siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 23 ஜூலை, 2012

ஜீன்ஸ் அணிந்ததற்காக சகோதரியை சுட்டுக் கொன்ற பொலிஸ் சகோதரன் _


பாகிஸ்தானில் தனது எதிர்ப்பையும் மீறி, ஜீன்ஸ்
அணிந்ததற்காக தனது சகோதரியை பொலிஸ் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்
கொன்றுள்ளார்.லாகூர் நகரில் சதாரா என்ற பகுதியைச் சேர்ந்த அசாத் அலி பொலிஸ்
உத்தியோகத்தராகக் கடமையாற்றுகின்றார். இவரது சகோதரியான நஜ்மாபிபி ஜீன்ஸ் பேன்ட்
அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதை சகோதரர் அலி கண்டித்துள்ளார்.ஆனால்
அதை நஜ்மா பொருட்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இனி ஜீன்ஸ் அணிவதை நிறுத்திக்
கொள்ளாவிட்டால் கொன்றுவிடுவேன் என சில நாட்களுக்கு முன்பு எச்சரித்துள்ளார்.
இதையடுத்து, சகோதரரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்பு
வழங்க வேண்டும் என்று சதாரா காவல் நிலையத்தில் நஜ்மா புகார் செய்துள்ளார். ஆனால்
காவல் துறையினர் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில்
வெள்ளிக்கிழமை, வீட்டை விட்டு வெளியில் சென்ற நஜ்மாவைப் பின்தொடர்ந்த அலி,
துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டார். அலியை தீவிரமாகத்
தேடி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
23.07.2012. பாகிஸ்தானில் தனது எதிர்ப்பையும் மீறி, ஜீன்ஸ்
அணிந்ததற்காக தனது சகோதரியை பொலிஸ் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்
கொன்றுள்ளார்.லாகூர் நகரில் சதாரா என்ற பகுதியைச் சேர்ந்த அசாத் அலி பொலிஸ்
உத்தியோகத்தராகக் கடமையாற்றுகின்றார். இவரது சகோதரியான நஜ்மாபிபி ஜீன்ஸ் பேன்ட்
அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதை சகோதரர் அலி கண்டித்துள்ளார்.ஆனால்
அதை நஜ்மா பொருட்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இனி ஜீன்ஸ் அணிவதை நிறுத்திக்
கொள்ளாவிட்டால் கொன்றுவிடுவேன் என சில நாட்களுக்கு முன்பு எச்சரித்துள்ளார்.
இதையடுத்து, சகோதரரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்பு
வழங்க வேண்டும் என்று சதாரா காவல் நிலையத்தில் நஜ்மா புகார் செய்துள்ளார். ஆனால்
காவல் துறையினர் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில்
வெள்ளிக்கிழமை, வீட்டை விட்டு வெளியில் சென்ற நஜ்மாவைப் பின்தொடர்ந்த அலி,
துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டார். அலியை தீவிரமாகத்
தேடி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.



0 comments:

கருத்துரையிடுக