siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

வெடிகுண்டு தாக்குதலில் அமைச்சர் உட்பட 9 பேர் பலி


பாகிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில், அமைச்சர் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். பாகிஸ்தானில் பேஷ்வார் மாகாணத்தின் கிஸ்ஸா குவானி பஜார் பகுதியில் பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் பேஷ்வார் மாகாண அமைச்சரும், அவாமி தேசிய கட்சியின் முன்னணி தலைவருமான பஷீர் பிலவ்ர் கலந்து கொண்டார்.
அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியதில், அமைச்சர் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர், 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 3 முறை பஷீர் பிலவ்ருக்கு தெஹ்ரீக்- இ- தலிபான் பாகிஸ்தான் இயக்கம் கொலை மிரட்டல் விடுத்திருந்ததாகவும், இந்த தாக்குதலுக்கு அந்த இயக்கம் தான் காரணமாக இருக்க வேண்டும் என்றும் தகவல் துறை அமைச்சர் இப்திகார் ஹுசைன் கூறியுள்ளார்{புகைப்படங்கள்,}.





0 comments:

கருத்துரையிடுக