siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

உடனடியாக இடம்மாற்றம் செய்யும் பணிகள்!

முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்குச் சார்பாகச் செயற்பட்ட நீதிதுறையைச் சார்ந்தோர் மற்றும் உயர்நீதிமன்ற அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். இந்த இடமாற்றம் விரைவில் இடம்பெறவுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இதன் முதற்கட்டமாக முன்னாள் பிரதம நீதியரசருக்கு நெருக்கமாக இருந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களை உடனடியாக இடம்மாற்றம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் நீதிச் சேவை ஆணைக்குழுவின் உயர்மட்ட அதிகாரிகள் தரத்தைச் சேர்ந்தவர்களும் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்படவுள்ளனர். சிராணி பண்டாரநாயக்கா பிரதம நீதியரசாகவிருந்த இறுதிக் காலத்தில் அவரால் இடமாற்றம் செய்யப்பட்ட 21 நீதிபதிகளின் இடமாற்ற உத்தரவினை மொஹான் பீரிஸ் புதிய பிரதம நீதியரசாகப் பதவியேற்றவுடன் ரத்துச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

0 comments:

கருத்துரையிடுக