siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

அண்ணன்- தம்பி பற்றிய கதையே நகர்ப்புறம்

21.08.2012.
கொலிவுட்டில் ஜி.டி. பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் டி. ஆறுமுகம் தயாரித்துள்ள படம் நகர்ப்புறம்.
இப்படத்தில் கல்லூரி, வால்முகி படங்களில் நடித்த அகில் நாயகனாகவும், ஸ்ரீதிவ்யா என்ற புதுமுக நடிகை நாயகியாகவும் நடித்துள்ளனர்.
இவர்கள் தவிர மனோபாலா, டி.பி. கஜேந்திரன், மனோகர், மீரா கிருஷ்ணன், கருத்தபாண்டி, சத்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை அறிமுக இயக்குனர் என்.பி சாரதி கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார். இவர் வைத்தீஸ்வரன் தம்பிக்கோட்டை போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார்.
இப்படம் குறித்து இயக்குனர் சாரதி கூறுகையில், சென்னையில் நடுத்தர குடும்பத்தில் வாழும் அண்ணன், தம்பி இருவரும் வேறுபட்ட எண்ணங்களும், செயல்களும் கொண்ட குணாதிசயங்களை உடையவர்கள்.
அவர்களின் எண்ணம், செயல் வேறுபட்ட போதிலும், ஒருவருக்கொருவர் காட்டும் அன்பில் விட்டுக் கொடுக்காதவர்களாக இருக்கிறார்கள்.
அவர்களின் வாழ்க்கை முறை, அதில் ஏற்படும் பிரச்சனைகள், காதல், அதில் ஏற்படும் பிரச்சனைகள் ஆகியவற்றை மையமாக வைத்து உருவாகும் கதை தான் நகர்ப்புறம் என்றார்