இந்தோனேஷியாவின் கிழக்கு
கடற்கரையோரப் பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடலுக்கடியில் 56 கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம்
ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் கடலோர பகுதிகளில் உள்ள வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின, சேத விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. டுவால் நகரில் இருந்து 157 கிலோ மீற்றர் தொலைவில் கடலுக்கடியில் 12 கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், 6.3 ரிக்டர் அளவில் உருவாகும் என்றும் இந்தோனேசிய ஆய்வு மையம் முதற்கட்ட தகவலை வெளியிட்டிருந்தது. இருப்பினும் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று இந்தோனேசியா அறிவித்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியில் இருந்து மீண்டனர் |
புதன், 28 நவம்பர், 2012
இந்தோனேஷியாவில் கடுமையான நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கின
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக