siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 7 நவம்பர், 2012

வாக்களித்த மக்களுக்கு நன்றி: ஒபாமாவின் வெற்றி உரை

07.11.2012.By.Rajah{காணொளி.இணைப்பு)அமெரிக்கா ஜனாதிபதியாக பராக் ஒபாமா இரண்டாவது முறையாக தெரிவு செய்யப்பட்டார்.
நேற்று நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் ‌மிட் ரோம்னியை வீழ்த்தினார்.
ஒபாமாவுக்கு ஆதரவாக 303 வாக்குகளும், மிட் ரோம்னிக்கு ஆதரவாக 206 வாக்குகளும் பதிவாகி உள்ளன.
அமெரிக்காவில் சிறப்பான மாற்றம்
இந்நிலையில் தனது தேர்தல் கோட்டையான சிகாகோவில் ஒபாமா வெற்றி உரை ஆற்றினார்.
ஒபாமா சிறப்புரையை கேட்க இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர். அப்போது அவர் தேர்தலில் வாக்களித்த ஒவ்வொரு அமெரிக்க குடிமக்களுக்கும் தனது நன்றியை கூறும் வகையில், தன்னை இந்த உயரத்தை அடைய செய்த மக்களுக்கு என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என தெரிவித்தார்.
அமெரிக்கா சாதிக்க வேண்டியவை இன்னும் நிறைய இருப்பதாக கூறிய ஒபாமா, சிறப்பான முன்னேற்றங்கள் பலவற்றை அடைய அமெரிக்க மக்கள் காத்திருப்பதாக தெரிவித்தார்.
முன்னேற்றப் பாதையை நோக்கி நாம் அனைவரும் ஒன்றாகச் செல்வோம் என வேண்டுகோள் விடுத்தார்.
ஜனாதிபதி தேர்தலில் ரோம்னியுடனான போட்டி சவால் நிரம்பியதாக இருந்தது.
அமெரிக்காவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல ரோம்னியுடைய ஆதரவும் கிடைக்கும் என தான் நம்புவதாக தெரிவித்தார்.
குடியரசுக் கட்சியுடன் இணைந்து அமெரிக்க நிதி நெருக்கடியை சமாளிக்க திட்டங்கள் தீட்டப்படும் என்றார்
சவால்களை சமாளிப்பார் ஒபாமா பத்திரிகையாளர்களிடம் ரோம்னி கூறுகையில், மக்கள் ஒபாமாவை தலைவராக தெரிவு செய்துள்ளார்கள். அவருக்காக நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். என்னுடன் கடுமையாக உழைத்தவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அமெரிக்கா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களை ஒபாமா சமாளிப்பார் என நம்புகிறேன். அமெரிக்கா மீது கொண்ட அக்கறை காரணமாக நான் தேர்தலில் போட்டியிட்டேன். இந்த நேரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை என கூறினார்

1 comments: