siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

தாயும் மகளும் நீரில் மூழ்கிப் பலி

21.08.2012.
தாயும் மகளும் நீரில் மூழ்கிப் பலியான சம்பவமொன்று குருணாகல் மாவட்டம், நாரம்மல திகலகந்த பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்கள் தீகிரினாவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய மல்லிகாகே லலிதா இந்திராணி மற்றும் அவருடைய மகள் 14 வயதுடைய மல்ஷி நிசன்ஸலா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சடலங்கள் தம்பதெனிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.