siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 17 அக்டோபர், 2012

வாலிபருடன் பேசிய 15 வயது பெண்ணுக்கு பொதுமக்கள் முன்னிலையில் 60 கசையடிகள்.




Wednesday  17  October  2012 By.Rajaj.
வாலிபருடன், தெருவில் நின்று பேசிய சிறுமிக்கு, மாலி நாட்டில், 60 சவுக்கடி தண்டனை வழங்கப்பட்டது.

மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில், உள்ள திம்புக்டு பகுதி, இஸ்லாமிய பழமைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, அன்னிய ஆண்களுடன் பெண்கள் பேசுவது குற்றமாக கருதப்படுகிறது.இப்பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, வாலிபர் ஒருவருடன், அடிக்கடி தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தார். இதை கண்ட போலீசார், அந்த பெண்ணை நான்கு முறை, எச்சரித்து அனுப்பினர்.

மீண்டும் அந்த பெண், அதே வாலிபருடன் தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்ததால், உள்ளூர் பஞ்சாயத்தில் நிறுத்தப்பட்டார். இந்த பெண்ணுக்கு, 60 சாட்டையடிகள் கொடுக்கும் படி, பஞ்சாயத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.இதையடுத்து, பொது மக்கள் முன்னிலையில் நேற்று, இந்த பெண்ணுக்கு, 60 சாட்டையடிகள் கொடுக்கப்பட்டன