siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 22 மார்ச், 2013

பேரவையில் இலங்கைக்கு எதிரான,,,,,,,

 அமெரிக்கப் பிரேரணை நிறைவேற்றம்! இந்தியா உள்ளிட்ட 25 நாடுகள் ஆதரவு
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட பிரேரணை 12 மேலதிக
அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது.
இதேவேளை ஜேர்மன், அயர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட 25 நாடுகள் ஆதரவு வழங்கியுள்ளன.
இதேவேளை தீர்மானத்திற்கு எதிராக 13 நாடுகள் வாக்களித்துள்ளன. மேலும் ஜப்பான் மலேசியா உள்ளிட்ட 8 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்குபற்றவில்லை.

இதன்படி 12 மேலதிக வாக்குகளினால் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

25 வாக்குகளைப் பெற்று அமெரிக்க தீர்மானம் நிறைவேறியது. முன்னதாக அமெரிக்க தீர்மானம் குறித்து பேசிய இலங்கை தூதர், அமெரிக்க தீர்மானம் எற்றுக்கொள்ள முடியாதது என்று கூறியுள்ளார்.
ஒஸ்ரியா, ஜேர்மனி, இத்தாலி, அயர்லாந்து, ஸ்பெய்ன், மொன்ரெனிக்ரோ, சுவிற்சர்லாந்து, அமெரிக்கா, பிறேசில், தென்கொரியா, சியராலியோன், இந்தியா, பெனின், கோஸ்டாரிக்கா, லிபியா, ஆர்ஜென்ரீனா, சிலி, ஐவரிகோஸ்ட், கௌதமாலா, பெரு, செக் குடியரசு ,எஸ்தோனியா, போலந்து, மோல்டோவா, ருமேனியா ஆகிய நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.

 வெனிசுலா, தாய்லாந்து, பாகிஸ்தான், இந்தோனேசியா, ஈக்வடோர், ஐக்கிய அரசு எமிரேட்ஸ், கட்டார், மாலைதீவு, குவைத், உகண்டா, மொரிட்டானியா, கொங்கோ, பிலிப்பைன்ஸ் ஆகிய 13 நாடுகள் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன.

 அங்கோலா, பொட்ஸ்வானா, புர்கினா பாசோ, கென்யா, எதியோப்பியா, மலேசியா, கசாக்ஸ்தான், ஜப்பான் ஆகிய நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன.

0 comments:

கருத்துரையிடுக