siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 3 அக்டோபர், 2012

பெயரைக் கேட்டு சுட்டுக்கொன்ற



Wednesday03October2012.By.Rajah.
தீவிரவாதிகள். நைஜீரியாவின் 46 மாணவர்கள் பலி. நைஜீரியா நாட்டின் வட பகுதியில் அடமாவா மாநிலத்தில் முவி நகரில் பாலிடெக்னிக் மாணவர்கள் தங்கி இருக்கும் ஒரு விடுதிக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர், அங்கிருந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். கத்தியாலும் வெட்டினார்கள்.

இதில் 46 மாணவர்கள் பலி ஆனார்கள். மேலும் பலர் காயம் அடைந்தனர். துப்பாக்கியால் சுட்ட நபர்கள் ராணுவ உடை அணிந்து இருந்ததாகவும், ஒவ்வொரு மாணவரையும் பெயரை கூறும்படி கேட்டு அவர்கள் சுட்டதாகவும், சில மாணவர்களை விட்டு விட்டதாகவும் அந்த பாலிடெக்னிக்கின் ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார். சாவு எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்