siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 31 டிசம்பர், 2012

தமிழ் கணித மேதை ராமானுஜத்தின் கண்டுபிடிப்புக்களை 90 ஆண்டுகள்

       

கழித்து ஒப்புக்கொண்ட அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்.  உலக பிரசித்தி பெற்ற இந்திய கணித மேதையும், தமிழருமான ராமானுஜம் 1920-ம் ஆண்டு மரணப்படுக்கையில் இருந்தபோது பல கண்டுபிடிப்புகள், சூத்திரங்களை கண்டறிந்தார். இங்கிலாந்தை சேர்ந்த தனது வழிகாட்டியான கணிதமேதை ஜி.எச்.ஹார்டிக்கு எழுதிய கடிதத்தில் இதுபற்றி அவர் எழுதி இருந்தார்.

இது கணித உலகுக்கே புதிதாகவும், புதிராகவும் இருந்தது. இப்போது அமெரிக்க கணித ஆராய்ச்சியாளர்கள் ராமானுஜத்தின் கண்டுபிடிப்புகள், சூத்திரங்கள் எல்லாம் சரிதான் என ஏற்றுக்கொண்டுள்ளனர். அவரது கணித புதிர்களுக்கும் தீர்வு கண்டுபிடித்துள்ளனர்.

ராமானுஜம் இறந்து ஏறத்தாழ 100 ஆண்டு காலம் நெருங்கும் நிலையில், இப்போது அவரது கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி எமோரி பல்கலைக்கழக கணித ஆராய்ச்சியாளர் கென் ஒனோ கூறுகையில், ராமானுஜத்தின் கடைசி கடிதத்தில் கூறி இருந்த கணக்கு புதிர்களுக்கு தீர்வு கண்டிருக்கிறோம். கடந்த 90 ஆண்டுகளாக இந்த தீர்வு காணப்படாமல் இருந்தது. ராமானுஜத்தின் கண்டுபிடிப்புகள் சரியானவைதான் என்றார்.

0 comments:

கருத்துரையிடுக