siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

யாழ். சாவகச்சேரியில் மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்து இளம் பெண் பரிதாபமாகப் பலி

 03 ஓகஸ்ட் 2012,
மண்ணெண்ணை குக்கர் அடுப்பை பற்றவைக்க முற்பட்டபோது அது திடீரென வெடித்து சிதறியதால் எரிகாயங்களுக்கு உள்ளான இளம் பெண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளாதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள சாவகச்சேரி சிவன் கோவில் பகுதியைச் சேர்ந்த 19 வயதான எஸ்.கோபிகா என்ற இளம்பெண்ணே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பெண்ணின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

0 comments:

கருத்துரையிடுக