siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

நாட்டில் செயற்கை மழையினை உருவாக்க சீனாவின்

 
ஞாயிற்றுக்கிழமை, 14 ஒக்ரோபர் 2012,By.Rajah.
   உதவியை நாடும் இலங்கை செயற்கை மழையினை இலங்கையில் உருவாக்குவது தொடர்பாக சீனாவின் உதவியை கோரியுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
செயற்கை மழையினை இலங்கையில் ஏற்படுத்துவது தொடர்பிலான தொழிநுட்பத்தை பெறுவது தொடர்பில் சீனாவுடன் பேச்சு நடத்தப்படுவதாகவும் எந்தவிதமான சவால்களையும் முறியடிப்பதற்கான தைரியம் அரசாங்கத்திடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வரட்சி என்பது எமது நாட்டு புதிய கலாசாரமல்ல. இந்த வரட்சியை கட்டுப்படுத்துவதற்கு பல தற்காலி நடவடிக்கைளை முன்னர் மேற்கொண்டிருந்தோம்.
எனினும் தற்போது வரட்சிக்கு முகங்கொடுக்க தயாரகுதல் மாத்திரமின்றி இதன் மூலம் நன்மையடையவும் உள்ளோம் என அமைச்சர் குறிப்பிட்டார். அம்பலாங்கொட, கொகல்ல கிராமிய சுகாதார நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.