக்கணக்கில் காத்திருந்தனர். பயணிகள், விமான நிலைய ஊழியர்கள், கார் பார்க்கிங்கில் இருந்த டிரைவர்களும் ஐஸ்வர்யாவை காண காத்திருந்தனர். பொலிசார் சிலரும் ஐஸ்வர்யாவுடன் எப்படியாவது புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் ரசிகர்களோட ரசிகர்களாக கலந்திருந்தனர். கைக்குழந்தையுடன் ஐஸ்வர்யா வருவதாக தகவல் வந்திருந்ததால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக அவரை அழைத்துச் செல்லும் எண்ணத்தில் பொலிசார் பரபரப்பாக காணப்பட்டனர். ஆடம்பர கார் ஒன்றை விமான நிலைய போர்டிகோவில் நிறுத்தி வைத்தனர். அந்த காரில் ஏறுவதற்கு ஐஸ்வர்யா ராய் வருவார் என்ற எண்ணத்தில் அனைவரும் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் அவர் வந்ததும் வேறு பாதை வழியாக மற்றொரு காரில் பொலிசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்றுவிட்டனர். இதையறிந்த ரசிகர்கள் அவரைப் பார்ப்பதற்கு ஓடினர். இதை கவனித்து ஐஸ்வர்யா ராய் ஒரு சில நொடிகள் காரை நிறுத்தி ரசிகர்களை பார்த்து கை அசைத்தார். ஆனால் யாரும் புகைப்படம் எடுக்க முடியாததால் ஏமாற்றம் அடைந்தனர். இதுபற்றி ஐஸ்வர்யா கூறுகையில், இருவர் பட ஷூட்டிங்கிற்காக கேரளா வந்தேன். இரண்டாவது முறையாக இப்போது மீண்டும் வந்திருக்கிறேன். ஆனால் என் குழந்தையுடன் இங்கு வருவது இது தான் முதல் முறை என்றார் |
சென்னையை பசுமையாக பார்க்க ஆசை: நயன்தாரா
செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012
செய்திகள்
சென்னை உள்ள ரோடுகள் மழைக் காலங்களில் மிகவும் மோசமாக உள்ளது என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார். |
நயன்தாராவுக்கு சென்னை ரோடு ஏழு வருட பரிச்சயம். கடந்த 2005ம் ஆண்டில் ஐயா,
சந்திரமுகி, கஜினி படங்கள் மூலம் பிரபலமாகி இங்கேயே தங்கினார். நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர உணவு விடுதி ஒன்றில் அவருக்கு நிரந்தரமாக ரூம் இருந்ததால் அங்கிருந்தே சென்னையை ஒட்டி நடந்த படப்பிடிப்புகளுக்கு சென்று வந்தார். தெலுங்கில் படங்களில் பரபரப்பான பின்பு ஐதராபாத் செல்ல நேர்ந்ததால் தற்போது சென்னை, ஐதராபாத், கேரளா என சுற்றிக் கொண்டு இருக்கிறார். மேலும் சென்னை நகரத்தைப் பற்றித் தெரிவிக்கையில், சென்னையில் நான் நிறைய நேரங்களை செலவிட்டு உள்ளேன். இங்குள்ள பரபரப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்.ஷ ஆனாலும் சில குறைகளும் உள்ளன. சென்னையில் உள்ள சாலைகள் சரியாக அமைக்கப்படவில்லை. பொதுமக்கள் நடந்து செல்லவும், வண்டிகளை ஓட்டிச் செல்லவும் கஷ்டப்படுகின்றனர். குறிப்பாக மழைக்காலத்தில் ரோடுகள் மிகவும் மோசமாகி விடுகிறது. ரோடுகளை சீரமைத்து, சாக்கடை கால்வாய் அடைப்புகளை சரி செய்தால் ரோடுகளில் தண்ணீர் நிற்காது. இந்த குறைகளை தவிர சென்னையை விரும்புவதற்கு நிறைய விடயங்கள் இருக்கிறது. இனிவரும் ஆண்டுகளில் சென்னையை சுத்தமான, பசுமையான நகரமாக பார்க்க நான் ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்திருக்கிறார் |
ஜப்பானில் முட்டைகோஸ் சாப்பிட்ட 7 பேர் மரணம்
செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012
இணைய செய்தி
செவ்வாய்க்கிழமை, 21 ஓகஸ்ட் 2012,ஜப்பானில் முட்டைகோஸ் தொக்கு சாப்பிட்ட ஏழு பேர் மரணமடைந்துள்ளனர், நூற்றுக்கும்
அதிகமானோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் முட்டைகோசால் செய்யப்படும் தொக்கு, ஜப்பானில் மிகவும் பிரபலமாகி
இருந்தது. ஜப்பானில் உள்ள முதியவர்கள், இந்த முட்டைகோஸ் தொக்கை விரும்பி
சாப்பிடுவார்கள். சிலாபத்தில் தமிழ் இளைஞர்கள் 10 பேர் கைது
செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012
செய்திகள்
செவ்வாய்க்கிழமை, 21 ஓகஸ்ட் 2012,சிலாபம் நகரில் தங்கியிருந்த 10 தமிழ் இளைஞர்கள் இன்று அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் அவுஸ்திரேலியா நோக்கி சட்டவிரோதமான முறையில் பயணிக்க தயாராக இருந்த நிலையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர்கள், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் தற்போது தடுத்துவைக்கப்பட்டு விசாணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்
குறித்த சந்தேக நபர்கள், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் தற்போது தடுத்துவைக்கப்பட்டு விசாணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்
ஆனையிறவிலும் மக்களின் காணிகள் ஆக்கிரமிப்பு! 10 ஏக்கரில் கடற்படை முகாம்
செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012
செய்திகள்
செவ்வாய்க்கிழமை, 21 ஓகஸ்ட் 2012,ஆனையிறவில் பொது மக்களுக்குச் சொந்தமான 10 ஏக்கர் காணியைத் திடீரென ஆக்கிரமித்திருக்கும் கடற்படையினர் இரவோடு இரவாக அந்தப் பகுதி தமக்குச் சொந்தமானது என அறிவித்திருக்கின்றனர். அத்துடன் அங்கு கடற்படை முகாம் ஒன்றை அமைப்பதிலும் மும்முரமாக இறங்கியிருக்கின்றனர்.
ஆனையிறவு உப்பளத்துக்கு முன்பான பகுதியில் உள்ள மக்களின் காணிகளே கடற்படையினரால் நேற்று முன்நாள் திடீரென ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இதனால் மீள்குடியமர்வுக்காகப் பதிவுசெய்து விட்டுக் காத்திருந்த மக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
இந்தப் பகுதியில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளை கண்டாவளை பிரதேச செயலகம் மேற்கொண்டு வந்த நிலையில், இந்த நிலம் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
1990ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் 90 குடும்பங்கள் வசித்து வந்துள்ளன என்று பிரதேச செயலகப் பதிவுகள் கூறுகின்றன.
தற்போது அந்தக் குடும்பங்கள் உமையாள்புரம், பரந்தன், முரசுமோட்டை, ஊரியான் ஆகிய இடங்களில் தற்காலிகமாக வாழ்ந்து வருகின்றன. அந்தக் குடும்பங்களின் சொந்தக் காணிகள் மட்டுமே அங்குள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அதற்குள் அரச காணிகள் ஏதுமில்லை. இந்தப் பகுதியில் இருந்த கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு கடந்த மார்ச் மாதம் நிலப் பகுதி பிரதேச செயலகத்திடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து மீள்குடியமர்வுக்காக பதிவுகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலகம் அறிவிப்பு விடுத்திருந்தது. அதனை நம்பி மக்களும் பதிவுகளை மேற்கொண்டுவிட்டு மீள்குடியமர்வுக்காகக் காத்திருந்தனர்.
குடிதண்ணீரைப் பெறுவதில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காணும் பிரச்சினை மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினை காரணமாகவே அங்கு மீள்குடியமர்வு தாமதமாகி வந்தது.
இந்தக் குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்துக்கு ஆனையிறவு உப்பு நிறுவனத்தையே நம்பி இருந்தன. அந்த நிறுவனம் இன்னும் தொழிற்படாத நிலையில் அதன் பணி ஆரம்பத்துக்காக அவர்கள் காத்திருந்தனர்.
அதேவேளை குடிதண்ணீர்த் தேவையை நிறைவு செவதற்கான நடவடிக்கைகளை கண்டாவளை பிரதேச செயலகம் மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்நாள் அந்தப் பகுதியைத் திடீரென "புல்டோசர்'கள் சகிதம் துப்புரவு செய்த கடற்படையினர், "இது கடற்படைக்குச் சொந்தமான நிலம்'' என்ற அறிவித்தல் பலகையை நாட்டியுள்ளனர்.
நேற்றைய தினம் அந்த நிலப் பகுதியைச் சுற்றி முட்கம்பி வேலியிடும் பணியில் நூற்றுக்கணக்கான படையினர் ஈடுபட்டிருந்தனர் என்றும், கடற்படை முகாமுக்கான தற்காலிக வீடுகளும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை காலமும் தமது காணிகளுக்குச் சென்று அவற்றை அறிக்கை செய்து வேலியிடும் பணிகளில் ஈடுபட்டுவந்த காணிகளுக்குச் சொந்தக்காரர்களான மக்கள் கடற்படையினரின் இந்த நடவடிக்கையால் அதிர்ந்துபோயுள்ளனர்.
தமது காணிகளை எப்படியாவது மீட்டுத் தரும்படி கேட்டு அவர்கள் அரச அதிகாரிகளை நாடத் தொடங்கியுள்ளனர்.
ஏற்கனவே யாழ். குடாநாட்டிலும் வன்னியின் பல்வேறு பகுதிகளிலும் படையினர் மக்களின் காணிகளை அபகரித்துள்ளனர்.
இதனைக் கண்டித்தும் எதிர்த்தும் அரசியல் கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருந்தன.
இந்த நிலையில் தற்போது புதிய ஆக்கிரமிப்பாக ஆனையிறவுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது
இதனால் மீள்குடியமர்வுக்காகப் பதிவுசெய்து விட்டுக் காத்திருந்த மக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
இந்தப் பகுதியில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளை கண்டாவளை பிரதேச செயலகம் மேற்கொண்டு வந்த நிலையில், இந்த நிலம் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
1990ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் 90 குடும்பங்கள் வசித்து வந்துள்ளன என்று பிரதேச செயலகப் பதிவுகள் கூறுகின்றன.
தற்போது அந்தக் குடும்பங்கள் உமையாள்புரம், பரந்தன், முரசுமோட்டை, ஊரியான் ஆகிய இடங்களில் தற்காலிகமாக வாழ்ந்து வருகின்றன. அந்தக் குடும்பங்களின் சொந்தக் காணிகள் மட்டுமே அங்குள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அதற்குள் அரச காணிகள் ஏதுமில்லை. இந்தப் பகுதியில் இருந்த கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு கடந்த மார்ச் மாதம் நிலப் பகுதி பிரதேச செயலகத்திடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து மீள்குடியமர்வுக்காக பதிவுகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலகம் அறிவிப்பு விடுத்திருந்தது. அதனை நம்பி மக்களும் பதிவுகளை மேற்கொண்டுவிட்டு மீள்குடியமர்வுக்காகக் காத்திருந்தனர்.
குடிதண்ணீரைப் பெறுவதில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காணும் பிரச்சினை மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினை காரணமாகவே அங்கு மீள்குடியமர்வு தாமதமாகி வந்தது.
இந்தக் குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்துக்கு ஆனையிறவு உப்பு நிறுவனத்தையே நம்பி இருந்தன. அந்த நிறுவனம் இன்னும் தொழிற்படாத நிலையில் அதன் பணி ஆரம்பத்துக்காக அவர்கள் காத்திருந்தனர்.
அதேவேளை குடிதண்ணீர்த் தேவையை நிறைவு செவதற்கான நடவடிக்கைகளை கண்டாவளை பிரதேச செயலகம் மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்நாள் அந்தப் பகுதியைத் திடீரென "புல்டோசர்'கள் சகிதம் துப்புரவு செய்த கடற்படையினர், "இது கடற்படைக்குச் சொந்தமான நிலம்'' என்ற அறிவித்தல் பலகையை நாட்டியுள்ளனர்.
நேற்றைய தினம் அந்த நிலப் பகுதியைச் சுற்றி முட்கம்பி வேலியிடும் பணியில் நூற்றுக்கணக்கான படையினர் ஈடுபட்டிருந்தனர் என்றும், கடற்படை முகாமுக்கான தற்காலிக வீடுகளும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை காலமும் தமது காணிகளுக்குச் சென்று அவற்றை அறிக்கை செய்து வேலியிடும் பணிகளில் ஈடுபட்டுவந்த காணிகளுக்குச் சொந்தக்காரர்களான மக்கள் கடற்படையினரின் இந்த நடவடிக்கையால் அதிர்ந்துபோயுள்ளனர்.
தமது காணிகளை எப்படியாவது மீட்டுத் தரும்படி கேட்டு அவர்கள் அரச அதிகாரிகளை நாடத் தொடங்கியுள்ளனர்.
ஏற்கனவே யாழ். குடாநாட்டிலும் வன்னியின் பல்வேறு பகுதிகளிலும் படையினர் மக்களின் காணிகளை அபகரித்துள்ளனர்.
இதனைக் கண்டித்தும் எதிர்த்தும் அரசியல் கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருந்தன.
இந்த நிலையில் தற்போது புதிய ஆக்கிரமிப்பாக ஆனையிறவுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது
யாழ்ப்பாணத்தின் படைக்குறைப்பில் திருப்தியில்லை: அமெரிக்க அதிகாரிகளிடம் யாழ். ஆயர் எடுத்துரைப்பு
செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012
தகவல்கள் புகைப்படங்கள்
செவ்வாய்க்கிழமை, 21 ஓகஸ்ட் 2012,யாழ். மாவட்டத்தில் படைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதும், படைக்குறைப்பில் திருப்தியில்லையென யாழ். ஆயர் அதிவண. தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலய இரண்டாம் நிலை அதிகாரியான வில்லியம்ஸ் கைன் ஸ்ரைனிடமே ஆயர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பு தெடர்பாக ஆயர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்ககையில்,
மீளக்குடியமர்வுகள் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை. மீள்குடியமர்வில் அதிகளவான குறைபாடுகள் உண்டு. மக்களுக்கு தேவையான வீடு, மலசல கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக செய்யப்படவில்லை.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அரசாங்கம் இன்னமும் முன்வைக்கவில்லை. வடமாகாண தேர்தலை அரசாங்கம் இன்னமும் நடாத்தவில்லை.
ஒருவேளை வடமாகாணத்திற்கான தேர்தலை அரசாங்கம் நடாத்தினால் மக்கள் தம்முடன் இல்லையென்பதை உலகம் அறிந்து விடும் என அச்சம் கொள்கின்றது.
அபிவிருத்திப் பணிகள் உரியாவாறு மக்களைச் சென்றடைவதில்லை. இதனாலேயே மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இடைவெளி காணப்படுகின்றது. அங்காங்கே பொது மக்களது காணிகளை ஆக்கிரமித்து படைமுகாம் அமைக்கப்படுகின்றது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் பல்வேறு குறைபாடுகள் உள்ளபோதும் அரசாங்கம் அவற்றை அமுல்படுத்த வேண்டும். இவ்வாறு அமுல்படுத்தினால் அது மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றார்.
நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இக்குழுவினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் உள்ளிட்ட பலரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இச்சந்திப்பு தெடர்பாக ஆயர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்ககையில்,
மீளக்குடியமர்வுகள் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை. மீள்குடியமர்வில் அதிகளவான குறைபாடுகள் உண்டு. மக்களுக்கு தேவையான வீடு, மலசல கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக செய்யப்படவில்லை.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அரசாங்கம் இன்னமும் முன்வைக்கவில்லை. வடமாகாண தேர்தலை அரசாங்கம் இன்னமும் நடாத்தவில்லை.
ஒருவேளை வடமாகாணத்திற்கான தேர்தலை அரசாங்கம் நடாத்தினால் மக்கள் தம்முடன் இல்லையென்பதை உலகம் அறிந்து விடும் என அச்சம் கொள்கின்றது.
அபிவிருத்திப் பணிகள் உரியாவாறு மக்களைச் சென்றடைவதில்லை. இதனாலேயே மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இடைவெளி காணப்படுகின்றது. அங்காங்கே பொது மக்களது காணிகளை ஆக்கிரமித்து படைமுகாம் அமைக்கப்படுகின்றது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் பல்வேறு குறைபாடுகள் உள்ளபோதும் அரசாங்கம் அவற்றை அமுல்படுத்த வேண்டும். இவ்வாறு அமுல்படுத்தினால் அது மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றார்.
நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இக்குழுவினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் உள்ளிட்ட பலரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சீனா தொடர்பில் இந்தியா, இலங்கைக்கு நேரடி கண்டனம்
செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012
செய்திகள்
செவ்வாய்க்கிழமை, 21 ஓகஸ்ட் 2012,சீன நாட்டு தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றுக்கு கொழும்பு நகரில் உள்ள காணிகள் விற்கப்படுகின்றமைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பு காலி வீதியில் உள்ள காணி பரப்பு ஒன்றை சீனாவின் ஓரு தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் பாகிஸ்தானிலும் தமது கிளைகளை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் இந்திய அரசாங்கம், இலங்கையின் வெளியுறவுகள் துறை அமைச்சுடன் தொடர்பை ஏற்படுத்தி தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
அத்துடன் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசத்தை அண்மையில் அழைத்த இந்திய வெளியுறவு அமைச்சு, இது குறித்து நேரடியாக தமது அதிருப்தியை தெரிவித்துள்ளது
இந்த நிறுவனம் பாகிஸ்தானிலும் தமது கிளைகளை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் இந்திய அரசாங்கம், இலங்கையின் வெளியுறவுகள் துறை அமைச்சுடன் தொடர்பை ஏற்படுத்தி தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
அத்துடன் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசத்தை அண்மையில் அழைத்த இந்திய வெளியுறவு அமைச்சு, இது குறித்து நேரடியாக தமது அதிருப்தியை தெரிவித்துள்ளது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)