siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

கறுப்புப் பட்டியலிடப்பட்ட நிறுவனத்திம் இருந்து டீசல் இறக்குமதி

வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012,
இலங்கைக்கு கறுப்புப் பட்டியல் இடப்பட்ட நிறுவனமொன்றிடமிருந்து டீசல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக பெற்றோலிய வள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
வீடோல் என்னும் நிறுவனத்திடமிருந்து இவ்வாறு டீசல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக மின் உற்பத்தி நிலையங்களுக்கு தரம் குறைந்த எரிபொருளை இந்த நிறுவனமே விநியோகம் செய்துள்ளது. இதன் காரணமாக வீடோல் நிறுவனம் கறுப்புப் பட்டியலிடப்பட்டது.
பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஒருவர் குறித்த நிறுவனத்திடமிருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதியளித்துள்ளார்.
தரம் குறைந்த டீசல் இறக்குமதி செய்யப்பட்டமை குறித்து மூவர் அடங்கிய ஆணைக்குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்

0 comments:

கருத்துரையிடுக