siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 21 ஜூலை, 2012

பெண்களை இரகசியமாக படம்பிடித்த செல்வந்தர் கொலை

22.07.2012.
ஆடைக் கடை ஒன்றில் பெண்கள் துணி மாற்றுவதை சீ.சீ.டி.வி கமராவை மறைத்து வைத்து, இரகசியமாக பதிவு செய்த செல்வந்தர் ஒருவர் கம்பஹாவில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த செல்வந்தர் இரகசிய கமரா மூலம் பெண் ஒருவரை படம் பிடித்து, மிரட்டி, தம்முடன் உறவு கொள்ளவில்லை என்றால், குறித்த படங்களை வெளியிடங்களுக்கு அனுப்புவதாக குறித்த பெண்ணை அச்சுறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அந்த பெண், தமது சகோதரனிடம் விடயத்தை கூறியதை அடுத்து, ஆத்திரமடைந்த சகோதரர் மற்றுமொருவருடன் கடைக்குள் வந்து, குறித்த செல்வந்தரை கொலை செய்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரும் ஏற்கனவே பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் என்று தெரிவிக்கப்படுகிறது

0 comments:

கருத்துரையிடுக