siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 8 நவம்பர், 2012

சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்குமாறு முள்ளிக்குளம் மக்கள்

 
 
08.11.2012.By.Rajah...மன்னார், முள்ளிக்குளம் பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் தம்மை தமது சொந்த இடங்களில் குடியேற்றுமாறு கோரியுள்ளனர்.
இதற்காக அவர்கள், பேராயர் மல்கம் ரஞ்சித் மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரின் உதவிகளை கோரியுள்ளனர்.
2007 ஆம் ஆண்டு போரினால் வெளியேற்றப்பட்ட 212 தமிழ் கத்தோலிக்க மக்கள் தற்போது மறிச்சுக்கட்டு காட்டுப்பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
2007 ஆம் ஆண்டு முதல் தாம் உணவு உறையுள் மற்றும் வேலைவாய்ப்புகள் என்பவற்றுக்காக பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாக அந்த மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமது சொத்துக்கள் முள்ளிக்குளம் பகுதியில் உள்ளன. அங்கு சென்றால் மீண்டும் பழைய வாழ்க்கையை தம்மால் தேடிக்கொள்ள முடியும்.
எனவே தமது சொந்த இடங்களுக்கு தம்மை செல்ல அனுமதிக்குமாறு முள்ளிக்குளம் மக்கள் கோரியுள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக