siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 12 டிசம்பர், 2012

விமான நிலையத்தில் இலங்கை மாடலிங் பெண் தற்கொலை?

மாடலிங்க் தொழிலில் உள்ள இலங்கை பெண் ஒருவர் டெல்லி விமான நிலையத்தில் தற்கொலை செய்ய முயன்ற போது பாதுகாவலர்களால் காப்பாற்றப்பட்டு, பத்திரமாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இலங்கையை சேர்ந்த மாடலிங் பெண், Shamla, தனது மாடலிங் தொழில் பணி காரணமாக சென்ற வாரம் புதுடில்லிக்கு வந்திருந்தார். பின்னர் அவர் தன்னுடைய நாட்டிற்கு திரும்பி செல்வதற்காக டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். ஆனால் அவர் போக வேண்டிய விமானம் ஏற்கனவே கிளம்பிவிட்டது. இதனால் மனவேதனை அடைந்த அந்த பெண், விமானநிலைய வளாகத்திலேயே இரண்டு நாட்கள் சாப்பிடாமல், தூங்காமல் யாருடனும் பேசாமல் உட்கார்ந்திருந்தார்.
இவருடைய நிலைய கவனித்த விமான நிலைய பாதுகாவலர்கள் தங்களது உயரதிகார்களுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் இவர் ரகசியமாக கண்காணிக்கப்பட்டார். ஒருசமயத்தில் திடீரென விமான நிலைய மேல் வளாகத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது அங்கு மறைந்திருந்த பாதுகாவலர்களால் காப்பாற்றப்பட்டார். பின்னர் அவரிடம் விசாரணை செய்யப்பட்டது. விசாரணையில் அவர் எதுவுமே பேசவில்லை. அமைதியாகவே இருந்தார். அவருக்கு மனநல மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.
பின்னர்தான் அவர் தான் செல்ல வேண்டிய விமானத்தை தவறவிட்டதால், மன அழுத்தம் அடைந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர் பத்திரமாக வேறொரு விமானத்தில் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்

0 comments:

கருத்துரையிடுக