siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

வேன்கள் திடீரென தீப்பற்றியெரிந்து நாசம்

24.08.2012.மடவளை பஸார், ரவூப் ஹக்கீம் மாவத்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு தனியார் வேன்கள் தீப்பிடித்து ஒன்று முற்றாகவும் மற்றது பகுதியளவிலும் சேதம் அடைந்துள்ளன.
முற்றாக எரிந்த வேன் இரவுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு விட்டு உரிமையாளரின் வீட்டு முற்றத்தில் இன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதிகாலைவேளை அது தீப்பற்றியுள்ளதை அவதானித்து அணைக்க முயற்சித்தபோதும் அது கைகூடவில்லை.
அதேநேரம் அதற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு வேனும் தீப்பற்றிய போதும் அயலவர்கள் உதவியால் அது அணைக்கப்பட்டுள்ளது.
தீப்பற்றியமைக்குத் தொழில்நுட்பக் கோளாறா அல்லது நாசவேலையா எனத் தெரியவில்லை.வத்துகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.