siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

மகாவலி கங்கையில் நீராடிய இளைஞர் நீரில் மூழ்கிப் பலி

21.08.2012.மகாவலி கங்கையில் நீராடிய அக்குறனை குருகொடை பகுதியைச் சேர்ந்த எம்.எம்.எம்.ரியாஸ்(23 வயது) என்ற இளைஞர் நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளார்.

கட்கஸ்தோட்டை கொஹாகொடை பிரதேசத்தில் மகாவலி கங்கையில் நேற்று திங்கட்கிழமை மாலை நண்பர்களுடன் நீராடியபோதே குறித்த இளைஞர் நீரில் மூழ்கியுள்ளதாகவும் இவரை நண்பர்களால் காப்பாற்ற முடியாமல் போனதாகவும் கட்டுகஸ்தோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவரின் மரணம் தொடர்பான விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்