siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 2 ஜனவரி, 2013

புத்தாண்டில் நிகழ்ந்த சந்தோஷமும், துக்கமும்


டொரண்டோ நகரில் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை பிறந்துள்ளது, இதனை அனைவரும் உற்சாகமாக கொண்டாடுகின்றனர். டொரண்டோ நகரில் உள்ள Michael’s மருத்துவமனையில் Casey Laforet மற்றும் Jane Maggs என்ற தம்பதிகளுக்கு பிறந்த ஒரு ஆண்குழந்தை மிகச்சரியாக புத்தாண்டு தினத்தில் நள்ளிரவு 12 மணிக்கு பிறந்துள்ளது.
இதன் எடை 7 பவுண்டுகளும் 4 அவுன்ஸ்களும் ஆகும். டொரண்டோ நகரில் இந்த ஆண்டின் முதல் குழந்தையாக கருதப்படும் இந்த ஆண் குழந்தையை பெற்றோர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கொஞ்சி மகிழ்ந்தனர்.
இந்த சந்தோஷத்திற்கு மத்தியில் சோகமான நிகழ்வும் நடந்துள்ளது. அதாவது, மது அருந்தி விட்டு வந்த இருவர் தெருவில் ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையிட்டு கொண்டனர்
அப்போது ஒருவர், மற்றவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். உடனே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த நபரை மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனில்லாமல் இறந்து போனார். இதுவே புத்தாண்டில் நிகழ்ந்த முதல் கொலையாக கருதப்படுகிறது[புகைப்படங்கள், ]
 .
 

0 comments:

கருத்துரையிடுக