siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

செவ்வாய் கிரகத்தில் ரோவர் விண்கலம் தரையிறங்கும் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு

 02 ஓகஸ்ட் 2012,
அமெரிக்காவின் ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையம்(நாசா) கடந்தாண்டு நவம்பர் மாதம் செவ்வாய் கிரகத்துக்கு ரோவர் என்ற விண்கலத்தை அனுப்பியது.
250 கோடி டொலர் செலவில் அனுப்பப்பட்டுள்ள ரோவர் விண்கலம் வரும் 6ஆம் திகதி செவ்வாய் கிரகத்தில் தரையிறங்குகிறது.
செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய பள்ளத்தாக்கான கேலே பகுதியில் சரியான நேரத்தில் ரோவர் தரையிறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இது குறித்து நாசா இணை நிர்வாகி ஜான் கிரன்ஸ்பெல்டு குறிப்பிடுகையில், செவ்வாய் கிரகத்தில் ரோவர் தரையிறங்கும் காட்சியை நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் பெரிய திரை வைத்து நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளோம்.
இதன் மூலம் பொதுமக்களுடன் எங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளோம். கலிபோர்னியாவின் பசடெனா ஏவுதள ஆய்வு மையத்தில் இருந்து இந்த காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது என்றார்.

10 ஆயிரம் ஆண்டு பழமையான நிலத்தடி ஏரி: வறண்ட பகுதியில் ஆச்சரியம்

 03. ஓகஸ்ட் 2012,
ஆப்ரிக்க நாடான நமீபியாவில் 10 ஆயிரம் ஆண்டு பழமையான பிரமாண்ட நிலத்தடி நீர்நிலை இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தென்மேற்கு ஆப்ரிக்க நாடான நமீபியா அட்லான்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது.
இங்கு குடிநீர் ஆதாரம் தொடர்பாக ஜேர்மனி புவி அறிவியல் மற்றும் இயற்கை வளங்கள் நிறுவனத்தின் திட்ட மேலாளர் மார்ட்டின் கிங்கர் தலைமையில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில், மிகமிக பழமையான பிரமாண்ட நீர்நிலை ஒன்று தரைக்கு அடியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி மார்ட்டின் கிங்கர் கூறுகையில், ஆப்ரிக்காவின் வறண்ட பகுதிகளில் ஒன்று நமீபியா. பாலைவனங்கள் அதிகம் உள்ள இப்பகுதியில் தரைக்கு கீழே சுமார் 1000 அடி ஆழத்தில் பிரமாண்ட ஏரி அளவுக்கு நீர்நிலை இருப்பது தெரியவந்துள்ளது.
தரைக்கு அடியில் நிலத்தடி நீர்ப் படுகைகள் இருப்பது சாதாரணம் தான். 10 ஆயிரம் ஆண்டு பழமையானது என்பது தான் சிறப்பம்சம். இத்தனை ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது ஆச்சரியமாக இருக்கிறது.
இந்த நீர்நிலை சுமார் 70 கி.மீ. நீளம், 40 கி.மீ. அகலம் என பிரமாண்ட ஏரி அளவுக்கு இருக்கிறது. நிலத்தடி ஏரிக்கு ஓகங்வெனா- 2 என்று பெயரிட்டுள்ளோம். அங்கோலா நாட்டின் எல்லையை ஒட்டி இது அமைந்துள்ளது.
சமீப ஆண்டுகளாக சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகம் உள்ளதால் ஆறு, கடல் போன்றவை நிறைய மாசுபட்டிருக்கிறது. ஆனால் 10 ஆயிரம் ஆண்டுகளாக நிலத்தின் மேல் பகுதியுடன் தொடர்பில் இல்லாத தண்ணீர் என்பதால், ஓகங்வெனா ஏரியின் தண்ணீர் மிகவும் சுத்தமாக உள்ளது.
சுத்தமான, பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமல் ஆப்ரிக்காவில் பல பகுதிகளில் மக்கள் அவதிப்படுகின்றனர். நமீபியாவிலும் மக்கள் நல்ல தண்ணீருக்காக வெகுதூரம் செல்ல வேண்டி இருக்கிறது.
நமீபியா நாட்டின் மொத்த மக்களில் 40 சதவீதத்தினர் வடக்கு பகுதியில் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஓகங்வெனா ஏரி நீரைக் கொண்டு இன்னும் 400 ஆண்டுகள் வரை தட்டுப்பாடின்றி குடிநீர் சப்ளை செய்ய முடியும்.
அது மட்டுமின்றி பாசனத்துக்கும் பயன்படுத்தலாம். அந்தளவுக்கு அங்கு தண்ணீர் தாராளமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
ஆய்வு பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு, தண்ணீரை எடுக்கும் பணி தொடங்கும் என்று நமீபியாவின் விவசாய துறை உயரதிகாரி ஆபிரகாம் நெகமியா தெரிவித்தார்

யாழ். சாவகச்சேரியில் மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்து இளம் பெண் பரிதாபமாகப் பலி

 03 ஓகஸ்ட் 2012,
மண்ணெண்ணை குக்கர் அடுப்பை பற்றவைக்க முற்பட்டபோது அது திடீரென வெடித்து சிதறியதால் எரிகாயங்களுக்கு உள்ளான இளம் பெண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளாதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள சாவகச்சேரி சிவன் கோவில் பகுதியைச் சேர்ந்த 19 வயதான எஸ்.கோபிகா என்ற இளம்பெண்ணே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பெண்ணின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இனப் பிரச்சினைக்கான தீர்வு இலங்கைக்குள்ளேயே இருக்கின்றது: ஜேம்ஸ் வார்டன்

 வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012,
இனப் பிரச்சினைக்கான தீர்வு இலங்கைக்குள்ளேயே இருக்கின்றது. என தெரிவித்துள்ள பிரித்தானிய பாராளுமன்றக் குழுவின் தலைவர் ஜேம்ஸ் வார்டன், அதற்கான பிரித்தானிய அரசாங்கம் தனது பங்களிப்பை நிச்சயம் வழங்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் விஜயமாக இன்று யாழ். வந்த பிரிட்டிஷ் குழுவினர் இன்று மாலை அரியாலையில் மீளக்குடிமர்ந்த பொது மக்களை சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இதன்போது ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தின் உண்மை நிலைமையை அறிந்து கொள்வதற்காகவே நாம் இங்கு விஜயம் செய்துள்ளோம். மேற்குலகின் ஊடகங்களில் வெளியான செய்திகளை எம்மை இலங்கையின் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இனப் பிரச்சினைக்கு உள்நாட்டிலேயே தீர்வு காணப்பட வேண்டும். வெளிநாட்டிலிருந்து தீர்வுகள் திணிக்கப்படக் கூடாது. இந்த நாட்டில் நிரந்தமான சமாதானம் ஏற்படவேண்டும். எனவே அதற்கு இந்த இனங்களின் தலைவர்கள் மனதொருமைப்பட்டு செயற்படவேண்டும்.
யாழ்ப்பாணத்திற்கான உதவிகளை பிரித்தானியா எப்போதும் செய்யும். குறிப்பாக, மீள்குடியேறி மக்களின் பிரச்சினைகளை நாம் தற்போது விளங்கிக் கொண்டுள்ளோம் என்றார்.
மேலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று அங்குள்ள உண்மையான கள யதார்த்தம் என்ன என்பதை நாங்கள் அறிந்திருக்கின்றோம். இதனை பிரித்தானியாவிலுள்ள தமிழர்களுக்கும் எடுத்துச் சொல்வோம் என பிரித்தானிய பாராளுமன்றக் குழுவின் தலைவர் ஜேம்ஸ் வார்டன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இக்குழுவினர் இன்று மாலை யாழ். வணிகர் சங்கப் பிரதிநிதிகளையும் வடமாகாண பிரதம செயலாளரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். மேலும், நாளை கிளிநொச்சிக்கும் இவர்கள் விஜயம் செய்யவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

நீரிழிவுக்காரர்களுக்கு ஆலோசனை

 
எனக்கு நீரிழிவு இருக்கிறது. பல வருடங்களாக மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். கூடவே கொலஸ்ட்ராலுக்கும் சேர்த்து... இது போதாதென, சமீபகாலமாக சரும பிரச்னை வந்து, அதற்கும் மருந்துகள், மாத்திரைகள். அதிக மாத்திரைகள் சாப்பிட்டதாலேயே ஒருவர் இறந்துவிட்டதாக சமீபத்தில் செய்தி படித்தேன். இத்தனை மாத்திரைகள்தான் அளவு என ஏதாவது வரையறை உண்டா?


பதில் சொல்கிறார் நீரிழிவு மருத்துவ நிபுணர் விஜய் விஸ்வநாதன்

நீரிழிவுக்காரர்களுக்கு ‘கோ மார்பிட் கண்டிஷன்’ என்ற பிரச்னை இருக்கும். அதாவது ரத்த அழுத்தம், கெட்ட கொழுப்பு, நரம்பு தொடர்பான பிரச்னை, இதய நோய் எனப் பலதும் சேர்ந்து வரும். நீரிழிவுக்கு மட்டும் மருத்துவம் பார்த்தால், மற்ற நோய்களால் அந்த நபரின் உயிருக்கே ஆபத்து வரலாம். உதாரணத்துக்கு சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, கெட்ட கொழுப்பு, பிபி இரண்டும் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால், மாரடைப்பு வரலாம். கிட்னி பாதிக்கப்படலாம். எல்லாவற்றையும் மருந்துகளின் உதவியின்றி, டயட் மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது.

ரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்கும் மாத்திரையுடன் கொலஸ்ட்ராலை குறைக்கும் மாத்திரையும் எப்போதும் தரப்படும். நூற்றில் 40 பேருக்கு பிபி மாத்திரை தேவைப்படலாம். துரதிர்ஷ்டவசமாக சிலருக்கு 2 அல்லது 3 மாத்திரைகள்கூட கொடுக்க வேண்டியிருக்கும். ஏற்கனவே ஹார்ட் அட்டாக் வந்தவர்களுக்கு சில மாத்திரைகள் அவசியப்படும். நியூரோபதி எனப்படுகிற நரம்பு தொடர்பான பிரச்னை உள்ளவர்களுக்கு பி காம்ப்ளக்ஸ் மற்றும் வைட்டமின் பி12 மாத்திரை பரிந்துரைக்கப்படும். நியூரோபதி இல்லாதவர்களுக்கும் மெட்ஃபார்ம் என்கிற மாத்திரை தரப்படும். அதை எடுத்துக்கொண்டால் பி.காம்ப்ளக்ஸ் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். சரியான மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ஏதேனும் ஒரு வைட்டமின் மாத்திரையை எடுத்துக் கொண்டால் போதும்.

அளவுக்கு அதிக மாத்திரைகள் சாப்பிட்டு இறந்த அந்த நபருக்கு என்ன பிரச்னை இருந்தது, என்ன மாத்திரைகளை எடுத்துக்கொண்டார் என்றெல்லாம் ஆராய்ந்தால்தான் உண்மை தெரியும். மற்றபடி தேவையான மாத்திரைகளை எடுத்துக்கொள்ளத் தவறுவது எந்த அளவு ஆபத்தானதோ, அதே போலத்தான் தேவையற்ற மாத்திரைகளை எடுத்துக் கொள்வதும்

சிறுநீரக நோய்கள் நீங்கஇது இனிப்பான எச்சரிக்கை!

 

 

நம்பிக்கையில் நாம் வாங்கி உபயோகிக்கிற பல உணவுப் பொருள்களிலும் சர்க்கரை மறைமுகமாக சேர்க்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறார் ஷைனி.

‘டெட்ரா பாக்கெட்டுகளில் வரும் ஜூஸ்கள்... 100 சதவிகிதம் ஒரிஜினல் ஜூஸ் எனக் குறிப்பிட்டிருந்தால் ஓ.கே. மற்றபடி வெறுமனே ஃப்ரூட் ஜூஸ் என்கிற அடையாளத்துடன் வருபவற்றில், 30-40 சதவிகிதம் மட்டுமே பழக்கலவையும், மீதியெல்லாம் இனிப்புக்கான சிரப்புமாகவே இருக்கும். பெரிய நிறுவனத் தயாரிப்புகளில் HFCS (High fructose corn syrup) எனக் குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். கரும்பிலிருந்து எடுக்கப்படும் சர்க்கரை விலை அதிகம் என்பதால், சோளத்திலிருந்து எடுக்கப்படுகிற மலிவான, ஒருவித இனிப்பு சிரப்பான இதையே, பல தயாரிப்புகளிலும் பயன்படுத்துகிறார்கள்.

நாம் தேடித் தேடி சாப்பிடுகிற சைனீஸ் உணவுகள், நூடுல்ஸ், பிஸ்கட்... இப்படிப் பலதிலும் பிரதானம் சர்க்கரை. ளிஷிணி என முடிகிற எந்த உணவிலும் சர்க்கரை இருப்பதாக அர்த்தம். ஏற்கனவே நாம் சாப்பிடுகிற சாதம், கோதுமை உணவுகள், உருளைக்கிழங்கு, பால், காய்கறிகள், பழங்கள் என எல்லாவற்றிலும் சர்க்கரை இருக்கும் போது, கூடுதலாக வேறு எதற்கு?’’ என்பவர், ஆரோக்கியமான நபருக்கு ஒரு நாளைக்கு 2 டீஸ்பூன் சர்க்கரைக்கு மேல் தேவையில்லை என்கிறார். ஒரு டீஸ்பூன் என்பது 5 கிராமுக்கு சமம்.

கடினமான உடலுழைப்பு உள்ளவர்களுக்கும் குழந்தைகளுக்கும் 3 முதல் 5 டீஸ்பூன் வரை அனுமதி. அது சரி... பிறகு சர்க்கரைக்கு என்னதான் மாற்று என்கிறீர்களா? அதற்கும் வழி சொல்கிறார் ஷைனி. ‘‘சுத்திகரிக்கப்படாத (ஹிஸீக்ஷீமீயீவீஸீமீபீ) சர்க்கரை கிடைக்கிறது. பார்வைக்கு சற்றே பழுப்பு நிறத்தில் இருக்கும் அதுதான் ஆரோக்கியமானது. பழுப்பு நிறத்தில் இருக்கும் எதையும் நாம் விரும்புவதில்லையே...

பழுப்பு சர்க்கரையை சலவை செய்த மாதிரி வெள்ளைவெளேர் என மாற்ற சல்ஃபைட் என்கிற ரசாயனத்தால் பதப்படுத்திய பிறகுதான், விற்பனைக்கு வருகிறது. முன்பெல்லாம் சர்க்கரை, சுலபத்தில் கட்டிதட்டும். இப்போது, மணல் மாதிரி அப்படியே கொட்டுகிறது. காரணம், அதிலுள்ள ‘ஆன்ட்டி கேக்கிங் ஏஜென்ட்’. அதுவும் ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை.

சர்க்கரைக்குப் பதில் சுத்தமான தேன், கருப்பட்டி அல்லது பனைவெல்லம் பெட்டர். தேனிலும் கலப்படத்துக்குக் குறைவில்லை என்பதால், தரமானதாகத் தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம். அதற்காக சர்க்கரைதான் ஆபத்து என தேனையும், கருப்பட்டியையும் அளவுக்கதிகமாக எடுத்துக் கொள்வதும் சரியல்ல. அளவு மீறப்படாத வரை எதுவுமே ஆபத்தைத் தருவதில்லை.’’

இனிப்புச் சுவைக்கு சர்க்கரைக்கு பதில் செயற்கை சர்க்கரை (உதாரணத்துக்கு சுகர் ஃப்ரீ) பயன்படுத்தினால் கலோரி அதிகரிக்காது என்கிறார்கள். அதை தினமும் பயன்படுத்தினால் எடையைக் குறைக்கலாம் என்றும் சொல்கிறார்கள். இது எந்தளவு உண்மை? இதனால் பக்க விளைவுகள் வருமா?

ரொம்பவும் தவறான அபிப்ராயம் இது. டயட் செய்கிறவர்கள் பலரும் இந்தத் தவறைச் செய்கிறார்கள். செயற்கை சர்க்கரை என்பது நீரிழிவுக்காரர்களுக்கானது. மற்றவர்களுக்கு அது தேவையே இல்லை. 1 டீஸ்பூன் சர்க்கரையில் 20 முதல் 30 கலோரிகள் இருக்கும். ஒருநாளைக்கு ஒரு நபருக்குத் தேவையானது 1,200 முதல் 1,300 கலோரிகள் வரை. இதில் காலையில் ஒன்று, மாலையில் ஒன்று என காபி, டீயில் சேர்த்துக் கொள்ளும் சர்க்கரையின் மூலமாகச் சேரும் கலோரிகளைக் கணக்கிட்டால் 40 முதல் 50 கலோரிகள்தான் இருக்கும்.

சர்க்கரையில் இருப்பதென்னவோ வெறும் கலோரி மட்டுமே. வேறு எந்தச் சத்தும் கிடையாது. ஆனால், ‘சர்க்கரையைத் தவிர்த்து, செயற்கை இனிப்பு சேர்த்தால் எடை கூடாது’ என்கிற தவறான எண்ணத்தில், பலரும் ஒரு நாளைக்கு அதைச் சேர்த்து ஏகப்பட்ட காபி, டீ, குளிர்பானங்களை அருந்துகிறார்கள். குலாப் ஜாமூன், மைசூர்பாகு என விதம் விதமான இனிப்புகளையும் செயற்கை சர்க்கரை சேர்த்துச் செய்து சாப்பிடுகிறார்கள். அந்த இனிப்புகளில் சேர்க்கப்படுகிற நெய், எண்ணெய் போன்றவற்றால் எத்தனை கலோரிகள் ஏறும் என்பதைக் கவனிக்கத் தவறி விடுகிறார்கள்.

சுக்ரலோஸ், சாக்ரின், ஆஸ்பர்டேம் என செயற்கை சர்க்கரை வகையறாக்கள் எல்லாமே கெமிக்கல் கலப்புகள். நீரிழிவு உள்ளவர்களாக இருந்தாலுமே, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், தாய்ப்பாலூட்டும் பெண்கள் இந்த செயற்கை சர்க்கரையை எடுத்துக்கொள்ளக்கூடாது. மற்றவர்களும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 செயற்கை சர்க்கரை மாத்திரைக்கு மேல் எடுத்துக்கொள்ள வேண்டாம். எடையைக் குறைக்க உணவுக்கட்டுப்பாடும் உடற்பயிற்சியும்தான் மிகச் சிறந்த, நிரூபிக்கப்பட்ட வழிகள்!

பெண்களின் தலைமுடியைப் பார்த்தால் புருஷனாக வேலை செய்யலாம் - சீனாவின் அதிசய கிராமம்!

 
 
02.08.2012. பெண்களில் ஒரு சிலருக்குதான் ஆறடி கூந்தல் இருக்கும்.

ஒருவர் பாக்கி இல்லாமல் அத்தனை பேருக்கும் ஆறடி கூந்தல் உள்ள சீன கிராமம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. சீனாவின் குவாங்சி ஷுவாங் பகுதியில் உள்ளது ஹுவாங்லூ யாவ் என்ற கிராமம். இங்கு ‘யாவ்’ என்ற பழங்குடியினர் வசிக்கின்றனர். பெரும்பாலும் சிவப்பு நிற ஆடைகளையே அணிவதால் ‘ரெட் யாவ்’ என்று அழைக்கப்பட்டு வருகின்றனர்.பெரும்பாலும், பெண்களில் ஒரு சிலருக்குதான் ஆறடி கூந்தல் இருக்கும். ஹுவாங்லூ யாவ் கிராமத்தில் அத்தனை பெண்களுக்கும் சராசரியாக ஐந்தரை அடி நீள கூந்தல் இருக்கிறது. அதிகபட்சமாக ஒரு பெண்ணுக்கு 6.8 அடி நீளம் இருக்கிறது கூந்தல். ‘நீள முடி கிராமம்’ என்று இந்த கிராமம் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது. மாப்பிள்ளை பார்க்கும் முன்பு 16 வயதில் முடி வெட்டிக் கொள்வார்களாம். அதற்கு பிறகு, வெட்டவே மாட்டார்கள்.
25 ஆண்டுகளுக்கு முன்பு வரை வித்தியாசமான நடைமுறையை யாவ் பழங்குடியினர் பின்பற்றி வந்திருக்கிறார்கள். பெண்ணின் கூந்தலை மற்ற ஆண்மகன் யாரும் பார்த்துவிடக் கூடாது. கணவனாக வரப்போகிறவன் அல்லது அந்த பெண்ணின் பிள்ளைகள் மட்டுமே பார்க்கலாம். வீட்டை விட்டு வெளியே செல்லும்போதும், வெளி ஆட்கள் வீட்டுக்கு வந்தாலும் முக்காடு ஒன்றை பெண்கள் அணிந்துகொண்டு விடுவார்கள்.
தெரியாத்தனமாக பெண்களின் கூந்தலை பார்த்த ஆண்களுக்கு என்ன தண்டனை தெரியுமா? 3 ஆண்டுகளுக்கு அவர்கள் வீட்டில் ‘கணவனாக’ வேலை பார்க்க வேண்டும். கடந்த 25 ஆண்டுகளாக இந்த விதிமுறைகளை மட்டும் யாவ் பழங்குடியினர் விட்டுவிட்டார்கள். ஆயுளில் ஒரே ஒருமுறை மட்டுமே முடி வெட்டிக் கொள்வது என்ற வழக்கத்தை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். கோடை காலம் மற்றும் வசந்த காலத்தில் கிராமத்து பெண்கள் அனைவரும் ஜின்ஜியாங் ஆற்றுக்கு ஊர்வலமாக சென்று, தங்களது நீண்ட கூந்தலை அங்கு அலசுவதையும் ஒரு சடங்கு போல செய்து வருவது குறிப்பிடத்தக்கது

பேய் அடிக்கவில்லை... பெண்டாட்டிதான் அடித்தாள்....

 02.08.2012.ஒரு நாள் நான் அலுவலகத்தை விட்டு கிளம்பிக் கொண்டிருந்தேன். ஒரு 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் தயங்கித் தயங்கி என்னுடைய அறைக்குள் வந்தார்.

"சார் எனக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆண் ஒன்று பெண் ஒன்று என இரண்டு குழுந்தைகள். வாழ்க்கையில் எனக்கு நிம்மதியே இல்லை. சாகலாம் போல் இருக்கிறது" என்றார்.

"கற்களும் முட்களும் நிறைந்ததுதான் வாழ்க்கைப் பாதை. அதைத் ஏற்றுக்கொண்டு கடப்பதுதான் இல்லறம். இராமாயணத்தில் ராமனும் மகாபாரதத்தில் தருமனும் படாத கஷ்டமா..." என்று ஆறுதல் கூறினேன்.

"ஆறுதல் சொல்வது சுலபம். அனுபவிப்பவனுக்குத்தானே தெரியும் கஷ்டம்" என்று வாய்க்குள் முணுமுணுத்தது எனக்கு கேட்டது. ஆனால், பரிதாபமாக பார்த்தார்.

"என்ன தம்பி... பிரச்சினையைச் சொல்லுங்கள். எதற்காக பேய் அடித்தது போல் இருக்கிறீர்கள்" என்றேன்

" பேய் அடிக்கவில்லை சார்.. என் பெண்டாட்டிதான் தினமும் என்னை அடிக்கிறாள்" சொல்லும் போது அழுதே விட்டார்.

கதை இதுதான். இவருடைய மனைவி ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவள். இவர் வசதியான குடும்பம். வரதட்சணை எதுவும் கேட்கவில்லை. தன்னையும் அம்மாவையும் கவனித்துக் கொண்டால் போதும் என்று நினைத்தார். அதே நேரத்தில் மனைவி மீது உள்ள அன்புக்கும் குறைவில்லை.

மாமியாரும் மருமகளை மகளாகவே நினைத்தார். ஆனால், அந்தப் பெண்ணோ யாரையும் மதிப்பதில்லை. ஏதாவது பேசினால் கணவனின் கன்னத்தையே பதம் பார்த்து விடுகிறாள்.

இப்போது இது போன்ற பிரச்சினைகள் பலவீடுகளில் இருப்பதை அனுபவப்பூர்வமாக அறிந்தவன் நான். அவருடைய ஜாதகத்தையும் மனைவியின் ஜாதகத்தையும் பார்த்தேன். இவர் மனுச கணம். அந்தப் பெண் ராட்சஷ கணம். வசியப் பொருத்தம் இல்லை. மேலும் சில பாதிப்புகள் இருந்தது.

அவரிடம் நிலவரத்தைக் கூறி சிறிது நாட்கள் அமைதியாக இருக்கும்படி சொல்லி... அவருடைய வீட்டுத் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தேன்.

இந்தக் குடும்பத்தில் உள்ள பிரச்சினையை எப்படியாவது களைந்துவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆகவே, சில நாட்கள் கழித்து அவருடைய வீட்டுக்கு போன் செய்து அந்தப் பெண்ணிடம் பேசினேன். என்னை வந்து பார்க்கச் சொன்னேன்.

முதலில் ஏன்... எதற்கு என்று கேட்டு முரண்டு பிடித்தார். உங்கள் இருவரின் ஜாதகத்தை பார்த்தேன். உங்களிடம் முக்கியமாக ஒரு விஷயத்தைப் பற்றி பேச வேண்டும் என்று சொல்லி விட்டு 'இதுதான் அந்த விஷயம். என ஒன்றைக் குறிப்பிட்டேன்.

அவ்வளவுதான் "எப்பொழுது வரட்டும் ஐயா" என உடனே ஒப்புக்கொண்டாள். அந்தக் குடும்பத்தில் எப்படி அமைதி மலர்ந்தது என்பதை அடுத்த கட்டுரையில் விளக்குகிறேன்